ullal

Friday, September 28, 2007

ராமஜென்மபூமி

இடம் - ராம ஜென்மபூமி

ராமன் - லட்சுமணா, என்ன தமிழ்நாட்டில் ஒரே ரவுசாக இருக்கிறது?கொஞ்சம் நேரம் நிம்மதியா தூங்க முடிவதில்லை. பஜனை பாடி எழுப்பி விடுகிறார்கள்.

லட்சுமணன் - அண்ணா, தமிழ்நாட்டில் நம் வானரப் படைகளுக்கும்ராவணன் படைகளுக்கும் இடையே பெரிய மோதல் நடக்கிறது. ராமா, ராமா என்று கத்தி நம்மை டிஸ்டர்ப் செய்கிறார்கள்.

ராமன் - எதற்காக மோதலாம்?

லட்சுமணன் - சோமபானம் அருந்திவிட்டு தூங்கிக்கொண்டிருந்தால் நாட்டுநடப்பை எப்படி தெரிஞ்சுக்கறது? கொஞ்சம் செய்தித்தாள்களையும் நீங்கள்படிக்க வேண்டும்.

ராமன் - என்ன செய்தி?

லட்சுமணன் - தமிழ்நாட்டுலே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் விடப்போறாங்களாம். அதுக்காக நீங்க கட்டின பாலத்தை லேசாதட்டப் போறாங்களாம். இதனால் தமிழ்நாட்டு பொருளாதாரம் வளருமாம். நம் வானரப் படைகள் இதை எதிர்க்கிறது.

ராமன் - நான் எங்கே பாலம் கட்டினேன்? குரங்குகள் அல்லவா கட்டியது?அதுவும் வெறும் பாறைகளைதானே மிதக்க விட்டோம்?

லட்சுமணன் -தெரியல . அங்க இருக்க மணல் மேட்டதான் நீ கட்டிய பாலம்னு சொல்றாங்க.

ராமன் - தமிழ்நாடு வளர்ச்சி அடையுமென்றால் அதை ஆதரிக்கதானே வேண்டும்?

லட்சுமணன் - நமக்கு தெரியுது. குரங்கு படைக்கு தெரியலையே!

குரங்குகள்கொஞ்சம் காலமாக எந்த வேலையும் இல்லாமல் பார்லிமென் டில் கத்திகூச்சல் போட்டே காலம் தள்ளி வந்தது. இப்ப இதை வெச்சு ஆட்சியபிடிக்கலாமா என்று முயற்சி செய்யுது.

தமிழ்நாட்டில் ஒரு கிழட்டு ராவணன் நீங்க எந்த பொறியியல் கல்லூரியில் படிச்சீங்கன்னு கேட்டுட்டானாம்.

ராமன் - நான் எங்கே கல்லூரிக்கு போனேன்? நாம் குருகுலத்தில் அல்லவா படித்தோம்?

லட்சுமணன் - இந்த ராவணனின் தலையை சீவ வேண்டுமென்று ஒரு பிராணிபேட்டி கொடுத்தது. இதுக்கு முன்னால பெரியார்னு ஒரு ராவணன் இருந்தான்.அவன் சிலையின் தலையையும் இதே போலதான் துண்டித்தார்கள். அதனால, ராவணன் படை ரொம்ப கோபமாகி நம் குரங்கு படை ஆபீசின் மீதுபடை எடுத்து அங்கு இருப்பவர்களை உதைத்துவிட்டதாம்.


ராமன் - நம் பக்தர்களுக்கு உதவ தமிழ்நாட்டில் யாருமே இல்லையா ?

லட்சுமணன் - ராவணனுக்கு ஒரு துறு பிடிச்ச போர்வாள் இருக்காம். அப்புறம் ஒரு மந்தி இருக்கு. சில சமயம் நம்மை ஆதரிக்கும்.சில சமயம் நம் பக்தர்களை கொலை கேசில் உள்ளே தூக்கிப் போடும். இதை நம்ப முடியாது.
புஷ்பக விமானத்தில் பயணம் செய்யும்மொட்டைத்தலை பத்திரிகையாளன் இருக்கான். போதையில் பேட்டி கொடுக்கும் சில நடிகர்கள் இருக்காங்க.

ராமன் - நடிகர்களா?

லட்சுமணன் - ஆம். ஆளுங்கட்சியை எதிர்ப்பது என்ற ஒரே பாடத்தை 'மக்' அடிச்சு ஒப்பிப்பாங்க. வேறு பாடம் எதுவும் தெரியாது.

ராமன் - பாவம் , தமிழ்நாட்டு மக்கள். அப்புறம்?

லட்சுமணன் - அப்புறம் நம் படைகள் ஜனாதிபதியிடம் போய் தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியை கலைக்க மனு கொடுத்ததாம்.

ராமன் - யாரெல்லாம் மனு கொடுத்தார்கள்?

லட்சுமணன் - அத்வானி, மோடி..

ராமன் - என்ன மோடியா? அவன் செய்யாத வன்முறையா?என்கவுன்ட்டரா? அவன் ஆட்சியையே கலைக்கலையே! இது என்ன காமெடி!

லட்சுமணன் - காமெடிதான். ஆக, நாம் இப்போ நம் வானரப்படையை காப்பாத்தணும்.

ராமன் - நாம் எப்படி அவர்களை காப்பாத்துவது? நம்மையே புல்லட் ப்ரூப் அறையில் சிறை வெச்சிருக்காங்களே!

மேலும், நமக்கு கோவில் கட்டுவதாக சொல்லி நம் பெயரை பயன்படுத்திக்கொண்டு ஆட்சியையும் பிடித்துவிட்டு கடைசியில் நமக்கே அல்வா கொடுத்துவிட்டார்கள்.இவர்களை நாம் அவசியம் காப்பாத்தணுமா?

நமக்கு பூஜை செய்துவிட்டு எல்லா சுண்டலையும் அவர்களே காலி செய்து விடுகிறார்கள்.

நான் சற்று நேரம் சீதையுடன் உல்லாசமாகஇருக்கப் போகிறேன். நீ வேறு வேலை ஏதாவது இருந்தால் பார்.

வேண்டுமென்றால் அனுமார்@ராமசென்மபூமி.காம் என்ற இமெயில் முகவரியில் உதவி கேட்க சொல்.

Thursday, September 27, 2007

அப்பாவி ஆறுமுகமும் நாசா கண்டுபிடித்த பாலங்களும்


நம்ம அப்பாவி ஆறுமுகம் ஒரு கேள்வி கேக்கறார்.


மனுசன் கட்டற பாலமெல்லாம் நேரா ஸ்கேல் வெச்சு கோடுபோட்ட மாதிரி இருக்கு. கடவுள் கட்டின பாலம் மட்டும்ஏன் வளைஞ்சு கோணையா இருக்கு?


கடலுக்குள்ளே இந்த ரவுண்டு பாலத்தை கட்டினது யாரு?




அமெரிக்காவில் ஆத்துக்கு மேலே இந்த ரெண்டு மலைக்குஇடையில் பாலம் கட்டின கடவுள் யாரு.?

Wednesday, September 26, 2007

ஆதாம் பாலத்தை இடிக்காமல் மாற்று வழி

சேது சமுத்திர திட்டத்தால் சர்ச்சையிலிருக்கும்
ஆதாம் பாலத்தை இடிக்காமல் கப்பல் விடுவதற்கு வேறு
வழிகள் என்ன ? வலைப்பதிவர்கள் எத்தனையோ
பிரச்சினைகளை தீர்த்திருக்கிறார்கள்.

இந்த சிறு பிரச்சினையை தீர்க்க முடியாதா?

ரொம்ப ரொம்ப யோசித்து கிடைத்தது இந்த யோசனை.

ஒரு பெரிய A4 காகிதத்தை எடுங்கள். காகிதத்தை சதுரமாக்குங்கள்.
காகிதத்தை நான்காக மடியுங்கள். இப்பொழுது இரு ஓரத்திலும்
இருக்கிற காகிதத்தை முக்கோணமாக மடியுங்கள். இரண்டு பக்கமும்
பிடித்து இழுத்தால் கப்பல் ரெடி.

அவ்வளவுதான். கடலில் கொண்டு விடுங்கள்.

Tuesday, September 25, 2007

சீதைக்கு ராமன் சித்தப்பா

தசரதனுக்கு பதிலாக அவன் தம்பிக்கு பட்டம் சூட்டியதால் வெறுத்துபோனான். தசரதனின்
தம்பிக்கு ராவணன் (thaoloun lao) பிறந்தான். இவனை யாராலும் வெல்ல முடியாத
அளவு சக்தி படைத்தவன். இவனை போதிசத்வரால் மட்டுமே கொல்ல முடியும்.
ராவணன் தன் பெரியப்பா மகளான (nang chandha) வை தன் அரண்மனையில்
கொண்டு வைத்திருந்தான். தசரதனுக்கு புத்தரின் அவதாரமாக ராமன், இலட்சுமணன்
என்று இரட்டையர் பிறந்தனர். இவர்கள் தங்கள் சகோதரியை ராவணணிடமிருந்து மீட்க
அவனுடன் போர் செய்தனர். என் கணவனை கொன்று விடாதீர்கள், மன்னித்து விடுங்கள்
என்று சீதா ராம லட்சுமணரிடம் கெஞ்சினாள். அதனால் அவர்கள் ராவணணை
மன்னித்து விட்டார்கள். இதற்கு பரிசாக ராவணன் நீரிலும், விண்ணிலும், நிலத்திலும்
போகக்கூடிய படகை ராமனுக்கு கொடுத்தான். ராம லட்சுமணர்கள் நிறைய
பெண்களை திருமணம் செய்து கொண்டார்கள். ராமர் திருமணத்தில் ராவணனும்
கலந்து கொண்டான்.

ராவணன் இலங்கையில் சென்று தங்கினான். அவன் மனைவியின் மறு
அவதாரமாக ஒரு பெண் குழந்தை பிறந்தது (nang sida) . பிறந்தவுடனேயே
அவள் ராவணனை கொல்லப் பார்த்தாள். அதனால் அவளை தண்ணீரில் வைத்து
அனுப்பி விட்டான் ராவணன். ராவணன் சீதையை தன் மகள் என்று தெரியாது
அவளை விரும்பினான். அவளை மணக்க வில்லை எடுக்க
முயற்சி செய்து தோல்வி அடைந்தான். ஒரு ரிஷி இவனுக்கு சீதாவைப் போலவே
ஒரு பெண்ணை உருவாக்கி கொடுத்தானாம். ஆனாலும் அவனால் சீதையை
மறக்க முடியவில்லை. ராமன் வந்து வில்லை எடுத்து, சீதையை மணம்
செய்து கொண்டான்.

பின்னர் வழக்கமான கதை... சீதையை ராவணன் கொண்டு செல்ல
ராமன் போருக்கு போனான். அப்பொழுது பாலம் கட்டினார்கள். ராவணனை வென்று
சீதாவை மீட்டு வந்தார்கள். அரண்மனையில் ஒரு நாள் சீதா ராவணனின்
படத்தை வரைந்தாள். கோபம் வந்து ராமன் சீதாவை சிரச்சேதம் செய்யச்
சொன்னான். பின்னர் லட்சுமணனின் உதவியுடன் சீதா தப்பிச் சென்றாள்.

ஆக... சீதைக்கு ராமன் சித்தப்பா.சரிதானா?

மத நம்பிக்கைகளை கேள்வி கேட்ட கலீலியோவும், கருணாநிதியும்

"But to affirm that the Sun is really fixed
in the center of the heavens and that the
Earth revolves very swiftly around the Sun is
a dangerous thing, not only irritating the
theologians and philosophers, but injuring
our holy faith and making the sacred scriptures
false."

Robert Bellarmine, Cardinal of the
Roman Catholic Church and the foremost
Vatican theologian of the seventeeth century.

இதை படிச்சா டென்சனா இருக்கா?

முன்னே ஒரு காலத்துல சூரியன் ஒரே இடத்துல நிக்குது, பூமிதான் அதை
சுற்றி வருது என்று சொன்ன கலீலியோவை மத நம்பிக்கை என்ற பெயரால்
கொடுமைப்படுத்துவோம் என்று மிரட்டி அடிபணிய வைத்தார்கள். ஒரு கட்டத்தில்
பைபிலில் உள்ளதை எதிர்த்து பேசினால் விதவிதமான ஆயுதங்களைக்
கொண்டு சித்ரவதை செய்தார்கள். இது போன்ற மதநம்பிக்கைகளை கேள்வி
கேட்டுதான் அறிவியல் வளர்ந்தது.

மதத்தை எதிர்ப்பவனை கழுவில் ஏற்றிய காலங்கள் எல்லாம் மூட்டை
கட்டியபின் இந்த 21 ஆம் நூற்றாண்டில் நாக்கை எடு, கழுத்தை எடு
என்று பேசும் இவர்கள் கையில் முழு அதிகாரம் கிடைத்தால் நாடு எங்கே
போகும்?

மத உணர்வுகளை புண்படுத்தக்கூடாது என்று கூச்சலிடும் ராம பக்தர்களுக்கும்,
இதர மத உணர்வாளர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.

கலைஞர் in full form,தினமலரின் பொய்கள்

செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்வர் அளித்த பதில்களும் வருமாறு:


கேள்வி: ராமர் பாலத்தை இடிக்க விட மாட்டோம். அப்படியே மீறி இடித்தால், ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் அந்த அதிகாரிகளை தண்டிக்காமல் விட மாட்டோம்என உமாபாரதி பேசியுள்ளாரே..


கருணாநிதி: சேது சமுத்திரத் திட்டத்திற்கு பாஜக கூட்டணி அரசு அனுமதி அளித்தபோது, அந்த அமைச்சரவையில் உமாபாரதியும் இடம் பெற்றிருந்தார்.அப்போது அவருக்கு உயிர் இருந்ததா என்பது தெரியாது


கேள்வி: திமுகவுடன் சித்தாந்தப் போர் தொடங்கியிருப்பதாக இல.கணேசன் கூறியுள்ளாரே..
கருணாநிதி: அவர்கள் நிலைக்கு அவர்களால் போர் (ஆழ்துளைக் கிணறு) தான் போட முடியும்.போரிட முடியாது.

கேள்வி: கண்ணகி மதுரையை எரித்ததை நம்புகிறீர்கள், ஆனால் ராமரை நம்ப மாட்டீர்களா என்று உங்களைப் பார்த்து விஜயகாந்த் கேட்டிருக்கிறாரே.


கருணாநிதி: எனது பூம்புகார் படத்தில் கடைசிக் காட்சியை எப்படி வைத்துள்ளேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்றார் கருணாநிதி.

(பூம்புகார் - கடைசி காட்சியில் கண்ணகியின் காலில் குத்து விளக்கு தட்டி, அதனால் அரண்மனையும் மதுரையும் எரிந்து போகும். குத்துவிளக்கு இப்படி ஒரு பயங்கர அழிவு ஆயுதமா, அப்படிப்பட்ட விளக்கை சாதாரணமாக நாட்டில் வைத்திருப்பார்களா என்று யோசித்து மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம். )

உங்கள் தலையை வெட்ட சொல்லவில்லை என்று வேதாந்தி மறுத்துள்ளார். பிறகு எதற்கு அவரை கைது செய்ய வற்புறுத்துகிறீர்கள்?
அவர் பகவத் கீதையை குற்றம் சாட்டியுள்ளார். அதாவது நான் சொல்ல வில்லை. பகவத் கீதை தான் சொல்லி இருக்கிறது என்கிறார்.(இது என்ன கதை, வலைப்பதிவாளர்களே?)


இன்றைய தினமலர் பொய்கள்

--------------------------------------

1. கருணாநிதியை 'விமர்சித்த' வேதாந்தி


2.சேது சமுத்திர கால்வாய் திட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதற்கு எதிராகச் செயல்பட்டு வரும் மதவெறிக் கூட்டத்தை சார்ந்த ஒருவர் தி.மு.க., தலைவரின் தலை, நாக்கையும் அறுத்து வருபவருக்கு அதற்கு ஈடாகத் தங்கம் பரிசளிக்கப்படும் என்று பேசியதன் மூலம் மதவெறி துாண்டப்பட்டுள்ளதால், ...
(அடப்பாவமே எந்த அமைப்பு என்று கூட தினமலர்காரனுக்கு தெரியாதா?)

Tuesday, September 18, 2007

ராமர் பாலம், ஏசி பஸ்சும் சின்னஞ்சிறு உலகம் நாகேசும்

இந்த ராமர் பாலம் என்ற ஆதாம் பாலத்தை இடிக்கக்கூடாது. வேறு வழியில் சேது திட்டத்தை நிறைவேற்றட்டும். கலைஞர் இதில் ஜகா வாங்கினாலும் ஒன்னும் குடி முழுகாது. வழக்கமா விழற ஓட்டு விழப் போகுது. யாருமே பல வருசமா கண்டுக்காத ராமர் பாலத்துக்கு திடீர்னு பூஜை என்ன, யாகம் என்னன்னு ஒரே அமர்க்களம். இவ்வளவு நாளா இந்த பாலம் அங்கேயேதானே இருக்கு? எந்த சாமியாராவது கடந்த நூற்றாண்டுகளில் அங்கே பூஜை செய்திருப்பார்களா? முழுகிப்போகும்கப்பல் பயணிகள்(காவி கோஷ்டி) கிடைச்சதை விடக்கூடாத்ன்று இந்தபாலத்தை பிடித்து தொங்குது. நீயே வெச்சுக்கோ உன் பாலத்தை என்றுகொடுத்துவிட்டால், சீ வேணாம் என்று ஓடிப் போய்விடுவார்கள். மீண்டும்பல வருஷத்துக்கு எவனும் இந்த பாலத்தை பூஜை, யாகம்னு தீண்டப்போறதில்லை. நாமும் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்.

சின்னஞ்சிறு உலகம் படத்தில் நாகேஷ் எதை பார்த்தாலும் அழுவார்.கல்யாண வீட்டுக்கு போனால் கல்யாண வீடு தீப்பற்றி எரிந்தால் என்ன ஆகும்னு செனைச்சு அழுவார். இந்த கதையின் இத்தாலிய வடிவம்சமீபத்தில் படித்தேன். ஒரு கல்யாணப் பெண் ஒயின் பாட்டில் எடுக்கபோவாள். அங்கு கிடக்கும் கண்ணாடி சில்லை பார்த்துவிட்டு அழுவாள். அவளுக்கு கல்யாணமாகி குழந்தை பிறந்து ஏழு வருடம்ஆகி அந்த கண்ணாடி கீறி குழந்தை இறந்தால் என்ன ஆகும் என்று கற்பனைசெய்து அவளும், அவள் குடும்பத்தாரும் சேர்ந்து அழுவார்கள்.

எனக்கும் சென்னையில் புதிதாக ரிலீசாயிருக்கும் ஏசி பஸ்ஸை பார்த்து மகிழ்ச்சியை விட வருத்தம் தான் வந்தது. இந்த பஸ் இவ்வளவுஅழகா இருக்கே, இந்தியா வெளிநாடு போல ஆயிடுமா என்று யோசிக்கிறவேளையில், நம் உடன் பிறப்புகளின் நியாபகமும் வந்து தொலைக்கிறது.யாரவது ஒரு தலைவர் மோட்சத்துக்கு போனால் பத்து பஸ்ஸாவதுகல்லடி படுமே! கொடநாட்டில் நடவடிக்கை எடுத்தால் சென்னையில்பஸ் பத்தி எரியுமே! எங்கம்மாவே தோத்தப்புறம் உங்களுக்கு சொகுசு பஸ்கேக்குதா என்று உடன்பிறப்புகள் கொந்தளிக்கும்போது இந்த பஸ்சுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க போகிறார்கள்?

Monday, September 17, 2007

2011 இல் நானே முதல்வர்

சமீபத்தில் இந்த 2011இல் நானே முதல்வர் என்று கோஷம் போடற லிஸ்ட் நீண்டுகிட்டே போகுது. லிஸ்டில் முதலில்இடம் பிடித்தவர் தமிழ்குடிதாங்கி. ஏற்கெனவே இருக்கும் கட்சிகளால் நொந்து போயிருந்த மக்களை பயன்படுத்திக்கொள்ள சரியான நேரத்தில் குதித்தார் நம் கேப்டன். இது போதாது என்று நம்ம நாட்டாமையும் களத்தில் குதிச்சார். இவங்கெல்லாம் முதல்வர் கனவு கண்டா நான் சும்மா இருப்பேனா என்று தட்டி பார்த்த கொட்டாங்குச்சியோடு நம்ம டி.ஆரும் குதிச்சுட்டார். இதுல யார் எந்த கட்சியோட உள் ஆளுன்னு வேற புரியமாட்டேங்குது.


இன்னும் குழந்தை நட்சத்திரங்கள் எல்லாம் குதிப்பதற்குள் ,இந்த பொன்னான நேரத்தில் நான் ஏன் 2011 இல் முதல்வராகக்கூடாது? தமில்நாட்டை தமிலந்தான் (அல்லது தமிலி) ஆள வேண்டும்என்பதுதான் எம் கட்சியின் கொள்கை. அதனால் நானே 2011 இல் முதல்வராக் போறேன். வலைப் பதிவு மக்களே உங்கள் பொன்னான வாக்குகளைஎனக்கே போட்டு அப்படியே உங்கள் சொந்த பந்தங்களிடையே நம் கட்சியின்பெயரை பரப்புங்கள்.


சரி கட்சிக்கு பேரு வேணுமே. அ.உ.வ.த.தி.தே கழகம் அகில உலகவலைப்பதிவு தமில திராவிட தேசிய கழகம். நியாபகம் வெச்சுக்க கஷ்டமாஇருந்தா நம்ம கட்சி சின்னமான 'எலிக்குட்டி'யை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.(ஒரிஜினல் எலி இல்லை. கம்ப்யூட்டர் எலி).


விளம்பரத்துக்கு இருக்கவே இருக்கு நம் தமிழ்மணம் மற்றும் வேலையத்தகுமுதம் ரிபோர்ட்டர். இப்ப கட்சிக்கு தொண்டர்களும், கொஞ்சம் கொளுகைகளும் வேணும். பரவாயில்லை. இணையத்திலிருந்து கொளுகைகளை cut and paste பண்ணிக்கலாம்.நம்ம பொருளாதார கொளுகை ரொம்ப புரட்சிகரமானது. தமில்நாட்டில்அனைவருக்கும் வீட்டுக்கு ஒரு ஐ.டி வேலை. எல்லாரும் ஐ.டி. வேலை செய்துவிட்டு,மற்ற பொருள்களை பஞ்சாப் அல்லது மும்பையிலிருந்து இறக்குமதி செஞ்சுக்கலாம். அம்புடுதேன்.

வீட்டுக்கு வீடு open source நிரலிகளை டவுன்லோட் செய்து ஒருசிடியில் போட்டு வினியோகிப்போம்.அப்பப்ப ஏதாவது விழா எடுப்போம். வலைப்பதிவு கூட்டங்களுக்கு போண்டா இலவசம்.


ஆ. அரசியல் செய்ய எதையாவது எதிர்த்து குரல் கொடுக்கணுமே. அமிஞ்சிக்கரை வாராவதி மேலிருக்க பாலம் பாட்டனுக்கு பாட்டன் காலத்துல அகத்திய முனிவர்கட்டினதுன்னு ஒரு போராட்டம் செஞ்சுடலாம்.'வாராவதி பாலம் பாதுகாப்புஇயக்கம்' ஆரம்பிச்சுடலாம்.


கழகத்தில் கொ.ப.செ, இளைஞர் அணி தலைவர், வட்ட, மாவட்ட செயலாளர்போஸ்ட்டுகள் காலியா இருக்கு. first come first serve அடிப்படையில்பதவிகள் ஒதுக்கப்படும். ஆகவே அ.உ.வ.த.தி.தே. கழகத்திற்கு திரண்டு வாருங்கள்.அப்படியே ஒரு லெட்டர் பேடும் கொண்டு வரவும். கட்சித் தலைவிக்கு ஒரு நல்ல பட்டப்பெயரும் கொண்டு வாருங்கள். நல்ல பெயர் சொல்பவருக்கு ஒரு எலிக்குட்டி பரிசு.

Wednesday, September 12, 2007

மருத்துவ மாணவர்களே, கிராம சேவையை புறக்கணியுங்கள்

அன்புமணி கொண்டு வரும் கிராம சேவை திட்டம் அநியாயமானது. இதனால் பல மருத்துவ மாணவர்களின் வாழ்வோடு விளையாடுகிறார்கள். மருத்துவர்கள் மட்டும் ஏமாளிகளா என்ன? அடிப்படை வசதி, ரோடு மின்சாரம் இல்லாத கிராமத்துக்கு நீங்கள் போய் வேலை செய்ய வேண்டும் என்று தலையெழுத்தா என்ன ?

இன்னும் 12 வருடங்கள் 110 நாட்களில் இந்தியா வல்லரசு ஆகப் போகிறது. இது போன்ற கிராமங்களை 'வல்லரசு இல்லாத இந்தியா' என்றோ இந்தியா-2 என்றோ தனி நாடாக அறிவித்துவிடவேண்டும். ரோடும் மின்சாரமும் இருந்தால் போதுமா? பொழுதுபோக்குக்கு இந்த கிராமங்களில் டிஸ்கோ உண்டா? ஒருபார் உண்டா? நீங்கள் எல்லாம் கூலி தொழிலாளர்களா என்ன? இந்த அராஜகமான திட்டத்தை முழுமூச்சுடன் எதிர்க்க வேண்டும்.

அப்படியே அரசு கல்லூரியில் நீங்கள் படிப்பதற்காக அரசு செலவு செய்யும் பணத்தை அரசிடமே சுயமரியாதையுடன் விட்டெறியவும். என்ன மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு முப்பது லட்சம் இருக்குமா? இனிமேல் தனியார் மருத்துவ கல்லூரிகளிலேயே மருத்துவம் படித்தால் போதுமானது. இந்த செய்தியை கட் அந்த் பேஸ்ட் செய்து அனைத்து மாணவர்களுக்கும் அனுப்பும் உரிமை அளிக்கப்படுகிறது.