ullal

Sunday, August 27, 2006

ஜீசசின் பேத்தி எழுதிய நாவல்

கெத்லின் மெக் கொவன் எழுதியிருக்கும் 'The Expected One' நாவல் கிட்டத்தட்ட டவின்சி கோட் போன்ற ஒரு த் ர்ில்லர் கதை.கதைதான். சமீபத்தில் இவருடைய ரேடியோ பேட்டி கேட்க நேர்ந்தது.நாவலின் சிறப்பம்சம் நாவலாசிரியர்் தான் ஜீசஸ்-மேரி மேக்தலீன்வம்சத்தில் வந்தவர் என்கிறார்.

1980 இலிருந்து இவர் இந்த கதைக்கு ஆராய்ச்சி செய்து வருகிறார்.ப்ரான்சில் மேரி மஎக்தலீன் பற்றி பல நாட்டுப்புற கதைகள் உள்ளதாம். அதை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கதை இது.கதையில் வரும் 'maureen pascal என்ற கேரடக்டர் இவருடைய பேஸ்கல் என்ற பாட்டியின் பெயராம். இந்த் பாட்டி ஜீசஸ் வம்சத்தில் வ்னதவராம். ப்ரான்சில் 13 ஆம் நூற்றாண்டில் 'கேதர்ஸ்' என்று ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மில்லியன் ஆட்களை சர்ச் கொன்று விட்டதாம். இவர்கள் அனைவரும் ஜேசஸ்வழி வந்தவர்களாம். இன்னும் உலகில் இப்படி மில்லியன் கணக்கில் ஜேசஸ் வம்சத்தினர் இருப்பதாக சொன்னார்.நிறைய சர்ச்சை உண்டாக்கப் போகும் புத்தகம்.

மெல் கிப்சனின் யூதவெறுப்பும் ஷாருக்ின் கோக் பிரியமும

இரண்டு வாரம் முன்பு புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் மெல்கிப்சன் ஓவராக குடித்துவிட்டு கார் ஓட்டி போலீசால்கைது செய்யபட்டார். மனிதர் போலீசுடன் வாக்குவாதம்செய்கையில் புகழ் பெற்ற F இல் தொடங்கும் நாலெழுத்துகெட்ட வார்த்தையில் யூதர்களை திட்டினார். அத்தோடு விட்டாரா, ஒரு படி மேலே போய் 'உலகில் நடக்கும்போர்களுக்கெல்லாம் யூதர்களே காரணம்' என்று மேலும் கூறினார். யூதர்கள் நிறைந்த ஹாலிவுட்டில் இப்படிபேச ரோம்ப தைரியம் வேண்டும்.

கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்க மீடியா இந்த சம்பவத்தை ஏந்டி செமிடிக் என்று சொல்லி அரைத்தெடுத்தது. அடுத்த நாள் மெல் கிப்சன் தான் சொன்னதற்கு மன்னிப்புகேட்டுக்கொண்டார். குடிபோதையில் உளறியதாக விளக்கம் கொடுத்தார். குடிபோதையில் இது போல கருத்துக்கள் எல்லாம் வருமா?ஏற்கெனவே மனதில் இருந்த வெறுப்புதான் குடிபோதையில்வெளி வந்துள்ளது. இவருடை அடுத்த படம் 'அபோகேலிப்டோ 'வை புறக்கணிக்க வேண்டும், ச்டூடியோக்கள் இவருடன் ஒத்துழைக்கக் கூடாது என்றெல்லாம் குரல் கேட்கிறது.இவருடைய முந்தைய படம் 'பேஷன் ஆப் க்ரைச்ட்' ஏந்டி செமிடிக் என்றார்கள். (யேசுவின் கதை முடிவை மாற்றியா எடுக்க முடியும்?) ஆனால் இந்த படம் பாக்ச்ஆபீசில் டால்ரகளை குவித்தது. (10th place in Alltime collection)
எப்படியோ அடுத்த படத்திற்கு நிறைய இலவச விளம்பரம்கிடைத்துள்ளது. இதைப் பற்றிய டைம்ச் ஆர்டிகிள்

இங்கேhttp://www.time.com/time/magazine/article/0,9171,1223357,00.html http://www.time.com/time/nation/article/0,8599,1222126,00.html
http://cagle.msnbc.com/news/MelGibson/main.asp
அடுத்ததாக நம் ஷாருக்கான் இந்தியாவில் கோக் கிடைக்காவிட்டால்அமெரிக்கா போய் குடிப்பேன் என்கிறார். அந்த அளவுக்கா மனிதர்கோக்கிற்கு அடிமையாகி விட்டார்? இதை அவர் பேச வில்லை அவர்மூலமாக கோக கோலா நிறுவனம்தான் பேசுகிறது. இவர் கேட்பதுநம்மூர் குழாயில் வரும் நீர் பாதுகப்பானதா என்பது? நம் போலிகம்யூனிச்டுகள்வெளிநாட்டு கோலாவை எதிர்க்கும் அளவு கிராமத்து நீரை பாட்டிலில் அடைத்து நகரங்களில் விற்பதைகண்டுகொள்வதில்லை. உள்ளூர் ச்பிக் உர நிறுவனத்திற்கு எதிராக எந்த கம்யூனிச்டுகளும் போராடுவது போல தெரியவில்லை.குழாய் நீரின் பாதுகாப்பைப் பற்றியும்p;யாரும் கவலைப்படுவதில்லை. நீரை நஞ்சாக்கும் திருப்பூர்சாயப் பட்டறைகளிடம் கோடி கணக்கில் நஷ்ட ஈடு கேட்டுவழக்கு தொடர வேண்டும். கெமிகல் பூச்சி உரங்களை தடைசெய்துவிட்டு இயற்கை உரங்களை ஊக்குவிக்க வேண்டும்.

ரம் விஸ்கி விடுதலை போராட்டம்

ஆறு க்ளாஸில் உலக வரலாறு - interesting ஆன புத்தகம்.வெவ்வேறு காலகட்டங்களில் பிரபலமாக இருந்த பானங்களின்சமூக வரலாற்றை விளக்குகிறது.
பழங்குடிகளின் பியர் மோகம், கிரேக்க க, ரோமன் கலாச்சாரங்களின்ஒயின் கலாச்சாரம், அமெரிக்க விஸ்கி , பிரிட்டிஷ் காபி, டீ ஏகாதிபத்தியம்,கடைசியாக கோக்கினமுலகளாவிய தாக்கம்.
அமெரிக்கர்கள் பிரிட்டிஷிடமிருந்து பிரிந்து போகத் தூண்டியது,முதலில் ரம், விஸ்கி விலைக்கு ஏற்பட்ட பிரச்சினையில் ஆரம்பித்துதேயிலை வரி வரும்பொழுது பெரிய போராட்டமானது.
முதலில் அமெரிக்க காலனியாக்கத்தின் போது வர்ஜீனியாவில் mediterraneanதட்பவெப்பம் போல இருக்குமென்று தவறாக கணக்கு போட்டார்கள். இங்குசிறந்த ஒயின்களையும், பட்டு, பழம், உப்பு போன்றவை உற்பத்தி செய்யலாமென்றுநினைத்தனர். ஆனால் இங்கு கரும்பு, வாழை எதுவும் வளரவில்லை. கப்பலில்வந்தவர்கள் நோய், உணவு பற்றாக்குறை, தொடர்ந்து சண்டைகள் என்று பாதிக்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில் தேவையான அளாவு ஆல்கஹால், பியர்எதுவும் கிடைக்கவில்லை. ஆங்கிலேயர்களுக்கு வெறும் தண்ணீர் குடித்துவாழ்வது பிடிக்காமல் திரும்பி போக விரும்பினார்கள். அடுத்த்தாக MayFlowerகப்பல் Cape Codஇல் வந்து நின்றது. அங்கு குடியேறியவர்களுக்கும் இதே பிரச்சினை. 1628 இல் இங்கிலாந்திலிருந்து 10000 கேலன் பியர் கொண்டு வந்தார்கள்.
ஐரோப்பிய தானியங்கள் அமெரிக்காவில் வளரவே இல்லை. பியர் இறக்குமதி செய்வதற்கு பதிலாக லோக்கலில் கிடைக்கும் சோளம், மேப்பிள், பூசணிஇதைக்கொண்டு பியர் தயாரிக்க முயற்சி செய்தனர். இங்கு விளைந்த திராட்சைகளைக்கொண்டு தயாரித்த ஒயின் சுவை சரியாக வரவில்லை. பதினேழாம் நூற்றாண்டின்கடைசியில் ரம் கிடைக்க ஆரம்பித்து. ஏழை , பணாக்காரன் அனைவரும் ரம் குடித்தார்கள்.ஏதாவது ஒப்பந்தம் கையெழித்து போடும்போது ரம் குடிப்பார்கள். 17 ஆம்நூற்றாண்டின் கடைசியில் நியூ இங்க்லாந்தில் மொலாசிஸ் இறக்குமதி செய்து லோக்கலாக ரம் தயாரித்தார்கள். ஆப்பிரிகாவிலிருந்து அடிமைகளைக் கொண்டு வந்தவியாபாரிகளுக்கு ரம் கரன்சி போல கொடுக்கப்பட்டது. இந்த் அரம்மை தயாரிக்கமொலாசிஸ் ப்ரான்ஸிலிருந்து இறக்குமதி செய்தது பிரிட்டிஷ் சர்க்கரை தொழிலைபாதித்தது.
1733 இல் பிரிடிஷ் அரசாங்கம் ப்ரென்சு மொலாசிசுக்கு வரி போட்டது. ஆனால் போதுமானஅளவு மொலாசிஸ் இங்கிலாந்திலும் உற்பத்தியாகவில்லை. இந்த் அசட்டம் செயல்படுத்தப்பட்டால்நியூ இங்கிலாந்து ரம் பொருளாதரம் பாதிக்கப்படும். தேவையான அளவு பானமும்கிடைக்காது. ஆனால் பிரிடிஷ் அரசாங்கம் அமெரிக்காவில் நியமித்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் வரி வசூலிக்காமல் இங்கிலாந்தில் உட்கார்ந்துக்கொண்டு தங்கள் சார்பாக ஒரு ஆளை அமெரிக்காவில் நியமித்து ப்ரென்சு மொலாஸிசை லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதித்தார்கள்.
மீண்டும் 1764 இல் பிரிட்டிஷும் அமெரிக்காவும் சேர்ந்து ப்ரான்சுடன் சண்டை போட்டார்கள்.இதன் விளைவாக ப்ரிடிஷாருக்கு நிறைய பணாச்சுமை நேர்ந்தது. இந்த்ஹ சுமையை அமெரிக்காவும்பகிர்ந்துகொள்ளவேண்டுமென்று மீண்டும் சுகர் வரி போட்டது.
எங்கெயோ இருக்கும் ஒரு நாட்டுக்கு வரி கொடுப்பது அமெரிக்கர்களுக்கு சுத்தமாகபிடிக்காமல் போனது. இதற்கப்புறம் stampact வந்தது. East India Company யின் தேயிலை வியாபாரத்தை பாதுகாக்க அமெரிக்க தேயிலைக்கு வரி போட்டார்கள். இதன் விளைவாக பாஸ்டன் டீ பார்டி புரட்சி நடந்தது. இங்கிருந்துதான் அமெரிக்க விடுதலை போராட்டம்ஆரம்பித்ததாக சொன்னாலும், முதலில் புரட்சிக்கான காரணியாக் ஐருந்தது ரம். போர் வீரர்கள் நிரறைய ரம் குடித்தார்கள்.
போரினால் தடையில்லாமல் மொலாஸிஸ் கிடைப்பது பிரச்சினையாக ப் போகவே விஸ்கிதயாரித்தார்கள். இதற்குப் பின்னர் அமெரிக்கா விடுதலை அடைந்த பின்னர், அமெரிக்க அரசாங்கமே விஸ்கிக்கு வரி விதித்தது. இதுவும் விவசாயிகளுக்கு பிடிக்கவில்லை.வரி வசூலிக்க வருபவர்களை தாக்கினார்கள். வரி கட்டுபவர்களையும் தாக்கினார்கள்.வரி கலெக்டரின் வீடுகளையும் கொளுத்தினார்கள். David Bradford தலைமியில்6000 பேர் கொண்ட போராட்ட படை pittsburgh இல் உருவானது. இந்த புரட்சியை George Washington பெரும்படை கொண்டு அடக்கினார். பின்னர் இந்த வரியும் கைவிடப்பட்டது.பின்னாளில் George Washington அவருடைய பண்ணையில் விஸ்கி தயாரிப்பையும் செய்தார்.

Wednesday, August 23, 2006

அல் கெய்தா ஷாப்பிங்க் லிஸ்ட்

கோல்கேட் டூத்பேஸ்ட்
பேன் டீன் ஷாம்பூ
லிப்ஸ்டிக்
நெயில் பாலிஷ்
பயிர் உரம்
குழந்தை பால் பவுடர்
ஹேர் ச்ப்ரே

:)

டாலி பார்டன் பறப்பதற்கு தடை


பாடகி டாலி பார்டன் அமெரிக்க பொது விமானத்தில் பறக்க முடியாது.ஏன் என்று கண்டுபிடியுங்கள்.

Friday, August 18, 2006

மலர் மன்னனின் கீதோபதேசம்

இந்த வார திண்ணையில் பாகிஸ்தானும் இந்தியாவும் அணு ஆயுதப் போர்புரிய வேண்டுமென்று பரிந்துரைக்கிறார். இந்த கட்டுரைக்கு பொருத்தமாக ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் (ஜிஹாத்)பதேசம் படம் .
"ஆகையினால் பாரத தேச நலனில் அக்கரை உள்ளவர் எவராயினும் இந்தச் சந்தர்ப்பத்தில் நம் தேசத்துப் பெரும்பாலான முகமதியரின் மனப்பான்மை குறித்தெல்லாம் கவலைப்பட்டு பிரச்சினையைத் திசை திருப்பிக்கொண்டிராமல் யுக தர்மத்தின் பிரகாரம் செயல் படுவது பற்றி யோசிப்பதே உசிதம்.

நாம் பயங்கரவாதிகளை எல்லை தாண்டிச் சென்று தேடித் தாக்கினால் பாகிஸ்தான் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் என்று சிலர் எச்சரித்ததைக் கேட்டபோது மானக்கேடாக இருந்தது. அப்படியே தாக்குதல் நடந்தால்தான் என்ன? இப்போது மட்டும் இழப்பில்லாமலா உள்ளது? பாகிஸ்தான் அணு ஆயுதப் பிரயோகம் செய்யத் துணிந்தால் அதையே சாக்கிட்டு அதனை உலக வரைபடத்திலிருந்தே அழித்தெறிந்துவிடுவதற்கான அணு ஆயுத வலிமை நமக்கு உள்ளதே? நமக்கு வேண்டுவது பொலிடிகல் வில் என்று சொல்லப்படுகிற ராஜீய திட சங்கற்பம்."


இப்படி ஒரு போர் நடந்தால் நிச்சயம் மலர்மன்னன் வகையறாக்கள்அணு ஆயுத எல்லைக்கு அப்பால் எங்காவது சென்று ஒளிந்துகொண்டுவிடுவார்கள்.

ஐயப்பன் ,பெண்கள் ,மாதவிடாய்..

ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவதா என்ற விவாதம்எழுந்தபோது சிலர் (அவதாரப்பிறவிகள் ?) பெண்கள் கெட்டஇரத்தத்துடன் கோவிலில் நுழையக்கூடாது என்பது போல எழுதினர்.

அம்மனுக்கு சிவப்பாடை அணிவிப்பது மாதவிடாயை குறிப்பதுஎன்பதை முன்பு எப்போதோ கேள்விப்படிருக்கிறேன். சரியான விபரம் தெரியாததால் இது குறித்து எழுதாமல் விட்டேன்.

இப்பொழுது திண்ணையில் குமரி மைந்தனின் சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் கட்டுரையில் இதே செய்தியை கண்டதால் பதிக்க வேண்டி அவசியம்உள்ளது.

"பெண் தலைமை முறியடிக்கப்பட்ட பின் வழிபாட்டு முறைகளில் மாற்றம்ஏற்பட்டாலும் சில எச்சங்கள் இன்றும் நிலவுகின்றன. சில கோயில்களில்பூசாரிகள் சேலை உடுத்திக் கொண்டுதான் பூசை செய்கின்றனர். இன்றும்நாட்டுப்புற அம்மன் கோயில்களில் பூசாரிகள் சிவப்பு உடை உடுத்தியே பூசை செய்கின்றனர்.

இந்தச் சிவப்பு ஆடை பெண்களின் மாதவிடாய்க் குருதி பட்ட சேலையைக் குறிக்கும். பெண் தலைமைக் குமுகத்தில்மாதவிடாய் தெய்விகமானதாகவும் மாதவிடாய்க் காலத்தில்பெண் தெய்வத் தன்மையுடையவளாகவும் கருதப்பட்டாள். எனவே தான் இன்றும் இவ்வம்மன் கோயில்களில் அம்மனுக்குச்சிவப்புச் சேலை வாங்கிச் சார்த்தி அதைத் திரும்பப் பெற்றுவீட்டில் வைத்து வணங்குகின்றனர். பழங்காலத்தில் இவ்வம்மன்களை மாதவிடாயிலிருக்கும் பெண்களே பூசை செய்தனர். பெண் மாதவிடாயிலிருக்கும் போது தெய்விகமானவளாகக் கருதப்பட்டதால் அவளுடன் உடலுறவு கொள்வதும் தவிர்க்கப்பட்டது; இன்று அதற்குநேர் எதிரான காரணத்தால் அது தவிர்க்கப்படுகிறது. இன்று ஆண்,பெண் வேறுபாடின்றி “இந்துக்கள்” நெற்றியில் இட்டுக் கொள்ளும் குங்குமப் பொட்டு முன்பு மாதவிடாய்க் குருதியை நெற்றியில் இட்டதின் எச்சமே. மஞ்சள் நெய் எனப்படும் சிவப்பான குழம்புக்கும் இதே குறிதகவு தான்."புகழ் பெற்ற குமரி மாவட்ட முப்பந்தல் இயக்கிக் கோவிலில் மஞ்சள் நெய் வழங்கப்படுகிறது.

Tuesday, August 08, 2006

பியரிலிருந்து கோக் வரை

பியர் பழங்குடிகள் கண்டுபிடித்த பானம். பியரை கண்டுபிடித்ததேஒரு விபத்து. அறுவடை செய்து கொட்டி வைக்கப்பட்ட தானியம்ஈர பதத்தால் முளைக்கட்டி அதிலிருக்கும் சர்க்கரை ஆல்கஹாலாகமாறி விட்டது. அந்ந்ந்த்த காலத்தில் எகிப்து பிரமிட்டுகள் கட்டியவர்களுக்குரொட்டியும், பியரும் கூலியாக கொடுத்தார்கள். (இன்று தமிழகஅரசு இலவச அரிசியும், டாஸ்மாக்கும் வைத்திருப்பது போல.)


பியரை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி அனைவரும் ஒன்றாகstraw போட்டு பருகுவர். நண்பர்களுடன் கறியை பங்கு போட்டுத்தின்றாலும் கூட சிலருக்கு நல்ல பாகமும் சிலருக்கு வேறு பாகங்களும் கிடைக்கலாம். கூட்டாக ஒரே பானையில் ஊற்றி பியர் குடிப்பதுதோழமையை குறிப்பது. இந்த காரணத்தால்தான் இன்று குடிக்கும்போதுடோஸ்ட் செய்யும் பழக்கம் வந்தது.
திராட்சைகளால் செய்யப்பட்ட ஒயின் கிரேக்கர்களின் கலாச்சாரம்.இறக்குமதி செய்த திராட்சைகளிலிருந்து செய்யப்படும் ஒயின் ஆரம்பத்தில் பெரும் பணக்காரர்களும், அரசர்களுமேமட்டுமே ஒயின் வாங்க முடிந்தது. பிற்பாடு ரோமாபுரியிலும் ஒயின் மிகப் பிரபலமாக இருந்தது. ஒயின் குடிப்பது உயர்வானதாகவும்,பியர் குடிப்பது காட்டுமிராண்டித்தனமாகவும் கருதப்பட்டது.ஒயின் காய்ச்சும் க்வார்ட்டர் கோவிந்தனின் டெக்னிக்கை கண்டுபிடித்தவர்கள் இஸ்லாமியர்கள். கிருத்துவம் ஒயின் குடிப்பதை ஏற்றது. ஆனால் மது இஸ்லாமில் தடை செய்யப்பட்டது. மருந்துக்காகமட்டுமே பயன் படுத்த அனுமதி உண்டு.

பிரிட்டிஷார்கள் காலை உணவுக்கே பியரும், ஒயினும் குடிப்பார்கள். ஏனென்றால் இவர்களுக்கு தண்ணியின் மீது அவ்வளவு பயம். தண்ணீர்குடித்தால் மலேரியா வருமாம். அதனால் நன்றாக காய்ச்சிய பியரும்,ஒயினும் பாதுகாப்பானது. முதன்முறையாக மதியை மயக்காத மாறாகமூளையை சுறுசுறுப்பாக்கும் காபி கண்டுபிடிக்கப்பட்டது. காபி அறிவுடன்சம்பந்தப்பட்ட பானமாகியது. பெரிய அறிவாளிகள், சிந்தனாவாதிகள்கூடும்போது காபி குடிக்கும் கலாச்சாரம் வந்தது. பியர் அளவுக்கு காய்ச்சாவிட்டாலும், காபி பாதுகாப்பாகவே கருதப்பட்டது. காபி வியாபாரத்தில் மத்திய கிழக்கு நாடுகளே கோலோச்சியது. வேறு நாடுகளில் இந்த செடியை விளைவித்துவிடக் கூடாதென்று காபிவிதையை வறுத்து ஏற்றுமதி செய்தார்கள். பின்னர் யாரோ திருட்டுத்தனமாக இந்த செடியின் கட்டிங்கை வெளிநாட்டுக்கு கொண்டு சென்று பிற நாடுகளில் விளைவிக்கப்பட்டது. இஸ்லாமியகோர்ட்டில் காபி இஸ்லாமுக்கு எதிரானதா என்று வழக்கு கூட நடந்ததாம்.

காபிக்கு அடுத்தபடியாக வந்தது தேயிலை ஏகாதிபத்தியம். இன்றும்பிரிட்டிஷார்கள் மாலையில் தேநீர் அருந்தும் கலாச்சாரம் வைத்திருக்கிறார்கள்.ஜப்பானில் தேநீர் அருந்தும் முறைக்கு வகுப்புகள்கூட இருக்கின்றன.அந்த அளவுக்கு தேநீர் குடிக்கும் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் உள்ளது.தேயிலையும் காபி, பியரைப் போல ஒரு மருந்து வகையாகவே ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது. நமக்கு நன்றாக தெரிந்த கிழக்கு இந்தியா கம்பெனி தேயிலைக்காக சீனாவில் போர் நடத்தி வென்றது. பின்னர்சீனாவை மட்டுமே வியாபாரத்திற்கு நம்ப முடியாதென்று தேயிலையைஇந்தியாவில் கொண்டு வந்து விளைவித்தார்கள். குறைந்த விலையில் இந்தியாவில் தயாரித்த தேயிலையை அமெரிக்காவில் கொண்டு வந்து கொட்டி,பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவுடன்(லஞ்சம் கொடுத்து ) அமெரிக்க தேயிலைக்கு வரி போட்டார்கள். இதிலிருந்து அமெரிக்க 'பாஸ்டன் தேயிலைபார்ட்டி' என்ற புரட்சி செய்து அமெரிக்கா பிரிட்டிஷிடமிருந்து விடுதலை அடைந்தது.

அடுத்த ஏகாதிபத்தியம் கோக்கினுடையது. இதை கண்டுபிடித்தவர் ஒரு பார்மசிச்ட். கோகா- என்பது கொக்கோ பழத்தை குறிக்கும். கோலா என்பது ஆப்பிரிக்காவில் உள்ள மூலிகை வேர். இவர் தயாரித்த மருந்தை குடித்தவர்கள்புத்துணர்ச்சி அடைந்ததால் இது பிரபலமான குளிர் பானமாக்கப்பட்டது. பல நாடுகளில் கோக்கை எதிர்த்தபோதும் ஒவ்வொரு முறையும் இந்த எதிர்ப்புகோக்கிற்கு இலவச விளம்பரமானது. கோக் என்பது அமெரிக்க சின்னமாகவே மாறிப்போனது.

இன்று க்ளிந்டனின் முயற்சியால் அமெரிக பள்ளிகளில் சோடா என்ற 'carbonated'பானங்கள் தடை செயப்பட்டுள்ளது.இன்று அமெரிக்காவில் பிரபலமாகி வரும்பான கம்பெனி கோகா கோலா இல்லை. Hansen natural beveragesஇன் பங்கு கடந்த இரண்டு வருடங்களில் 60 மடங்கு உயர்ந்துள்ளது. இவர்கள்தயாரிப்பது multivitamin juice, fruit smoothie போன்றசோடா இல்லாத இயற்கை பானங்கள். இப்பொழுது நல்ல தண்ணீரும் பாட்டிலில் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. Mountain spring என்றெல்லாம்விளம்பரம் செய்தாலும் இங்கு விற்கப்படும் தண்ணீர்கள் அனைத்தும் மலையிருந்துஎடுக்கப்படுவதில்லை. குழாயில் வரும் முனிசிபல் தண்ணீரில் சில தாதுக்கள் சேர்த்து விற்பனை செய்கிறார்கள். கடைசியில் ஒரு வழியாக மேற்கில் இப்பொழுது தண்ணீர் குடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.


(History of the world in six glasses)