ullal

Friday, July 18, 2008

அணுசக்தி ஒப்பந்தம்

இடதும் வலதும் போடுகிற கூச்சலில் இடையில் இருப்பவர்களுக்கு மண்டை தான் குழம்புது. உன்னிப்பாக படிக்க நேரம் இல்லாததால் முடிந்தவரை செய்த ஆராய்ச்சியில் இந்த பதிவு எழுதப்படுகிறது.
முதலில் இந்தியாவின் எரிசக்தி தேவைகள் அதிகரித்துள்ளது என்பது எல்லாருக்கும் தெரியும். இது முழுவதும் இந்திய மக்கள் ஏசி அறையில் உறங்குவதால் ஏற்பட்ட தேவை இல்லை. வெளிவாட்டுக்கு துணி தைத்து, கார் தயாரிப்பதலும், iam john smith from chicago என்று போனில் பொய் சொல்வதற்கும் எரிசக்தி செலவாகும். தினம் ஒரு கார் தொழிற்சாலை ஒப்பந்தம் கையெழுத்திடும் திமுக இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பதில் ஆச்சரியம் இல்லை. இந்தியாவும் சைனாவும் ஆயில் தேவையை குறைத்துக்கொண்டால் ஆயில் விலை குறையும், தங்களுக்கு வேண்டாத வேலைகளை இந்தியாவுக்கு அனுப்பிவிட்டு அமேரிக்கா புது தொழில் நுட்பங்களுக்கு தங்கள் மக்கள்தொகையை பயன் படுத்தும். இப்படி இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க நலன் நிறையவே இருப்பதால்தான் இந்தியா மீது ஒருகாலத்த்தில் பொருளாதார தடை விதித்தவர்கள் இப்பொழுது அணு உலை கொடுக்கிறார்கள்.
ஹைடு சட்டத்தின் நோக்கமே ஆசியாவில் அணு ஆயுத பரவலை தடுப்பதுதான்.செனட்டர் ஒபாமா உட்பட அமெரிக்க செனட்டர்கள் ஹய்டு சட்டத்தில் பல திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்கள். அதில் ஒன்று, அமேரிக்கா இந்தியாவுக்கு யுரேனியம் கொடுப்பதை நிறுத்தினாலும் மற்ற நாடுகளையும் யுரேனியம் கொடுக்கக்கூடாது என்று நிர்பந்திக்கும். அப்பொழுது அணு உலையில் செய்த முதலீடு வீணாகும். (இந்திய எம்பிகளுக்கு ஒப்பந்தத்தை பார்க்க கூட உரிமை இல்லை என்பது கேவலம்.)
இந்தா யுரேனியம் வைத்துக்கொள், நீ இதை என்ன வேண்டுமானாலும் செய் என்று நிச்சயம் அமேரிக்கா சொல்லாது. அணு உலைகளை கண்காணிப்போம் என்று சொல்வது நியாயமாகவே தோன்றுகிறது. இந்தியா எவ்வளவு யுரேனியம் தோண்டி எடுக்கிறது, ஆயுதம் தயாரிக்கிறதா என்று ரிபோர்ட் கொடுக்க வேண்டும் இந்தியா அணு ஆயுதங்கள் தயாரித்தால் அமேரிக்கா எரிபொருள் கொடுப்பதை நிறுத்தும். மற்ற நாடுகளிலும் எரிபொருள் வாங்க முடியாது.
அணு உலைகளின் கசிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் , வழ்க்குகள் நிறையவே உள்ளது, அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அந்த நிறுவனத்திடம் நஷ்ட ஈடு வாங்க முடியுமா? அமெரிக்காவிலேயே இது ரொம்ப கஷ்டம். ஏற்கெனவே இருக்கிற அணு உலைகளால் ஏற்கெனவே சுற்று சுழால் கேட்டுள்ளபோது புது உலைகள் எங்கு நிறுவுவார்கள்.? பாவம் அந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள். மொத்தத்தில் இடது சாரிகள் சொல்வது போல இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு தேவையில்லை.

மேலும் விவரங்களுக்கு HR 5682 என்று GOOGLE செய்யவும.

Wednesday, July 16, 2008

பாட்டி வடை சுட்ட கதையின் நுண்ணரசியல் (2)

இந்த கதையை மேலோட்டமாக படிக்காமல் உற்று கவனித்தால் இதில் ஒளிந்திருக்கும் நுண்ணரசியல் புலப்படும். இந்த கதையில் வரும் காக்கா தலையை பக்கவாட்டில் ஆட்டி வடையை சாப்பிடுவது இது ஒரு சைவ காக்கா என்று புரிகிறது. தலையை மேலும் கீழும் ஆட்டிய நரி வைணவ சமயத்தை சேர்ந்தது. அப்பாவி சைவ காக்கையை தந்திர வைணவ நரி ஏமாற்றியது சைவர்களை அப்பாவிகளாக சித்தரிக்க உதவுகிறது. இதன் மூலம் கதை ஆசிரியர் வைணவத்துக்கு எதிராக சைவத்தை தூக்கி பிடிக்கிறார் என்று தெரிகிறது. புரிகிறதா தோழ்ர்களே ?


மேலும் இந்த கதையில் கதை முழுவதும் மைய பாத்திரமாக வடை வருகிறது. முன்பெல்லாம் கதைகளில் வைணவம் அதிகமாக வரும். இந்த கதையில் வரும் வடை சைவ வடை. குறைந்தபட்சம் இடைவேளைக்கு பின் வடையை வைணவ போண்டா வாக மாற்றி இருந்தால் கொஞ்சம் நடுநிலை இருந்திருக்கும். மணிரத்னம் கதைகளில் வடை , போண்டா இரண்டுமே சமமாக வரும்.


அத்துடன் இரண்டாயிரம் ஆண்டுகளாக நம்மிடையே ஊறிப்போன நிலபிரபுத்துவ கூறுகளை உள்ளடக்கிய பொதுபுத்தி சிந்தனையின் குறியீடு இந்த வடை. வடை என்பது எல்லாருக்கும் கிடைக்கும் பொருளும் இல்லை. மேல்தட்டு மற்றும் நடுத்தட்டு வர்க்கத்தினருக்கு மட்டுமே வடை சாப்பிட சாத்தியப்படும். கதை ஆசிரியர் தன் வர்க்க நலனை பாதுகாப்பதற்காக இங்கு வடையை உயர்த்தி பிடிக்கிறார். இது புரியாமல் இந்த கதையை எல்லா வர்க்கத்தினரும் முட்டாள்தனமாக தங்கள் பேரன் பேத்திக்கு சொல்லி வருகிறார்கள். இந்த கதையில் பாட்டி என கஞ்சி காய்ச்சி இருக்கக்கூடாது? கஞ்சி குடித்தால் நரியின் மூக்கு வெந்து விடுமா? இந்த வடை அரசியல் பற்றி 1852 இலேயே எங்கெல்ஸ் எழுதியிருக்கிறார். புரட்சி வெடித்து தொழிலாள வர்க்கம் ஆட்சியை கைப்பற்றும்போது கஞ்சி வடையாக மாறும். வடை கஞ்சியாக மாறும். சோவியத் ரஷ்யாவில் வடை தடை செய்யப்பட்டதை இங்கு நினைவு கூறுங்கள்.

பாட்டி வடை சுட்ட கதையின் நுண்ணரசியல் (1)

ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாள். வடையின் வாசனை மூக்கை துளைத்ததால் அதை முகர்ந்துகொண்டே அங்கு ஒரு காக்கா வந்து ஒரு வடையை தூக்கிக்கொண்டு போய் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து தலையை ஆஹா ஆஹா என்று ஆட்டியபடி வடையை ருசித்து சாப்பிட்டது. அப்போது அங்கே ஒரு நரி வந்தது. நரி எப்படியாவது இந்த வடையை நாம் காக்காவிடமிருந்து பிடுங்க வேண்டுமென்று தலையை மேலும் கீழும் ஆட்டியவாறு யோசனை செய்தது. பின்னர் நரி காக்காவை பார்த்து "காக்கா, நீ ரொம்ப அழஅகா இருக்கே, ஒரு பாட்டு பாடேன் " என்று கேட்டது. ஏமாந்த காக்கா "கா, கா" ன்னு பாட்டு பாட, வடை கீழே விழுந்தது. நரி வடையை எடுத்துக் கொண்டு ஓடியே போச்சு .

இந்த கதையில் மறைந்து கிடக்கும் நுண்ணரசியல் அடுத்த பதிவில் வரும். அதற்கு முன் முடிந்தால் இந்த நுண்ணரசியலை கண்டுபிடியுங்கள்.