ullal

Thursday, July 27, 2006

தமிழ் உணர்வும் ஆபாச சினிமாக்களுக்கு வரி விலக்கும்

தமிழக முதல்வர் தமிழ் பெயர் வைத்த சினிமாக்களுக்கு வரி விலக்குஅளித்திருக்கிறார். இதன் மூலம் இவர்களுக்காக தேர்தலில் கூட்டம் கூட்டிய சினிமாக்காரர்களுக்கு தமிழ் உணர்வு முலாம் பூசிய பரிசு அளித்திருக்கிறார்.

இந்த வரி விலக்கின் விளைவு என்னவென்றால்,

1. தமிழில் பெயர் வைத்து படத்தில் சந்தமிழில் (சன் டிவி பெண்கள் டாக் பண்ணும் தமிழ்) வசனம் இருக்கலாம்.

2. 'டேக் இட் ஈசி பாலிசி' போன்ற பாட்டுக்கள் இருக்கலாம்.ஆனால் படத்தின் பெயர் மட்டும் தமிழில் இருக்க வேண்டும்.

3. தூய தமிழில் இம்சை அரசன் போல 'பொத்திக்கொண்டு போங்கள்'என்று தலைப்பு வைத்தாலும் வரி விலக்கு கிடைக்கும்.

இந்த வரி விலக்கு மூலம் தமிழ் வளர்கிறதோ இல்லையோ, சினிமா உலக காக்கா கூட்டத்திற்கு கொண்டாட்டம் தான். இத்துடன் சூட்டிங்க் எடுப்பதற்காக தமிழக அரசுக்கு கொடுக்கும் வாடகையும் குறைத்திருக்கிறார்கள். இதுதான் இன்றைக்கு தமிழ்நாட்டுக்கு மிக முக்கியமான விசயம்.இதனால் அரசு எத்தனை கோடி இழக்கும் என்ற விபரம் இல்லை.விபரம் இருந்தால் இந்த பணத்தில் எத்தனை பள்ளிகள் கட்டலாம் என்று சொல்ல முடியும்.

அப்படி தமிழ் சினிமாக்கள் ஏதாவது சமூக நீதி கருத்துக்களை பரப்புகிறதா?சமூகத்திற்கு நல்ல செய்தி ஏதாவது தருகிறார்களா? அத்தனையும் ஹாலில் குழந்தைகளோடு பார்க்க முடியாத ஆபாசப் படங்கள்.

பா.ம.க. தமிழ் படங்களுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டுமென்று போராட்டம்நடத்தியது. இவர்கள் சினிமா நடிகர்களையும் எதிர்த்தார்கள். ஆனால் சிலதயாரிப்பாளர்களை மட்டும் ஆதரித்தார்கள்.

சாதாரண மக்கள் கஷ்டப்பட்டு உழைத்த காசை சினிமா தியேட்டரில் கொட்டுகிறார்கள்.இதில் பெரும் பகுதி சூப்பர் நடிகர்களின் வங்கி கணக்கைதான் நிறைக்கிறது. சினிமாதொழிலாளர்களுக்குக் கூட பெரிய நன்மை இல்லை.

இவர்களுடைய பட்ஜட்டை பார்த்தாலே தமிழக அரசியல் பார்முலா தெளிவாகிறது.

2 ரூ அரிசி + பண்ணயார்களுக்கு விவசாயக் கடன் ரத்து + சினிமா காக்காய்களுக்கு வரிவிலக்கு + கலர் டிவி + கட்சிக்காரர்களுக்கு கமிஷன் + அரசு ஊழியர்களுக்கு சம்பள படி + வாட் வரி + ஏதோ கொஞ்சம் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் = ஸ்டாலின் முதல்வர்

Monday, July 24, 2006

கோயில்கள் ப்ரைவேட் ப்ராபர்டியா?

கோவில்கள் ப்ரைவேட் ப்ராபர்டி என்பவர்கள் இந்த பக்கங்களைபடிக்க வேண்டும்.

http://www.nmu.edu/www-sam/Poli_Sci/profpages/Syed/PS101/Marxist_Theory_State_Evolution.htm

சோழர்களின் நில உடமை அரசு
http://www.tamilnation.org/heritage/cholarule.htm

வரி வசூலிப்பில் கோவில்களின் பங்குவரி வசூலிப்பவர்களை விவசாயிகள் எதிர்க்காமல் இருப்பதற்காகவே கோவில்களுக்கு நிலங்கள் கொடுத்து அதன் மூலம் கோவிலுக்காக என்ற பேரில் வரி வசூலிக்கப்பட்டது.கோவில் வருமானத்தில் ஒரு பகுதி அரசனுக்கு கொடுக்கப்பட வேண்டியது.ஆக கோவில்கள் ஒரு வரி வசூல் இயந்திரமாக அமைக்கப்பட்டது.மீதி இங்கே.....
http://www.hindubooks.org/sudheer_birodkar/hindu_history/landfeudal.html

Sunday, July 23, 2006

தமிழக பட்ஜட்

விவசாயத்துறைக்கு 957 கோடி
காவல் துறை நவீனப்படுத்தல் 68 கோடி
தீயணப்பு துறைக்கு 23 கோடி
நீதித்துறை 212 கோடி
Education for all 180 கோடி
மெடிகல் கேம்ப் 11 கோடி
மருத்துவமனை கருவிகள் 70
மருந்து வாங்க 174
primary health center 17
மருத்துவ கட்டடம் etc 35
ரோடு 804 கோடி
ரோடு பாலம் 2461 கோடி
மின்சார வாரியத்திற்கு 195 கோடி
போக்குவரத்து 100 கோடி
குடிநீர் 411 கோடி
அண்ணா மறுமலர்ச்சி 500 கோடி
பெண்கள் 100 கோட
ிதிருமண உதவி 50 கோடி
கைவிடப்பட்டவர்கள்.. 407
சத்துணவு 955
சுய உதவி கு 10 கோடி
ஆதிதிராவிடர் 85
பிற்படுத்தப்பட்டவர்கள் 319 கோடி
இலங்கை தமிழர் 34 கோடி
JNU stadium 2.5 கோடி
அரசு ஊழியர் arrears 290 கோடி

இலவசம்
-----------
இலவச அரிசி - 1950 கோடி
கலர் டிவிi 750 கோடி
இலவச மின்சாரம் 1530 கோடி
6866 கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்ததற்காக வங்கிக்கு கொடுக்க போகும் 435 கோடிதொடர்ந்து கடன் கொடுக்க வசதியாக மேலும் 1000 கோடி
நெசவாளார்களுக்கு இலவச மின்சாரம் - 40 கோடி
வேலையில்லாத படித்தவர்களுக்கு 110 கோடி
பொங்கல் பரிசு 250 கோடி

கடன் /மானியம் வாங்கி செய்யும் ் திட்டங்கள்
-------------------------------------------
உலக வங்கியிடம் கடன் வாங்கி 3900 கோடி விவசாயம் நவீனப்படுத்தல்,நீர்பாசன மேம்பாடு
வெள்ள தடுப்பு மத்திய அரசு மானியம் பெற்று 279 கோடி அனைவருக்கும் கல்வி மத்திய அரசு மானியம் பெற்று 723 கோடி மத்திய அரசு மானியம் பெற்று குடிசை மாற்று 250


திரைப்பட துறை ஸ்பெஷல்-
--------------------------
தமிழில் பெயர் வைத்தால் மொத்தமாக வரி விலக்கு (இது சரியா ?)ஷூட்டிங் வாடகை குறைப்பு பெரியார் படத்துக்கு 95 லட்சம்அம்பேத்கர் படத்ஹுக்கு 10 லட்சம்

கடன் சுமை
------------
The debt liability of the Government as on 31.3.2001 was Rs.28,685 croresthis Government has inherited a huge debt liability of Rs.56,094 crores. To take care of the interest commitment for this huge debt stock, the Government will have to earmark resources to the tune of Rs.446 crores every month.
சென்ற முறை கருணாநிதி அரசாங்கம் விட்டு சென்ற கடன் சுமை 28,685 கோடிஜெயலலிதா ஏற்றிய கடன் சுமை 27409 கோடி (இதை எப்பொழுது கட்டப்போகிறார்கள்)

Big Picture
------------
http://www.tn.gov.in/budget/budsph2006-07-5.htm
இந்த பட்ஜட்டின் பற்றாக்குறை 1129 கோடி
மொத்த வருவாய் 32653 கோடிஇதில் அரசு ஊழியர் சம்பளம் பென்ஷன் - 16000 கோடி இலவசம் மானியம் - 9656 கோடி
மீதம் உள்ள 7000 கோடிதான் இதர செலவுகள்.
இந்த 7000 கோடி திட்டங்களுக்காக 16000 கோடி சம்பளத்தில் அரசு ஊழியர்கள்வேலை செய்கிறார்கள்.
இந்த 7000 கோடியிலும் ஊழல் போக ஒரு ஐம்பதுசதவிகிதம் திட்டங்களுக்கு கிடைக்கலாம். அரசாங்கமே தேவையா?
கேள்விகள
்-----------
பட்ஜட் ஏன் தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் இருக்கிறது?
வருவாய்க்கு break up காணவில்லை. VAT இல் எவ்வளவு, Tasmac இல்எவ்வளவு என்று பார்க்க முடியவில்லை. மத்திய அரசிலிருந்து வரி பங்காக வெறும்9000 கோடிதான் வருகிறது.

Saturday, July 22, 2006

புஷ் ் மசாஜ் - ஜான் ச்டூவர்ட்

பொதுவாக ஜோக் எழுதுபவர்களுக்கு ஜார்ஜ் புஷ்தொடர்ந்து அவல் சப்ளை பண்ணுவார்.இது 'டெய்லி ஷோ'வில் ஜான் ஸ்டூவர்ட் புஷ்ஷைஓட்டியது

http://www.youtube.com/watch?v=0comA0Ue2Ug

Friday, July 21, 2006

சோ, குருமூர்த்தியின் உளறல்வாதம்

இந்த பதிவை படிக்கு முன்பு முன்பு இட்லி வடையின் இந்த பதிவை (http://idlyvadai.blogspot.com/2006/07/blog-post_21.html)படிக்க வேண்டும்.
முதலில் இஸ்ரேல் என்ற குட்டி நாடு தைரியமாக நடவடிக்கை எடுத்தது போல இந்தியா என்ற மிகப் பெரிய நாடு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்கிறார்(கள்). இஸ்ரேல் என்பது பூகோளரீதியாக குட்டிநாடு. ஆனால் இதற்கு பின்னால் நிற்கும் 80 பவுண்ட்கொரில்லா வாக நிற்கும் அமெரிக்கா சோ, குருமூர்த்திகளின் கண்ணிற்குஏன் தெரியவில்லை? இஸ்ரேல் லெபனானை தரை மடமாக்கினாலும்அமெரிக்கா "எங்கே நான் பாக்கலையே" என்று கண்ணை மூடிக்கொண்டுவிடும்.அப்படியே UN இல் யாராவது இஸ்ரேலை கண்டித்தால், கண்டனத்தையும் வீட்டோசெய்து விடும்.

இந்தியாவிற்கு இப்படி பின்னாலிருந்து சப்போர்ட் செய்ய எத்தனை நாடுகள் இருக்கிறது?பாஜக ஆட்சியில் அணு ஆயுதப் போரின் எல்லை வரை கொண்டு சென்றது.இஸ்ரேல்(அமெரிக்கா) - லெபனானுக்கு இடையே உள்ள ராணுவ பல இடைவெளியும்,இந்தியா- பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள இடைவெளியும் ஒன்றானதா?

அடுத்தது 'draconian law'. ஒரு பயங்கரமான சட்டத்தைப் போட்டு இந்த போரை அடக்குவதாம். கோர்ட்டுக்கு போக முடியாமல் வருடக் கணக்கில் ஜெயிலில் போடும் சட்டங்கள் ஜெயலலிதா போன்ற ஆட்களிடம் கிடைத்தால் என்ன நடக்கும் என்றூ நம் எல்லோரையும் விட குருமூர்த்திஅண்ணாவிற்கு நிச்சயம் அவர் பட்ட அனுபவத்திலாவது தெரிந்திருக்க வேண்டும். சாமியார் மடத்திலிருந்த அனைவரையும் குண்டாஸில் போட்டதற்காக மனித உரிமை பறிபோய்விட்டது என்று பக்கம் பக்கமாககண்ணீர் விட்டார்கள். இதே சட்டத்தை சாதாரண ஆட்களின் மீது தனிவிரோதத்துக்காக பயன்படுத்தினால் பத்திரிகையில் யாரும் கண்ணீர் விட மாட்டார்கள். இதனால் அப்பாவிகளின் மீது அடக்குமுறைதான் அதிகரிக்கும். இதை எழுதினதில் ஒன்று lawyer வேறு.

Tuesday, July 18, 2006

உயர்வு தாழ்வுஎங்கே வந்தது?- தினமலர்

வேதம், சாஸ்திரம் போன்றவற்றில் வல்லுநிரான சேசாத்திரிநாத சாஸ்திரிகள் :நாற்பத்தியொரு நாட்கள் விரதம் இருந்துசபரிமலை யாத்திரை மேற்கொள்ள வேண்டும். மாதவிடாய் காலத்தில் உடல் உபாதையால் மன ஒருமையோடு இறைவனை சிந்திக்க கடியாது. இந்த நலையில் விரதக்குறையோடு அய்யப்பனை பெண்கள் தரிசிக்கக்கூடாது என்பது அந்த கோவிலின் நயதி.

சாதாரணமாக ஓர் இடத்துக்கு சென்றால் அங்கே உள்ள நியதி யை கடைப்பிடிப்பது தானே நியாயமாக இருக்கும்? பணிபுரியும் இடத்தில் இன்ன சீருடை என்றால் அதைக் கடைப் பிடிக்கிறோம். "நான் தானே வேலை பார்க்கிறேன், சீருடையா வேலை பார்க்கிறது' என்று கேட்க முடியுமா? அந்த வேலைக்குப் போவதை வேண்டுமானால் தவிர்க்கலாம். இங்கே மட்டும் கேள்வி ஏன்?

பெண்களை மிகவும் உயர்வான இடத்தில் வைப்பது பாரத கலாசாரம். தாய்நாடு இது. உயிர் கொடுக்கும் நிதிகள் பெண்கள். "மாத்ரு தேவோ பவ' என்று பெண்ணை முதலில் வணங்கும் கண்ணியம் கொண்டவர்கள் நாம். அம்பாள் புராணத் தில் அசுரர்களை அழிக்கப் புறப்படும் அம்பாளின் படையில் அனைவரும் பெண்கள். "எங்களைக் காப்பாற்று' என்று அவள் காலில் விழுந்தவர்கள் ஆண்கள். உயர்வு & தாழ்வு எங்கே வந்தது?
இருட்டினால் பெண் தனியே போகக் கூடாது; ஓர் ஆண் துணையோடு போக வேண்டும் என்றால், அவன் உளவாளி என்று அல்ல... மெய்க்காப் பாளன் என்கிற கோணத்தில் பார்க்க வேண்டும்.

நம் அன்றாட வாழ்வில் அற்ப காரியங்களிலேயே ஏராளமான பாகுபாடுகளை வைத்திருக்கிறோம். இஞ்சினியர் ஊசி போட்டால் அவரை சும்மா விட மாட்டோ ம். வக்கீல் பாலம் கட்ட கடியாது. இப்படி பாகுபாடு இருக்கிறது. இதில் உயர்வு தாழ்வு எங்கே வந்தது?
என்ன லாஜிக்கு? என்ன லாஜிக்கு?

கோவில்களில் கருவறை, முதல் பிரகாரம், இரண்டாம், உன்றாம் பிரகாரம் என்றெல் லாம் உண்டு. யார் எந்த காலத்தில் "எங்கே இருந்து" சுவாமியைப் பார்க்கலாம் என்றெல்லாம் விதித்து வைத்திருக்கின்றனர். அப்படி ஒன்று தான் சபரிமலை கோவிலுக்குப் பெண்கள் வரக் கூடாது என்பதும்.
பூனைக்குட்டி வெளியில் வந்துட்டது.

பெண்கள் வழிபட எத்தனை யோ கோவில்கள் இருக்கின்றன. ஏன், கேரளத்தில் பல கோவில்
களில் பூஜை செய்பவர்களாக பெண்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு இந்தக் காரியத்தை செய்ய அசாதாரணமான தகுதி இருப்பதாக அந்தக்கோவில்கள் நனைக்கின்றன. அங்கே போய், சமத்துவம் பேசி "ஆணை அர்ச்சகராக்கு' என்று சொல்வது புத்திசாலித்தனமா?

Saturday, July 15, 2006

கடவுள்கள் சந்திப்பு

வலைப்பதிவர்களைப் போல இராமர் , ஐயப்பன், முருகன், பெருமாள்,நடராஜர் கேரளாவில் மீட் செய்தார்கள்.

பெருமாள் - என்னப்பா, ஐய்யப்பா திடீர்னு மீட்டிங் கூப்பிட்டுட்டே.

ஐயப்பன் - இந்த வலைப்பதிவர்களெல்லாம் மீட்டிங் போட்டு நலலாஉட்லேண்ட்ஸ்லெ மூக்கு பிடிக்க பகாளாபத் தின்னுட்டு அத பத்தி பதிவு எழுதறாங்க. அதனால நாமும் மீட் பண்ணலான்னு .

நடராஜர் - பிரமாதம். என்ன மெனு ?

ஐயப்பன் - பொரிகடலை, பஞ்சாமிர்தம்.

முருகன் கொஞ்சம் பஞ்சாமிர்தம் டேஸ்ட் செய்கிறார்.

முருகன் - என்னப்பா இது கேரளாவில இப்படி செய்றாங்க.பேசாம எங்க ஊர்ல மீட்டிங் போட்டிருக்கலாம்.

நடராஜர் - அதான் இப்ப பழனில மலையாளிங்க கூட்டம் போலருக்கு.கேரளாக்காரகளுக்கு பஞ்சாமிர்தம் செய்ய தெரியல.

பெருமாள் - இந்தாங்க. எங்க ஊர் லட்டு கொண்டு வந்திருக்கேன்

நடராஜர் - என்ன ராமர,் புதுசா எதோ அங்கி போட்டிருககீங்க

ராமர் - இது புல்லட் ப்ரூப் வெஸ்ட்டுப்பா. எனக்கு Z பிரிவுசெக்யூரிட்டி தெரியுமோ? இப்ப புல்லட் ப்ரூப் அறை கட்டப்போறாங்க.அதுக்கப்புறம் சிறை வெச்சிடுவாங்க. மீட்டிங் வர முடியாது.

முருகன் - அவ்வளவு பயமா? ஏன் , உங்க அஸ்திரம் எல்லாம் என்ன ஆச்சு?

ராமர் - அதெல்லாம் outdated ஆயிடுச்சு. புடுசா எதோ பேற்றியட்,ச்கட்டுன்னு ஏதேதோ சொல்றாங்க. ஒன்னும் புரியல.

ஐயப்பன் - நீங்களாவது இடன் டா ்நெஷனல் தீவீரவாதிக்கு பயப்படுறீங்க. என் நிலைமையைப் பாரு . பொண்ணுங்கள பாத்து பயந்து நடுங்க வேண்டிஇருக்கு. இந்த சினிமா நடிகைகளோட தொந்தரவு தாங்க முடியல.திடீர்னு தொட்டுட்டு பொயிடறாங்க.

ராமர் ் - சரி. கொஞ்சம் தள்ளி உக்காரு.

பெருமாள்- இப்ப எல்லா சாதிக்காரகளும் அர்ச்சகர் ஆகலாம்னு சொல்றாங்க.தீட்டு பிரச்சினை பெரிய பிரச்சினையாயிடுச்சு.

முருகன்் - ஆ......மாம். உங்க காஞ்சிபுர branch லே கொலையே் பண்ணாங்க. அப்ப தீட்டு ஆகலையா?

பெருமாள் - பிராமண ரத்தம் தீட்டு இல்லை.

ராமர் - நம்ம க்ரூப்ல முருகர் மட்டும்தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கார்,

முருகர் - அட , நீங்க வேறே நமக்கு சிலை வெக்கறாங்க , எடுக்கறாங்க.ஒரே தொல்லையா போச்சு. புதுசா மண்டபம் கட்டியிருக்காங்க தெரியுமா?

நடராஜர் - கேள்விப்பட்டேன். ஜெயலைதாவின் அம்மா பேர் . வெச்சாங்களாமே.முன்னாள் நடிகை பேர்ல மண்டபம், பாவம் தமிழ்நாடு,

முருகர் - நீங்களும் தாமிழ்நாட்டிலதானே இருக்கீங்க. எதோ தமிழ் பாட்டு கேக்க மாட்டீங்கன்னு சொல்றாங்க. எனக்கு தினமும் தேவாராம் பாடறாங்க.

நடராஜர்- ஆமாப்பா. பக்தர்கள் பாடணும்னு ஆசைப்படராங்க. எனக்கும்கேக்க ஆசைதான். இந்த பூசாரிகள் நடுவுல தகறாறு பண்ணறாங்க.எல்லாம் இந்த ராமரால வந்தது. இவரு தென்னாட்டுக்கு வந்தாலும் வந்தாரு தமிழே கெக்க முடியல. தமிழ் பாட்டுக்குதான் டேன்ஸஆடி பழக்கம்.
நடனம் ஆ.........டினார்,னு. (ஆடி காண்பிக்கிறார்)

பாம்பு தலையை ஆட்டி ஆமோதிக்கறது.

முருகர் - நல்லா சொன்னீங்க. நான் பாட்டுக்கு வள்ளியோட நிம்மதியாஇருந்தேன். இவங்க வந்து தேவயானைன்னு ஒரு போண்ணை கட்டி வெச்சு, ரெண்டு வீட்டுக்கும் இடையே மாட்டிக்கிட்டேன்.

நடராஜர் - உங்க கஷ்டம் எனக்கு நல்லா புரியுது.

ராமர் - தமிழ் பாட்டு கேட்டு என்ன பண்ணப் போறீங்க?. இந்தி தெரியாம வேலை கெடைக்காது. சம்ச்க்ருதம் தெரியாம சோறுகெடைக்காது.

முருகன் - உங்க ஊர்ல வேலை கொட்டி கெடக்குதா?

ராமர் - எங்க ஊராளு உங்க ஊருக்கு வந்தா அவர்களுக்காக சம்ஸ்கிருதத்துல பூசை செய்யறதா சட்டசபையிலயே சொல்லியிருக்காங்க.

நடராஜர்- அவங்களுக்கு புரிஞ்சா? எனக்கு புரிய வேணாமா?எங்க ஊர் ஆளு உங்க ஊருக்கு வந்தா தமிழ்லயா பூசை பண்ணறீீங்க.?

பெருமாள் - சரி , விடுங்கப்பா . சண்டை போடாதீங்க.இன்னும் கொஞ்ச நாள்ல அமெரிக்க ஆதிக்கம் ஆயிடும். அப்புறம்எல்லாம் இங்க்லீஷ்தான்.

முருகரின் செல்போன் அடிக்கிறது.

முருகர் - வள்ளி, இதோ வந்துட்டே இருக்கேன். சத்தியமா,சபரிமலை மீட்டிங்க்லதான் இருக்கேன்.

நடராஜர்- இதுக்குதான் நான் செல்போனே வெச்சுக்கறதில்லை.

ஐயப்பன் ் - இந்த தொல்லைக்குதான் நான் கல்யாணமே பண்ணிக்கறதில்லைன்னுமுடிவு பண்ணிட்டேன்.

முருகர் - உங்கள பத்தி ஊருக்குள்ள ஒரு மாதிரியா பேசறாங்க.

ஐயப்பன் - இந்த உள்குத்துதான வேண்டாங்கறது.

முருகர் - சரிப்பா, நான் கெளம்பறேன்.

பெருமாள் எல்லாருக்கும் ஒரு வைரக் கிரீடம் பரிசளிக்கிறார்.
மீட்டிங் முடிந்தது.

Friday, July 14, 2006

ட் ரூ வேல்யு ஹோம்ஸ்

இது ஒரு பர்சனல் பதிவு. ட் ரூ வேல்யூஹோம்ஸ் - இந்த பில்டருடன் டீல் செய்தவர்கள்வலையில் இருந்தால் பின்னூட்டமிடுங்கள்.. ஒரு referenceக்காக கேட்கிறேன்,

Wednesday, July 12, 2006

அசுத்தமானவளா பெண்?

கேள்வி 1: பெண்கள் நுழையக் கூடாதவை என்று சில கோயில்கள் இப்போதும் இருப்பது சரிதானா?
இதைச் சரியென்று ஏற்றுக்கொண்டால், சாதி அடிப்படையில் சிலர் நுழையக் கூடாத கோயில்-கள் என்று இருப்பதும் சரியென்றாகிவிடும். ஒன்றை நீக்கிய பிறகு இன்னொன்றையும் நீக்குவதுதான் நியாயமானது. மாற்றாமல் வைத்திருப்பது, பெண்களை இழிவானவர்களாக மத அமைப்புகள் கருதுகின்றன என்று ஒப்புதல் வாக்குமூலம் தருவதற்குச் சமமாகும்.
பழைய நம்பிக்கை என்பதால், ஒன்றைக் காலங்காலமாக நீடிக்க அனுமதிப்பது சரியல்ல. ஒரு காலத்தில் நரபலிகூட மத நம்பிக்கைதான். இன்று அதை ஏற்பதில்லை அல்லவா? எனவே, எந்த நம்பிக்கையும் இன்னொரு உயிருக்கு வலியோ, தீங்கோ, இழிவோ தராத வரையில் மட்டுமே அதை அனுமதிக்க முடியும்.

கேள்வி 2: பெண்கள் உடற்கூறு அடிப்படையில் ஆண்களிலிருந்து வித்தியாசப்படுவதால், அவர்களை மாதவிலக்குக் காலங்களில் புனிதமான இடங்களிலிருந்து விலக்கிவைப்பது நியாய மானது என்ற வாதம் சரியா?
சரியல்ல. விவசாயத்தை மனிதர்கள் கண்டுபிடித்து மேற்கொண்ட ஆரம்ப காலம் வரை, சமூக அமைப்பும் குடும்ப அமைப்பும் பெண்ணை முன்னிறுத்தியே, பெண்ணின் தலைமையிலேயே இருந்து வந்தன என்பது வரலாற்று உண்மை. அந்தச் சமூகத்தில் பெண் தெய்வங்கள் முதன்மையாக இருந்த வரையில், பெண் அசுத்தமானவளாகவோ, விலக்கி வைக்கப்படவேண்டியவளாகவோ கருதப்படவில்லை. தனி உடைமைச் சமுதாயம் வளர்ந்து, ஆண் கைக்கு அதிகாரம் மாறிய பின்னரே இந்த மாற்றம் ஏற்பட்டது. எனவே, மறுபடியும் ஆண்&பெண் சமத்துவத்துக்காகப் போராடும் 21&ம் நூற்றாண்டில், பழைய ஆணாதிக்க விதிகளின்படி பெண்ணை அசுத்தமானவளாகப் பார்க்கும் அணுகுமுறையே இழிவானது; தவறானது.

கேள்வி 3: இந்தப் பிரச்னைகளில் அரசாங்கம் தலையிட வேண்டுமா? அல்லது, மத அமைப்புகளே தீர்த்துக் கொள்ளட்டும் என்று ஒதுங்கிவிட வேண்டுமா?
நிச்சயம் அரசாங்கம் தலையிடத்தான் வேண்டும். ஏனென்றால், இது மனித சமத்துவம், மனித உரிமை தொடர்பான பிரச்னை. ஆனால், நமது அரசாங்கங்கள் மதவாதிகளின் தவறுகளுக்கு எதிராகத் தலையிடுவது இல்லை. அவற்றுக்கு ஆதரவாகத் தலையிடுவதே வழக்கம். அண்மையில், இமயமலையில் இருக்கும் அமர்நாத் பனி லிங்கம் தொடர்பான சர்ச்சை இதற்கு ஓர் எடுத்துக்காட்டு

மீதி ஞானியின் கட்டுரை இங்கே
http://www.keetru.com/dheemtharikida/index.html

Saturday, July 08, 2006

சபரிமலை -பெண்களுக்கு எதிரான தீண்டாமை

சபரிமலையில் ஒரு பெண் சிலையை தீண்டிவிட்டார்என்று பெரிய பிரச்சினையாக்கப்படிடிருக்கிறது.இதில் ஆளும் இடது சாரி கட்சி ஆத்திகர்களுக்கும்,பெண் விடுதலை சிந்தனைகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டுமுழிக்கிறது. CPI யை சேர்ந்த அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கப்சிப்பாகி விட்டது.
அரசியல் சாராத பெண்கள் அமைப்புகள் '21 ஆம்நூற்றாண்டில் ஒரு பெண் சிலை தொட்டது பாவமா? என்றூஇந்த திண்டாமையை எதிர்த்து கடும் கண்டனம் செய்கிறார்கள்.நாமும் செய்வோம்.

"The debate must be on what is wrong in touching or women entering Sabarimala?" said Parvathy, journalist.
"It is the question of our dignity as I feel that menstruation is our capacity or ability to create life. It's an ability for creation. Then how can it be pollution or polluting agent?" questioned C S Chandrika, writer.


-நன்றிhttp://www.ndtv.com/morenews/showmorestory.asp?category=National&slug=Jayamala+issue+betrays+Left+hypocrisy&id=89618

Friday, July 07, 2006

அன்புமணி,வேணுகோபால் ....

என்னுடைய இரண்டு சென் ட்.இந்த பிரச்சினையில் எழும் மூன்று கேள்விகள்.

அரசாங்க உதவி பெறும் autonomous நிறுவனங்களில் அமைச்சகம் தலையிடலாமா ?

autonomous நிறுவனங்களில் நடக்கும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு யார் பொறுப்பு?நிர்வாகம் சரியாக செயல்படாமல் பொதுமக்கள் அவதிப்படும்பொழுது என்ன செய்ய வேண்டும்?

இதில் மீடியாவின் பங்கு எப்படி இருக்க வேண்டும்?


autonomous நிறுவனங்களில் அரசாங்கம் நேரடியாக தலையிடக்கூடாது என்பதை நானும் ஏற்கிறேன். மேல்நாடுகளிலும் அரசாங்க தலியீடு இல்லாமல்தான்அரசாங்க ஏஜன்சிகள் செயல்படுகின்றன. ஆனால் இந்த நிறுவனங்களில்ஒரு சிறு தவறு நேர்ந்தாலும் மீடியாவும் மக்களும் போட்டு புரட்டி எடுப்பார்கள்.


இரண்டு உதாரணங்கள் கொடுக்கிறேன். கேட் ரினா புயல் அடித்தபொழுதுfema சரியாக செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு கிளம்பியது. மீடியாவில் பக்கம் பக்கமாக எழுதி தள்ளினார்கள். முடிவில் femaவின் இயக்குனரை நீக்கினார்கள். autonomy comes with accountability.


இன்னொன்று என் நிறுவனத்தில் நடந்தது.இந்த மாநில அரசாங்கத்துக்குஎங்கள் நிறுவனம் தயாரித்த மென்பொருள் நேரம் கெட்ட நேரத்தில் படுத்துபொது மக்களை வதைத்துவிட்டது. இதற்காக எங்கள் நிறுவனத் தலைவர்செனட்டுக்கு சென்று வறுபட வேண்டியிருந்தது.


இந்தியாவில் தேவைக்கேற்ப சோசலிசமும், கேபிடலிசமும் அவரவர் வசதிக்கேற்ப நேரத்திற்கேற்ப வசதியான தத்துவம் எதுவோ அதை பிடித்துக்கொள்கிறார்கள்.தமிழக அரசாங்கம் லட்சக்கணக்கானவர்களை ஒரே ஆர்டரில் டிஸ்மிஸ் செய்தபோதுசில பத்திரிகைகள் கைகொட்டி வரவேற்றது. இந்த மாடர்ன் உலகில் வளர்ந்து வரும்இந்தியாவில் யாரும் ஸ்ட் ரைக் செய்யக்கூடாது , there is no moral, legal,ethical right டto strike என்று சுப்ரீம் கோர்ட் சொன்னது. துக்ளக் சோ கூடஜெயலலைதாவின் துணிவை பாராட்டினார். (இப்பொ என்ன சொல்கிறார் என்றுயாராவது update செய்யுங்கள்.)

கம்யூனிஸ்டுகள் அரசு ஊழியர்களைஆதரித்தார்கள். பொது மக்கள் இதனால் எவ்வளவு அல்லல்பட்டார்கள் என்றுபத்திரிகைகள் அக்கறையுடன் எழுதின.


fast forward to 2006. இட ஒதுக்கீட்டை எதிர்த்து டாக்டர்கள் போராட்டம்செய்தார்கள். மக்கள் அல்லல்படுவதை பற்றி எந்த பத்திரிகையும் எழுதியது போலதெரியவில்லை. கோர்ட் அவர்களுக்கு வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமென்கிறது. கம்யூனிஸ்டுகள் வழவழ கொழகொழ என்று ஏதோ சொல்கிறார்கள்.வழக்கமாக போராட்டங்களையும் கம்யூனிஸ்டுகளையும் எதிர்ப்பவர்கள் திடீர் கம்யூனிஸ்டாக மாறி 'இவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் எப்படிபோராடுவது' என்று கேட்கிறார்கள்.


சரி. இந்தியாவில் autonomous நிறுவனம் செயல்படாமல் நின்று போகும்போது என்ன செய்ய வேண்டும்? எப்படியோ போகட்டும் என்று சுகாதார அமைச்சரும்,பிரதமரும் விட்டுவிட வேண்டுமா? பொதுமக்களின் பணத்தை கொடுத்துவிட்டு அப்புறம் அவர்கள் இஷ்டப்படி வேலை செய்யலாம் அல்லது செய்யாமல் இருக்கலாம். செய்யாவிட்டாலும் தண்டிக்கக்கூடாது.இவர்கள் கேட்பது autonomy with impunity. இது சரியா?


ஏற்கெனவே சாதி சூழல் உள்ள நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு சட்டம் போட்டுஅனுப்பினால் நம் autonomous நிறுவனங்கள் அதை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு தன்னிஷ்டப்படி செயல்படும். பேசாமல் அமைச்சகத்தை மூடிவிட்டு பிரதம மந்திரி நேரடியாக அரசு அதிகாரிகளின் மூலமே நிர்வாகம் செய்யலாம்.அரசு அதிகாரிகள் தவறு செய்தால் அவர்களை தண்டிக்கப்படாமல் கம்யூனிஸ்டுகளும்,வேண்டப்பட்டவராயிருந்தால் கோர்ட்டும் காப்பாற்றுவார்கள்.

Jaihind.

Problems with autonomy
http://www1.worldbank.org/publicsector/civilservice/autonomous.htm