ullal

Tuesday, October 16, 2007

வந்தேமாதரம்- பிஜேபி ஸ்டைல்

4/8/2007
பிஜேபி இந்திய-யுஎஸ் அணுடக்தி ஒப்பந்தத்தை எதிர்த்தது

http://www.hindustantimes.com/storypage/storypage.aspx?id=987616b2-f242-429c-b5dc-c50ea2bc1381&ParentID=2282c82d-3709-40c6-92f3-28e5669e3229&&Headline=BJP+opposes+Indo-US+nuclear+deal
ஆகஸ்ட் 28http://www.hindustantimes.com/StoryPage/FullcoverageStoryPage.aspx?id=8b2dcaa5-e05c-4255-bd47-86dc98d66bc4Nucleardealimbroglio_Special&MatchID1=4571&TeamID1=8&TeamID2=2&MatchType1=2&SeriesID1=1146&PrimaryID=4571&Headline=BJP+leaders+feel+pressure+to+back+nuclear+deal




ஆஉக் 30BJP'சs rethinking on n-deal isolates the Lefthttp://in.rediff.com/news/2007/aug/30guest.htm


Dec 10 2006பிஜேபி அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவை அவமானப்படுத்துவதாக கோஷம்


Oct 13 2007பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வரும்போது இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த முயற்சிப்பார்களாம்.
http://in.news.yahoo.com/071012/48/6lvzw.html

Wednesday, October 10, 2007

ரிடையர் ஆக வேண்டிய பெருசுகள்-சங்கராச்சாரி, சோ, சுஜாதா

ரிடையர் ஆக வேண்டிய லிஸ்டில் கருணாநிதியோடு இன்னும் நிறைய பேர்இருக்கிறார்கள். எனக்கு தெரிந்தது இந்த இருவர். விரைவில் ஞானி இவர்களைப் பற்றியும் எழுதுவார் என்று நினைக்கிறேன்.
இந்த ஜெயேந்திரரும் எவ்வளவு நாள்தான் சங்கராச்சாரியாக இருப்பார்?இவருக்கு வயது எழுபதை தாண்டியிருக்குமென்று நினைக்கிறேன். இவர்பெறாத பரிசுகளோ, கனகாபிஷேகமோ இல்லை. இவர் பெறாத அவதூறுகளும் இல்லை. இவர் மேல் போலீஸ் வழக்கு போடாத செக்க்ஷனும்இல்லை.இவர் ஏறாத கோர்ட்டும் இல்லை. இவர் 'மக் ஷாட்' வராதபத்திரிகையும் இல்லை. இன்னும் எத்தனை நாள்தான் இந்த சங்கராச்சாரிஎன்ற முட்கிரீடத்தை சுமந்து திரிவார்.? அடுத்த பெரியவாக்கு வழி விட்டுவிட்டுக்ருஷ்ணா, இந்த்ரா என்று காலம் தள்ள வேண்டிய வயதில் இவருடைய பக்தர்கள் இவரை இப்படி துன்புறுத்தலாமா?

ரிடையர் ஆக வேண்டிய இன்னொருவர் சிரந்த நகைச்சுவை நடிகர்,பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என்று எல்லா பரிமாணங்களிலும் கலக்கிய திரு.சோ. இவருக்கும் வயது எழுபதை தாண்டி இருக்குமென்று நினைக்கிறேன். இவர் பெறாத பாராட்டுகளும் இல்லை. சகுனி,சோமாறி என்று இவர் வலையுலகில் பெறாத வசவுகளும் இல்லை. இவர்பல காலமாகவே உளறி வந்தாலும், சமீபத்தில் கொஞ்சம் அதிகமாகவேஉளறி வருகிறார். யாராவது பேட்டி கண்டால் புஷ்பக விமானம், ராமர்பாலம் என்று முட்டாள்தனமாக உளறுகிறார். போயிங் விமானத்தைபார்த்தால் அதோ நம் வேத காலத்து புஷ்பக விமானம் என்று பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்கிறார். குழந்தைகள் எங்காவது பாலம் கட்டி விளையாடினால் "ஐ, ஸ்ரீராமர் கட்டிய பாலம்" என்று தொட்டு வணங்குகிறார். குமுதம் தான் இன்னும் எத்தனைவருசத்துக்கு சோவின் பேட்டியை போடும்? அடுத்த தலைமுறையில் இவர் இடத்தை எஸ்.வி.சேகர் போன்ற லூசுகளிடம் கொடுத்துவிட்டு இவர் ஏன்வீட்டில் ஓய்வெடுத்து ராமாயணம், மகாபாரதம் படிக்கக்கூடாது?


ரிடையர் ஆக வேண்டிய லிஸ்டில் அடுத்ததாக இருப்பது எழுத்தாளர்,பொறியியலாளர், சினிமா கதாசிரியர் திரு சுஜாதா. இவரும் பல விதமான கதைகளை ஆங்கிலத்திலிருந்து காப்பியடித்து எழுதிவிட்டார். இவரைபாராட்டுபவர்கள் பலர். இவர் வசனம் எழுதிய பாய்ஸ் திரைப்படத்தை திட்டாத ஆட்களே இல்லை. இன்னமும் எழுபது வயதைத் தாண்டி அயோக்கியா மண்டபம் போல அயோக்கியத்தனமான கதைகளைஎழுதிக் கொண்டிருக்கிறார். இந்த அயோக்கிய வேலையை அடுத்ததலைமுறை எழுத்தாளர்களுக்கு இடம் விட்டு விலகி க்கொண்டு ஏதாவது இன்க்லீசு படம் பார்த்து காலத்தை ஓட்டலாம்.

இவர்களுடைய ரசிகர்கள் இது குறித்து தீவீரமாக சிந்திக்க வேண்டும்.

Friday, October 05, 2007

தமிழ்நாட்டில் எத்தனை ராமர் கோயில்கள் உள்ளன?

இது பரீட்சை இல்லை. எனக்கு நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் இது. நான் இது வரை தமிழ்நாட்டில் ராமருக்கு தனியாக கோயிலை பார்த்ததே இல்லை.பெருமாள் கோவிலில் ஒரு ஓரத்தில் ராமருக்கும் ஒரு சன்னிதி இருக்கும். பெருமாள் கோவில்களும், ஆஞ்சநேயர் கோவில்களும் நிச்சயமாக நிறைய உண்டு.


சங்க கால பாடல்களிலேயே ராமாயணம் இருக்கும் போது ராமனுக்கு என்றுநிறைய கோவில்கள் இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு முச்சந்தியிலும் பிள்ளையாரும், அம்மனும் இருக்கும் அளவு இவர் பிரபலமாக இல்லை என்று நான்நினைக்கிறேன். உங்கள் ஊரில் உள்ள ராமர் கோயில்களை லிஸ்ட் போடுங்கள்.

Thursday, October 04, 2007

க்ரீன்ஸ்பேனும் இந்திய விவசாயிகளும்

க்ரீன்ஸ்பேன் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவராக இருந்தவர்.இவர் வாயை திறந்து ஒரு முத்து உதிர்த்தால் பங்கு சந்தை ஆடிவிடும்.
இந்திய விவசாய workforceஐ குறைக்க வேண்டும்.விவசாய தொழிலாளர்களை தொழிற்சாலை உற்பத்திக்கு மாற்ற வேண்டும்.
விவசாய உர, விதை மானியத்தை நிறுத்த வேண்டும் (அதே நேரத்தில் அமெரிக்காவில்விவசாயிகளுக்கு பில்லியன் கணக்கில் மானியம் கொடுப்பதை நிறுத்த சொல்லிசிலர் போராடுவதை ஒரு ஓரமாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.இதில் பெரும்பகுதியை அமெரிக்க விவசாய கார்பரேசன்களுக்குதான் போகிறதாம்.)
தொழிலாளர் நலச் சட்டங்களை தூக்கி உடைப்பில் போட வேண்டும்.

The manufacturing-for-export model that India urgently needs to embrace has an impressive record of success elsewhere in Asia. It is a model that employs in mass urban manufacturing centres low-wage rural workers with some education.

இந்த தொடுப்பில் போய் ( http://www.rediff.com/money/2007/sep/21pm.htm )அவர் இந்திய விவசாயிகளுக்கு போட்டு வைத்திருக்கும் திட்டங்களை படியுங்கள்.
படித்து டென்சனாகி விடாதீர்கள்.

Wednesday, October 03, 2007

மத இந்துக்களே - பூமியில் கிணறு,சுரங்கம் வெட்டலாமா?

இந்த பூமி முழுவதும் புருஷனின் உடலிலிருந்து ப்ரம்மா படைத்ததாக 80 கோடி இந்துக்களின் வேதம் சொல்லுகிறது.அனேகமாக அனைத்து மதங்களும் இதையே சொல்கிறது என்று நினைக்கிறேன். இதில் ராமர் பாலம் மட்டும் ஏன் இடிக்கக்கூடாது?

பூமியில் எங்குமே கிணறு நோண்டக்கூடாது, சுரங்கம் வெட்டக்கூடாது, நிலத்தை வெட்டி தென்னை மரம் நடக்கூடாது. குழி வெட்டி கட்டட அஸ்திவாரம் போடக்கூடாது. கொடநாட்டில் ஒயிட் ஹவுஸ் கட்டக்கூடாது. ப்ரம்மா படைத்த ஆற்றை திருப்பி நர்மதா அணை கட்டக்கூடாது. ராமருக்கு கோயில் கூட கட்டக்கூடாது.

சிலர் இப்படி செய்வது 80 கோடி இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது.இதற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும்.

tasmAt virAd ajAyata virAjo adhipUrusha : sa jAto atyaricyata pashcAd bhUmimatho pura: 5

(இவர்களிடம் லாஜிக் பேசுவது வேஸ்ட் என்றாலும் சும்மா இருக்க முடியவில்லை.)

Tuesday, October 02, 2007

முரண்பாடே உன் பெயர்தான் ஜெயலலிதாவா?

முரண்பாடே உன் பெயர்தான் ஜெயலலிதாவா?


முரண்பாடே உன் பெயர்தான் ஜெயலலிதாவா