ullal

Wednesday, March 18, 2009

எங்கே கோவணம் ? - திகில் டிவி தொடர்


ஒவ்வொரு ஞாயிறும் காணத் தவறாதீர்கள். இந்த தொடரை பார்த்தால் ஆல்ப்ரட் ஹிட்ச்காக்கே பேதி ஆகிவிடுவார். அவ்வளவு திகிலூட்டும் மர்மக்கதை.

கதை சுருக்கம்


தொடரின் ஆரம்பத்திலேயே ஒரு அய்யர் கோவணத்தை தொலைத்து விடுகிறார். கோவணத்துக்கு ஆசைப்பட்டு திருடியது அய்யரின் சொந்தக்காரர்களா அல்லது வடநாட்டிலிருந்து வந்திருக்கும் முகமூடி கொள்ளையர்களா? துப்பறியும் வேம்பு எப்படி இந்த முடிச்சுகளை அவிழ்க்கப் போகிறார் என்பது தான் கதை.
துப்பறிவதற்கு உள்ள ஒரே ஆதாரம் தொலைந்த கோவணத்தில் இருந்த ஓட்டைகளின் வரைபடம்.
தொலைந்த கோவணத்தை கண்டுபிடிப்பாரா வேம்பு ?
மற்றவை சின்னத்திரையில்.

தேர்தல் காமெடி


அரசியலில் அடையாளம் பெற பா.ஜ. க. வுடன் விஜயகாந்த் கூட்டணி வைக்க வேண்டும்.


நன்றி artvex.com

Sunday, March 08, 2009

திமுக புடிச்ச புளிவாலு

தயாளு அம்மா - ஏங்க, இன்னைக்கு புளி

முதலமைச்சர் மு.க - கமிஷனர், இந்த அம்மாவ கைது பண்ணுங்க.

தயாளு அம்மா - இது என்ன வம்பா போச்சு, மதியம் சாப்பாட்டுக்கு புளிக்குழம்பு வேக்கலாமான்னு கேக்க வந்தேன்.
மு.க. இன்னும் இரண்டு மாசத்துக்கு புளிக்குழம்பு செய்யக்கூடாது. தெரியுதா,

தங்கபாலு - தலைவரே, கோயிலில் புளியோதரை பிரசாதமாக தராங்க. இதை தடை செய்யணும் நீங்க.

மு.க. - அதுக்கென்ன தமிழ்நாட்டில் இனி புளியோதரை , புளிக்க்ச மோர் எல்லாம் தடை செஞ்சுடலாம்.

மரு. அன்புமணி - புளிப்பு மருந்தையெல்லாம் தடை செஞ்சுடலாம்.

மரு. ராமதாஸ் - தமிழ்நாட்டில் இருக்க புளிய மரத்தை எல்லாம் வெட்டிடலாம் .

தயாளு அம்மா - அப்ப யாரும் சாம்பார் வெக்க முடியாது. நிச்சயம் இந்த முறை தாய்க்குலம் ஒட்டு காலி.

மரு. ராமதாஸ் - சாம்பார் உடலுக்கு கெடுதல். இனிமேல் எல்லாரும கறிக்குழம்பு சாப்பிட்டு ஆரோக்கியமா இருக்கணும் நு பிரச்சாரம் செஞ்சு பிச்சுடலாம்.


மரு.அன்புமணி - புதுசா வந்த படத்துல ரஜினி சாம்பார் சாப்பிட்டு மாணவர்களை கெடுக்கிறார் . இதுக்கு ஒரு போராட்டம் பண்ணனும்.

மு.க. - டாஸ்மாக்கில் கறிக்குழம்பு வித்தா என்ன ? நல்ல வருமானம் வருமே !

தங்கபாலு - ஐயோ, புலி, புலி

கனிமொழி - பயப்படாதீங்க. என் மகன் ஸ்கூல் ல இன்னிக்கு மாறு வேடப்போட்டிக்கு புலி வேஷம் போட்டிருக்கான்,

கனிமொழியின் மகன் - தாத்தா, எனக்கு புளிப்பு மிட்டாய் வாங்கிட்டு வாங்க.

மு.க. - இனிமேல் புளிப்பு மிட்டாய் சாப்பிட கூடாது. புது சா காவி, வெள்ளை, பச்சையிலே ஒரு மிட்டாய் வாங்கி வெச்சிருக்கேன். சாப்பிடு. நல்லா இருக்கும்.

தங்கபாலு - ஏவ் ஏவ்
டாக்டர் இந்த புளிச்ச யேப்பத்துக்கு என்ன மருந்து சாப்படறது ?

மரு. அன்புமணி - புதுசா ஒரு யோகா வந்திருக்கு. போயி சோனியா முன்னாடி செய்யுங்க . சரியாயிடும். இன்னும் எவ்வளவு நாள் தலைவரா இருக்கப் போறீங்களோ , பாவம் !

http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs

Wednesday, March 04, 2009

போட்ட வாக்கை திரும்ப பெரும் உரிமை வேண்டும்

தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டது. கட்சிகள் கொள்கை வேறு, தேர்தல் வேறு என்று வித வித மான வாதங்கள் வைத்து மக்களை ஏமாற்றும் காலம். தேர்தலுக்கு முன்பு இப்படி ஏமாற்றும் கட்சிகள் தேர்தலுக்கு பின் தங்கள் விருப்பப்படி கூட்டணியை மாற்றி அமைக்கும். ஒரு முறை ஒட்டு போட்டால் அடுத்த ஐந்து வருடத்துக்கு குறுநில மன்னர்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஆட்சி செய்யலாம். பிரணாப் முகர்ஜியைப் போல திமிராக பேசலாம். இதற்கு பழைய மன்னராட்சியே தேவலை. மன்னர்களுக்கு கொஞ்சம் அதிக பொறுப்பு இருந்தது. எதிரியிடம் மாட்டிக்கிட்டால் கதை முடிந்துவிடும். இந்த போலி ஜனநாயகத்தில் சண்டை போடஏதாவது ஏழை ராணுவ வீரன் கிடைப்பான்.


இது இப்படியே போனால் விரைவில் எல்லா மாநிலங்களும் காஷ்மிஇர் போல ஆகும். மக்களுக்கு போட்ட ஓட்டை திரும்ப பெரும் உரிமை இருந்தால் மட்டுமே ஓரளவு ஜனநாயகம் வளரும் வாய்ப்பு உள்ளது.
இதற்கு நிச்சயம் மக்கள் ஆதரவு இருக்கும், ஆனால் சட்டம் இயற்றும் உரிமையை கட்சிகள் கையில் வைத்திருக்கிறது. அரசியல் சட்ட திருத்தம் செய்ய, இதற்காக பொது நல வழைக்கு போடலாமா? இந்திய மக்களிடம் ஆதரவு கையெழுத்து வாங்கலாம். விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.சட்டப்படி வேறு என்ன வழிமுறை இருக்கிறது ?