ullal

Tuesday, January 30, 2007

வீரமணி,சாய்பாபா ...

http://viduthalai.com/20070123/news01.htm

பாவம் துரை முருகன். இவர் ஒருத்தர் பலி ஆடு போல அகப்பட்டார்.
கருணாநிதியை நேராக திட்ட முடியுமா ?

'நமது எம்ஜிஆரெ'ல்லாம் வீரமணிக்கும் மோதிரம் கிடைத்ததா
என்று எழுதும் நிலை வந்துவிட்டது. கொடுமைதான். என்ன செய்வது?

மோசடி சாமியார் என்று சொல்கிறீர்கள். அதே நேரத்தில் அவருக்கு
நன்றியும் தெரிவிக்கிறீர்கள்.

இனிமேல் மோசடி செய்பவர்கள் அரசாங்க திட்டங்களுக்கு கமிஷன்
கொடுத்தால் எல்லோருக்கும் பாராட்டு விழா அல்லது ஒரு
வாழ்த்து சான்றிதழ் என்று அவரவர் நன்கொடைக்கு ஏற்ப கொடுக்க
பரிந்துரை செய்யுங்கள்.

ஆரம்ப காலத்தில் சில மோசடிகள் செய்திருந்தாலும் தவறில்லை
என்று வலைப்பதிவுகளில் ஏற்கெனவே நிறைய பேர் சொல்லிவிட்டதால்
வலைப்பதிவர்கள் சார்பாக இந்த வேண்டுகோள் விடுக்கிறேன்.

அஞ்சுக்கும், பத்துக்கும் மோசடி செய்பவர்களை சிறையில் இருந்தால்
விடுதலை செய்து விடுங்கள். அவர்கள் வெளியில் இருந்தால் தங்கள்
கலையை செவ்வனே வளர்த்து நாளைக்கு பெரிய சாமியாராகவோ,
அல்லது அரசியல்வாதியாகவோ வரலாம். விளையும் பயிர்களை
முளையில் கிள்ளக்கூடாது அல்லவா?

ஒரு சில கொலைகள் செய்தாலும் கூட பரவாயில்லை என்றே தோன்றுகிறது.
அதனால் பிரேமானந்தாவையும், ஜெயேந்திர சரஸ்வதியையும்
விடுவிக்க வேண்டியதுதான்.

பெரியார் நாமம் வாழ்க.

Friday, January 26, 2007

சாய்பாபாவும் தோதோ பறவைகளும்

சாய்பாபாவை கடவுள் என்று நம்புபவர்கள் உலகில்
நிறைய பேர் இருக்கிறார்கள் என்று சொல்பவர்களுக்கு
இந்த பதிவு சமர்ப்பணம்

http://movies.yahoo.com/mv/mf/frame?theme=minfo&lid=wmv-56-p.1027711-75563,wmv-100-p.1027712-75563,wmv-300-p.1027713-75563,wmv-28-p.1027711-75563&id=1805540029&f=1805540029&mspid=1807871842&type=c&a=0,15

Monday, January 22, 2007

மதிப்புற்குரிய பிரதம மந்திரிக்கு

சாமியார் அமைச்சகம் அமைக்க கோரிக்கை
---------------------------

உங்களுடைய நிதி அமைச்சர் இந்தியர்களிடமிருந்து வருமான வரி வசூலிக்க
மக்களை மிரட்டி, கெஞ்சி, கொஞ்சி, சலுகைகள் என்றெல்லாம்
அறிவித்தும் நம் மக்களிடம் எதுவும் செல்லுபடியாகவில்லை. ஆகவே
வருமான வரியை பிரச்சினையில்லாமல் வசூலிக்க ஒரு
யோசனை. மத்திய அரசில் சுற்றுலா துறை போல சாமியார் துறை
ஒன்று இருந்தால் வருமான வரியை மிக எளிதாக வசூலிக்கலாம்.

ஏற்கெனவே அறநிலையத்துறை மூலமாக கோயில்களில் சுரண்டுபவன்,
கொள்ளைக்காரன் எல்லாம் கொண்டு வந்து கொட்டுவதை வசூலித்து
நாட்டு மக்களுக்கு ரோடு, மருத்துவமனைகள் கட்டி வருகிறோம்.
அது போல ஒரு சாமியார் துறை அமைத்தால் நதி நீர் இணைப்புத்
திட்டம், மருத்துவமனை , இலவச வீடு, டிவி, கார்
திட்டங்களெல்லாம் நிறைவேற்றிவிடலாம். இந்த துறையையும்
கூட்டணி கட்சியை சேர்ந்த கருணாபாபாவின் கொள்ளுப் பேரனுக்கு
அளிக்க வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் உள்நாட்டில் மட்டுமில்லாது வெளிநாடுகளுக்கு
என்.ஆர்.ஐக்கள், என்,ஆர்,எப் கள் கொடுக்க வேண்டிய வரியையும்
சேர்த்து இந்தியாவே வசூலித்துக்கொள்ளலாம்.
அப்படியே தனியார் சாமியார் மடங்களையும் அரசாங்கமே டேக் ஓவர் செய்து
விடலாம். அப்புறமென்ன இந்தியா சூப்பர் பவராகி நாட்டில் தங்க ரோட்டில்
வெள்ளி கார்கள் ஓட்டலாம்.

சாமியார்களை பணிக்கு எடுப்பதற்கு upsc 'இந்தியன் சாமியார் சர்வீஸ்' (ISS) பரீட்சைகள்
நடத்தலாம். சாமியாராவதற்கு முக்கியமான அடிப்படை தகுதி விண்ணப்பதாரகளுக்கு
வித்தியாசமான ஹேர் ஸ்டைல் இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக
எண்ணையைப் பார்க்காது பரட்டையாக பேன் முதல் புலி சிங்கம் வரை
வன விலங்குகள் தலையில் குடி இருக்கலாம். அல்லது ப்ரேமானந்தாவைப்
போல குடுமியோ நிர்வாணச் சாமியார்களைப் போல மொட்டையாகவோ
இருக்கலாம். அமைச்சகத்தில் விபூதி எடுப்பவர்கள், மோதிரம் எடுப்பவர்கள்,
நிர்வாண பூஜை செய்பவர்கள், தீபாவளிக்கு அருளுரை வழங்குபவர்கள்,
கற்பழிப்பு மட்டும் செய்பவர்கள், கற்பழிப்புடன் கொலையும் செய்பவர்கள் என்று க்ரூப் 1,2,3,4... என்று பிரிவுகள் ஏற்படுத்தலாம். பெண் சாமியார்களுக்கு
இந்த வேலைகளில் 33 சதவிகிதம் ஒதுக்கீடு வேண்டும்.

பொறியியல் கல்லூரிகளில் படிப்பதை விட சாமியார் கல்லூரியில்
படித்தால் கோடி கணக்கில் வருமானம் கிடைக்கும். சொல்லிக்கும்படியாக இந்தியாவிடம்
ஒரு பேடன் ட்டும் இல்லை. ஏராளமான புராண குப்பைகள் மட்டுமே நம்மிடம்
உள்ளது. அதனால் இந்த வேலைக்காக அரசாங்கமே (ஐ,ஐ,டிகளை மூடிவிட்டு) இந்தியன்
இன்ஸ்டிட்யூட் ஆப் சாமியாராலஜி தொடங்க வேண்டும். இந்த கல்லூரியில்
அட்மிசனுக்கு கூட்டம் அலை மோதும். ஆகவே பின் தங்கிய வகுப்பினருக்கு
50 சதவிகிதமும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 30 சதவிகிதமும்
இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

Thursday, January 18, 2007

விவாகரத்து- ஸ்ரீராமர் சீதை ஸ்டைல்

நன்றி - தலைப்பு உதவி கே.பாலச்சந்தர் நாடகம்

ஸ்ரீராமர் சீதையை பார்த்து இப்படி கேட்கிறார்.

ஏண்டீ சீதை இவ்வளவு நாளா நீ இலங்கையில் இராவணன்
அரண்மனையில் இருந்தியே. அப்ப, அங்கே

சீதை - அங்கே, அங்கே என்ன ?

ஸ்ரீராமர் - இல்லை, அங்க இராவணான், நீ அங்கே எதுவும் நடந்ததா?

மற்றவர்கள் உன்னை இழித்து சொல்வார்களே என்றுதான் கேட்கிறேன்.

சீதை - ஸ்ரீ ராம ப்ரபூ, உங்கள் வாயால் இப்படி கேக்கலாமா? இதோ
இப்பொழுதே என் தூய்மையை நிரூப்பிக்கிறேன்.

சீதை நெருப்பில் புகுந்து தன் தூய்மையை நிரூபித்து தங்க
பதுமை போல வெளியே வருகிறாள்.

ஸ்ரீராமர் - சீதே, என் கண்ணே, நீ நல்லவன்னு எனக்கு முன்பே தெரியும்.
ஆனால் மற்றவர்களுக்காக தான் உன்னிடம் கடுமையாக நடந்துக்கொண்டேன்.
மீண்டும் நீ ராணியாக என்னுடன் வா.

என்று அரசியல்வாதிகள் போல அந்தர் பல்டி அடிக்கிறார்.

சீதை - ஏ ராமா, நீ இப்படி சொல்லுவேன்னு எனக்கும் முன்பே
தெரியும். ஒரு வேளை நான் டெஸ்ட்டில் பெயிலாகி இருந்தால்
என்னை காட்டுக்கு அனுப்பி இருப்பாய். இப்ப பாசாகிவிட்டதால்
என்னை ராணியாக வர சொல்கிறாய்.

நானும் ரோசம் கெட்டு போய் உன் பின்னால் வருவேன், இதை வைத்து
இன்னும் பத்தாயிரம் வருடங்கள் கழித்து சன் டிவி என்கிற
யந்திரத்தில் வாராவாரம் மெகா சீரியலில் இதே கதையை எடுத்து
பெண்களை எல்லாம் துன்புறுத்த திட்டம் போடுகிறாய்.

உன் எண்ணம் ஈடேறாது. நான் கதை ending ஐ மாத்துறேன்.

நீ அந்தப்புரத்தில் இவ்வளவு நாளாக என்ன பண்ணிணேன்னு நான் கேட்டனா?
நீ எல்லாம் ஒரு கடவுள்! உனக்கு ராவணணே மேல். ஆனா
அவனையும் நீ கொன்று விட்டாய்.

இப்பொழுது நான் என் அப்பா ஜனகராஜா வீட்டுக்கு போகிறேன்.

இந்த ஜீவனாம்சம், சொத்து விவகாரங்கள் என் லாயர் நாரதரிடம்
கொடுத்தனுப்புகிறேன். பெற்றுக்கொள்.

குட்பை.

ஷில்பா ஷெட்டி,சத்யராஜ், கருத்து சொதந்திரம்

நம்ம ஷில்பா ஷெட்டிய லண்டனில் ஒரு ரியாலிடி டிவிநிகழ்ச்சியில சில அம்மணிகள் நாய், கருப்பு, நீ சமைச்சா சாப்பிட மாட்டேன்னு ரேசிஸ்ட்டா (தீண்டாம?) திட்டிட்டாங்களாம்.அக்கா டிவியில அழுதுட்டாங்க. நம்ம பாரத வம்சாவளி எம்பி இதை இதையெல்லாம் ஒளிபரப்பும்போது டிவி நிறுவனங்கள் கண்காணிக்கறது இல்லையான்னு அவங்க பார்லிமெட்டில் கோவமா கேட்டார். நம்ம டோனி ப்ளேர் அப்பாவியா முகத்தை வெச்சுட்டு'வாஸ்தவம் இதெல்லாம் எனக்கு புடிக்கலே. இந்த நிகழ்ச்சியை நான் பாக்கலே'ன்னு சொன்னார். (நன்றி-பிபிசி டிவி)அவரு பாவம் சதாமை தூக்குல போட்டதே அவருக்கு தெரியாது. இதையெல்லாம் போய் அவர கேட்டுகிட்டு..

இதுக்கப்பறம் நம்ம இந்தியாவுக்கு பயங்கர கோவம் வந்துருச்சு.ரோட்டுல கொடும்பாவி எல்லாம் கொளுத்தி அவங்க கோவத்த காமிச்சாங்க. நம்ம வெளியுரவு மந்திரி 'இது எங்களுக்கு ரொம்ப கவலை அளிக்குது. இந்தியாவுல நாங்க எப்பவுமே ரேசிசத்த எதிர்க்கறோம்'னு சொன்னார்.

இந்தியாவுக்குள்ள இப்படியெல்லாம் நடக்கறதே கெடையாது. ஒரிசால சில மக்கள் அனுமதியில்லாம கோயில்ல நுழைஞ்சுட்டாங்கன்னு உயர்சாதிகாரர்கள் (பத்திரிகைகள் அப்படிதான் சொல்லுது) பரிகார பூஜை பண்ணாங்களாம். அப்புறம் மஹாராஷ்ட் ராவுல அங்க இங்க வெட்டுக்கொலை,ரயிலெரிப்பு, பத்திரிகைகளில் சாதி வசவுகளுடன் கதைகள் எல்லாம் வருது.நம்ம பார்லிமென் டிலும் எப்ப இத பத்திபேசுவாங்க, மன்மோகன் சிங் 'எங்களுக்கெல்லாம் வருத்தமா இருக்கு'ன்னு பேசுவாரு?

அப்புறம் சத்யராஜ் படத்துல பிள்ளையார் கிட்ட கிண்டலா பேசினார்னு சென்சார் கட் பண்றாங்களாம். அவருக்கு எல்லா கருத்து சுதந்திரமும் இருக்கு. இதையெல்லாம் கட் பண்ணக்கூடாது. அப்படியே அரேபியா, ரோம்ல இருக்க சாமிய பத்தியும் கிண்டல் பண்ணணும்னு யோசனை சொல்றோம். அப்பாடா, நமக்கு எப்பவுமே பக்கத்து பெட் பாப்பாவ பத்திதான் கவலை.(காப்பிரைட் நன்றி முகமூடி)

அப்பறம் ஐச்வர்யாராய் ஏழுகல் வைர தோடு அரக்கு புடவை அணியப்போறாராம். அபிஷேக் பச்சன் பஞ்சகச்சம் கட்டுவாரான்னு தினமலரில் ஆராய்ச்சி பண்ணிட்டிருக்காங்க. சீக்கிரம் கண்டுபிடிச்சு இந்த செய்தியை சொல்ல மாட்டேங்கறாங்க. அதுக்குள்ள என் தலையே வெடிச்சுடும் போல இருக்கு.

ஜெய்ஹிந்த் ஜெய் இந்துயா

Wednesday, January 17, 2007

ஸ்ரீரங்கத்தில் கடப்பாறை (அ) அம்மா மண்டபம்

ஸ்ரீரங்கத்தில் கிச்சாவின் மாமா ரங்கராஜ அய்யங்கார் ஊஞ்சலில் ஆடியபடி அடியாளுடன் பேசிண்டிருக்கார்.

ர.அ - அந்த காலத்துல எப்படி இருந்தோம். இப்ப இப்படி ஆயிட்டோம்.(பெருமூச்சு விடறார்).

அடியாள் - ம். சொல்லுங்க.

ர.அ - இந்த காலத்துல நம்ம பொண்டு பசங்கள் எங்கே அப்பாஅம்மா பேச்சை கேக்கறதுகள்? யாரையெல்லாமோ கல்யாணம் செஞ்சுண்டுமீன் குழம்பு சாப்பிட ஆரம்பிச்சுட்டா. யாரெல்லாமோ படிச்சுட்டு நம்மோட போட்டிக்கு வந்துட்டா. என் அக்கா பையன் கிச்சா கூடவேத்து ஜாதியில ஒரு பொண்ண கட்டிண்டு அமெரிக்கா போறான்.

அடியாள் - சரிங்க.

ர.அ - வேத்து மதக்காரா இந்தியாவுக்கு வந்து கொழப்பம்உண்டாக்கிட்டா. எல்லாரும் சிந்திக்க ஆரம்பிச்சுட்டா.

அடியாள் - சரிங்க.

ர.அ - அப்ப நான் சொன்ன மாதிரி நீ செஞ்சுடு.

(பணக்கட்டு விபூதி போடுவது போல அடியாள் கையில் போடுகிறார்.)

அடியாள் - சரிங்க.

ர.அ - கோயிலுக்கு எதிரே அசுரர்களுக்கு மூர்த்தி இருக்கக்கூடாதுன்னு வேதம் சொல்லுது. நாட்டுக்கு நல்லதில்லை.நாடு நன்னா இருக்கணுமோன்னோ ?அதுதான். கரெக்டா பாத்துக்கோ. இந்த போட்டோவுல இருக்கறது போல தாடி வெச்சுண்டு இருக்கும்.

அடியாள் - சரிங்க.

ர.அ - எங்களால மத்த கட்சிக்காரா மாதிரி பிரியாணி தர முடியாது. மதியம் சாப்பாட்டுக்கு இந்த புளியோதரை பொட்டலம் எடுத்துண்டு போ.

அடியாள் - சரிங்க.

ர.அ - நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கோ? கருப்பு வேட்டி , கருப்புசட்டை போட்டுண்டு போ. இப்படியே போயிடாதே.

ர.அவின் பேத்தி - டே தாத்தா நேக்கு புளியோதரை இல்லையா?

ர.அ - சும்மா இருடீ, பெரியவா பேசிண்டு இருக்கச்சே தொந்தரவு பண்ணாதே.

ர.அ - டிசம்பர் 6 எங்களவா எழுச்சி நாள். நல்ல முகூர்த்தம்.இந்த கடப்பாறை கொண்டு போ.

(கடப்பாறை தூக்க முயல்கிறார்.)

என்னால முடியல்லை. நாங்க வெஜிடேரியன் இல்லையா? we are weak.
நீயே எடுத்துக்கப்பா.

அடியாள் - சரிங்க.

ர.அ - வேலை முடிஞ்சதும் பஸ் பிடிச்சு கேரளாவுக்கு ஓடிடு. ஒரு வேளைமாட்டிண்டாலும் கவலைப்படாதே. நம்மவா நிறைய வக்கீல், ஜட்ஜ் சுப்ரீம் கோர்ட் வரை இருக்கா. ஒன்னும் கவலைப்படாதே.

அடியாள் புளியோதரையும், கடப்பாறையும் எடுத்துண்டு போறார்.

கலையின் தாத்தாவின் சிலைக்கு நன்றி சொல்லி மாலை போட வந்திருந்த கிச்சாவை தள்ளிவிட்டு அடியாளும் அவருடைய கூட்டாளிகளும் ஜெய்ராம் என்று சொல்லிக்கொண்டு தாத்தாவின் சிலையை இடித்தனர்.

கிச்சாவின் மாலை சாக்கடையில் விழுந்தது.

[இந்த கதை முற்றிலும் கற்பனையே. இந்த கதையில்வரும் கதாபாத்திரங்கள் இந்த உலகத்திலோ வேறு கிரகங்களில் இருப்பவர்களை குறிப்பதில்லை.]

Thursday, January 11, 2007

சமூக ஏற்ற தாழ்வு, ஜீனி எண்

இந்தியாவின் ஜீனி எண் .33 ஆம். (இதில் எத்தனை புரட்டு இருக்கோ).

சமமான சமூகத்தின் ஜீனி எண் பூஜ்யமாக இருக்கும்.இதன் மற்றொரு எல்லை ஒரே ஆள் அனைத்துக்கும் சொந்தக்காரனாகும்போது ஜீனி எண் 1.

ஏற்ற தாழ்வு இருக்கணுமா? இல்லையா? இந்த எண் அதிகரிக்கும்போது என்ன நடக்கும்?

யாஹூவிலிருந்து ஒரு நல்ல கட்டுரை.
http://finance.yahoo.com/columnist/article/economist/19750

Thursday, January 04, 2007

அரை ப்ளேடுவிற்கு பின்னூட்டம்

அரை ப்ளேடு பதிவில் பின்னூட்டம் வேலை செய்யாததால் இந்த பதிவு.

அரை ப்ளேடு சார்,
ப்யூட்டி பார்லர் மேல் ஏன் உங்களுக்கு இவ்வளவு கோவம்?பரட்டை தலையுடன் மூக்கு ஒழுகிக்கொண்டிருக்கும் உங்கள் மனைவியை பார்ட்டிக்கு அழைத்து போய் மற்றப்ளேடுகளிடம் 'meet my wife, quarter blade"என்று சொல்லும்போது உங்க இமேஜ் பாதிக்காதா? எல்லாம்உங்க இமேஜுக்காகதான் செய்றாங்க.

அப்பறம் வரதட்சணை வாங்கறது பெண்களா? மாமனார் ப்ளேடு வாங்கிக்கொடுத்த ஸ்கூட்டரிலும், காரிலும் ஸ்டைலாக போகிற ப்ளேடுங்கெல்லாம் யாரு?

ஏண்டீ,உங்கப்பன் வெச்சிருக்க வெச்ட் மாம்பலம் ஒரு க்ரவுண்டை எப்ப எழுதி வைப்பான்னு கேளு என்று பின்னாலிருந்து ச்க்ரூகொடுப்பது ஆண் ப்ளேடா, பெண் ப்ளேடா?

பக்கத்து வீட்டு ப்ளேடுக்கு அவன் மாமனார் வீடு வாங்கி குடுத்திருக்கான்னுநீங்களும் வாங்கி குடுங்கன்னு மாமனார் ப்ளேடை கேப்பது யாரு?(எனக்கு தெரிஞ்ச ஒரு காலேஜ் வாத்தியார்கள் எல்லாம் peer pressureஇல்இப்படிதான் தங்கள் மனைவிகளை குடைந்தார்கள்.)

பொம்பளை ப்ளேடுகளா காலேஜ் சுவத்தில் உக்காந்து போற வறஆண் ப்ளேடுகளை பாத்து விசிலடிக்குது? பம்பாயில் ஒன்னும்நடப்பதில்லையா? பம்பாய் பஸ்ஸில் சில்மிசம் செய்து கூட்டத்திடம் அடி வாங்கும் காட்சிகள் அடிக்கடி நடக்குமே.

பாஞ்சாலிக்காவ சண்ட போட்டாங்களா? பெண்டாட்டி மேல அவ்வளவு பாசம் வெச்சிருந்தாங்களா ? அதான் நம்ம அர்ச்சுன சாரு டிசைனா டிசைனா பொண்டாட்டி வெச்சிருந்தாரா? அந்த காலத்துல டபில்யூ.எம்.டி இல்ல, அதுனால பாஞ்சாலிக்காக சண்ட போட்டதா சொன்னாங்க.
சொத்துக்காக அடிச்சுக்கிட்டதா சொன்னா வீரர்கள் போருக்கு வருவாங்களா? பாருங்க பழிய அந்தம்மா மேல போட்டுட்டாங்க.அந்தம்மாவ வெச்சு தாயக்கட்ட உருட்டினவங்க யோக்கியவானுங்களா? அந்தம்மா என்ன ஆடா, மாடா?

இப்பொதைக்கு இவ்வளவுதான் ப்ளேடு போட முடியும்.