ullal

Monday, January 28, 2008

திருமா இளையராஜாவை இழிவு படுத்த வேண்டாம்

இப்பவெல்லாம் பத்ம பூஷன் , விபூஷனுக்கு
பேரிச்சம் பழம் கூட கிடைக்காது. பாரத் ரத்னாவும்
அதேபோல தான். சிவாஜிக்கு என்ன குடுத்தார்கள்? தேர்தல்நிதி தரும் தொழில் அதிபர்களுக்கு தரும் கண்றாவி விருதுகளை கொடுக்கச் சொல்லி மேஸ்ட்ரோ இளையராஜாவை இழிவுபடுத்த வேண்டாம்.

http://thatstamil.oneindia.in/movies/specials/2008/01/28-thiruma-urges-center-honour-illayaraaja-rathna.html

Sunday, January 27, 2008

வீ ரவிச்சந்திரன் - துக்ளக் சோவை கேளுங்க

நம்ம வீ ரவிச்சந்திரன்(??) தினமலர் இது உங்கள் இடத்தில் நல்ல கேள்வி கேட்டிருக்கிறார். மாயாவதிக்கு 24 கோடி செலவில் பாதுகாப்புக்கு செலவு செய்வதா? இவர்கள் எப்படி மக்களை பாதுகாப்பார்கள் என்று கேட்கிறார். 24 கோடி ஒரு மாதத்துக்கா அல்லது ஒரு வருடத்துக்கா என்றும் கேட்கிறார். நாம் மோடியின் ஒரு நாள் சென்னை விசிட்டுக்கே கால் - அரை கோடி செலவு செய்கிறோம் அதுவும் ஒரு தனியார் விழாவுக்காக. உங்க கேள்வியை ஏன் துக்ளக் பத்திரிகைக்கு அனுப்ப கூடாது? சோ சரியான பதில் தருவார்.

Saturday, January 26, 2008

சாரே ஜஹான் சே அச்சா

கிளிக்கி படிக்கவும்.

http://www.ibnlive.com/news/republic-of-india-turns-58-nation-celebrates/57396-3.html


http://www.ibnlive.com/news/manipur-women-protest-against-army-in-new-delhi/57411-3.html

http://www.ibnlive.com/news/harbhajan-made-racist-remarks-procters-report/57416-5.html

http://www.ibnlive.com/news/living-with-fear-india-unsafe-say-women/57236-3.html

http://www.ibnlive.com/videos/57043/mumbai-cj-opens-reliance-energys-can-of-worms.html

http://www.dnaindia.com/report.asp?NewsID=1049554

Sunday, January 20, 2008

தினமலர் - ஆண் ஸ்ட்ரிப் க்ளப் கலிகாலமா?

http://www.dinamalar.com/2008jan20/general_imp7.asp - இங்கு சென்று மாஸ்கோ செய்தி பாருங்கள். தினமலருக்கு இது கலிகாலமா தெரியுது. பெண்களை தேவர்களுக்கு தாசியாக வைத்திருந்தது நல்ல காலமா? என்ன ஓய இது? பத்திரிகை விக்க செய்தியை தேடி பிடித்து போட்டுவிட்டு என்ன வேசம்டா சாமி ?

Thursday, January 17, 2008

40 கோழி முட்டைகள் வாங்குவது எப்படி? - சோ

முதலில் ஒரு கோழி முட்டை வாங்க வேண்டும். பின்னர் கையோடு கொண்டு சென்ற பக்கெட் தண்ணீரில் முட்டையை போட வேண்டும். முட்டை முழுகினால் நல்ல முட்டை. இப்படியே 40 முட்டைகளும் சோதித்து வாங்க வேண்டும் . சந்தேகம் இருப்பவர்கள் செல்வி ஜெயலலிதாவிடம் கேட்கலாம்.

அறிவாளி சோவின் ஆலோசனை கேட்டு தைரியமாக அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்தார். கோயிலில் ஆடு கோழி வெட்ட தடை சட்டம், மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்தார். பாராளுமன்ற தேர்தலில் 40 கோழி முட்டைகள் வாங்கினார். பின்னர் ஆலோசனை சொன்னவர்களை காராக்ருகத்திற்கு அனுப்பினார் என்பது வேறு விஷயம்.

Tuesday, January 15, 2008

சுப்ரீம் கோர்ட் பின்வாங்கியது

சுப்ரீம் கோர்ட் பின்வாங்கியது

இப்படி எந்த பத்திரிகையும் தலைப்பு போடாது என்பதால் நான் போட்டேன்.



வேறு ஒன்றும் இல்லை.


:):)

Sunday, January 13, 2008

மோடி - இது உங்கள் இடம்

தினமலர் எப்படியும் பிரசுரிக்காது என்பதால் இங்கே பதிக்கிறேன்.
நம்ம போலீஸ்காரா இப்பல்லாம் ரவுடிகளை பிடிப்பதை விட வி ஐ பி களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு தான் அதிக நே ரம் செலவு செய்யறா ஓய. ஒரு ஒத்தை ஆள் சென்னை வருவதற்கு ஐயாயிரம் போலிசும் நம்ம வரிப்பணமும் செலவாகுது ஓய்.

அந்த காலத்துல நேரு ஓப்பன் ஜீப்புல ரோட்டில் போவார். அரசியல் வாதிகளின் பாதுகாப்புக்கு இப்படி செலவு செய்வது சரி இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு சொல்லி இருக்கு. லோகமே சரி இல்லை ஓய்.:)

Thursday, January 10, 2008

தமிழ்மணத்துக்கு ஒரு கேள்வி

தமிழ்மணத்தை நிறுவனங்கள் விளம்பரத்துக்காக பயன்படுத்துவதை அனுமதிக்கிறதா? தமிழ்மணத்தில் இப்படி மறைமுக விளம்பர பதிவுகளை சேர்ப்பதற்கு கட்டணம் ஏதும் உள்ளதா? அல்லது ஓசி சர்விசா?

Wednesday, January 09, 2008

ஸ்ரீ ஸ்ரீ துக்ளக் மஹாராஜா ப.சிதம்பரம் அய்யாவும் இந்திய விவசாயமும்

முதலில் இந்திய விவசாயிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. இது கிண்டல் இல்லை. பொருளாதார பதிவுகள் பிடிக்காதவர்கள் இங்கேயே ஜூட் விடலாம்.

சிதம்பரம் அய்யா வாயை திறந்தால் பங்கு மார்க்கெட் ஜுரம் வந்தா மாதிரி ஏறும், இறங்கும். கடந்த சில நாட்களாக அய்யா உணவு கையிருப்பைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார். உலக அளவில் எத்தனால் பித்தம் தலைக்கு ஏற உலகம் முழுவதும் உணவு பொருட்கள் விலை பயங்கரமாக ஏறிவிட்டது. பல நாடுகளில் கோதுமை பயிர் சரியாக விளையாததாலும் நிலங்கள் எத்தனாலுக்கு திருப்பி விடப்பட்டதாலும் கோதுமை விலை தாறுமாறாக ஏறிவிட்டது. தேசிய கட்சிகள் போட்டியிடும் வட மாநிலங்களில் கோதுமை கிடைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சி தேர்தலில் மொத்தமாக அடி வாங்கும் என்ற சூழ்நிலையில் திடீரென்று வல்லரசு இந்தியாவுக்கு தேவை இல்லாத கோவணாண்டி விவசாயிகளின் மீது கரிசனம் கூடி உள்ளது. கோதுமை விவசாயிகளின் மீது பொழிந்த அன்பு தென்னாட்டு நெல் விவசாயிகளின் கோபத்தையும் தூண்டி உள்ளது. சிதம்பரம் அய்யா வருங்காலத்தில் உணவு கையிருப்பு பிரச்சினைதான் என்று டெல்லியில் இங்க்லீசுல சொல்லிட்டு தமிழ்நாட்டுல வந்து ரேசன் கடை சரியில்லை னு சொல்றார். எப்படியோ இவரால் இந்தியாவுக்கு ஆஸ்கர் அவார்டு எப்படியும் கிடைத்துவிடும். இப்ப இந்திய விவசாயிகளை கோதுமை உற்பத்தியை பெருக்க சொல்றாரு. அவங்க தான் பரலோகம் போயிட்டாங்களே!
http://news.bbc.co.uk/2/hi/in_depth/7004409.stm


இன்னொரு பக்கம் நெல் , கடலை விளைந்த நிலங்கள் கார் உதிரி பாக ஆலைகளாகவும் ஐடி நகரங்களாகவும் மாறுகிறது. பில்டர்கள், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்களும் விவசாய நிலத்தை வாங்கி இல்லாத ஐடி கம்பெனிகள் இருப்பதாக சொல்லி நிலம் விற்று கொழுத்து வருகிறார்கள். இதுக்கு நடுவில பயோ டீசல் விசிறிகள் வேறு. விலை நிலங்களை கரம்பை என்று சொல்லி வாங்க பல விதமான ப்ராடுகளையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். http://www.itvidya.com/farmers_use_google_earth_to_get_right_compensation


வருங்காலங்களில் உணவு பொருட்கள் விலை ஏறும் என்பதால் விவசாயிகள் காட்டில் இனி மழைதான். புத்தி உள்ள அரசாங்கம் சென்செக்சை மட்டும் பார்க்காமல் நீர் பாசனம் , நில வளம் இதை சரி செய்யும். துக்ளக் அரசாங்கம் என்ன செய்யுமோ யார் கண்டார்கள்?