ullal

Tuesday, April 28, 2009

ஈழ்ப் பிரச்சினையை விளையாட்டாக பரப்பலாமா?

இங்கே பாருங்கள் .
http://www.darfurisdying.com/

http://www.playagainstallodds.com/ ( அகதிகளின் பிரச்சினைகள் )

http://www.gamesforchange.org/channels/human

http://www.gamesforchange.org/channels/global

ஈழ்ப் பிரச்சினை காணவில்லை.

Friday, April 24, 2009

ஈழம் - மேற்கில் என்ன நடக்கிறது

வலைப்பதிவு பிரச்சாரங்களை படித்தால் குழ்ப்பம்தான் மிஞ்சும். .நேரடியாக படிப்பது நல்லது.

http://www.un.org/apps/news/story.asp?NewsID=30576&Cr=sri+lanka&Cr1=


http://www.state.gov/r/pa/prs/dpb/2009/04/122001.htm


http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=௪௬௯௫௯

http://www.free-press-release.com/news/200904/1240432076.html

Tuesday, April 21, 2009

ஊடக பயங்கரவாதம

எழுத வேண்டிய செய்திகளை எழுதாமல் மறைப்பது, தங்களுடைய நோக்கங்களுக்கு ஏற்ப செய்திகளை திரித்து எழுதுவது போன்ற வேலைகளால், அமெரிக்க பத்திரிகைகள் மூடப்படும் நிலை வந்திருப்பதால் கெர்ரி அவர்களை காப்பாற்ற போகிறாராம். உலகமே பத்தி எரிந்தாலும் ஒபாமா வீட்டு நாயை முக்கிய செய்தியாக வெளியிடும் இந்த பத்திரிகைகளுக்கு இந்த முடிவு வந்தது மகிழ்ச்சியான விஷயம். விரைவில் இந்திய மீடியாவுக்கும் இதே நிலை வர வேண்டும் என்று விரும்புகிறேன்.
http://politicalticker.blogs.cnn.com/2009/04/21/kerry-to-hold-hearing-on-the-future-of-journalism/#கமெண்ட்ஸ்



ஈழ பிரச்சினையில் இந்திய ஊடகங்கள் செய்வது பயங்கரவாதமா என்று நீங்கள் சொல்லுங்கள்.

Monday, April 13, 2009

ஒ போடாதே ! ஒட்டு போடு !

நம்மில் பலருக்கும் இந்த தேர்தலில் ஒ போடலாம் என்று தோன்றுகிறது. எனக்கும் முதலில் அதுவே சரியாக பட்டது. தார்மீக ரீதியாக அதுவே சரியான முடிவாக இருந்தாலும், இந்திய தேர்தல் கணக்குப்படி பார்த்தால் இந்த தேர்தலில் ஒ போடக் கூடாது.


இந்த தேர்தலில் ஒ போடுவதும், விஜயகாந்த், சரத் மற்ற உதிரி கட்சிகளுக்கு ஒட்டு போடுவதும் ஒட்டு பிரிக்கத்தான் உதவும். நம்மில் சிலர் ஒ போட்டாலும், கட்சி ஒட்டு , கள்ள ஒட்டு, பிரியாணி ஓட்டுகளையும் தாண்டி 'ஒ' வால் ஜெயிக்க முடியாது.


ஒரு உதாரணத்துக்கு விஜயகாந்த் 20௦ சதவிகித ஒட்டு வாங்கி, அதிமுக 30 சதவிகித ஒட்டு வாங்கி திமுக/காங்கிரஸ் வேட்பாளர் 32 சதவிகித ஓட்டுக்கள் வாங்கினால், இன்னும் ஒரு 5-10 சதவிகிதம் ஒ வுக்கு விழுந்தால், 60 சதவிகித ஆட்கள் விரும்பாத திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார்.


தேர்தல் முடிந்தவுடன் நம் பத்திரிகையாளர்கள் மக்கள் தீர்ப்பு (mandate) பற்றி கட்டுரை எழுதுவார்கள். இப்படி மைனாரிடி ஓட்டுக்களை பெற்று காங்கிரஸ் /திமுக தப்பி தவறி ஜெயித்தாலும் ஈழ பிரச்சினை தமிழ் நாட்டில் எதிரொலிக்கவில்லை. இதனால் ஈழ பிரச்சினை தேர்தல் பிரச்சினை அல்ல என்று எழுதுவார்கள். இந்த அரிப்பை வலைப்பதிவுகளிலேயே காண முடிகிறது. ஒருவேளை ஏற்கெனவே இவர்கள் கட்டுரைகளை தயார் செய்தும் இருக்கலாம். இப்படி இவர்கள் எழுதினால் அதையே அரசியல் கட்சிகள் நம்பவும் கூடும்.


(மேலும் இந்த தேர்தல் ஒட்டு பிரிப்பதற்காகவே தேர்தலில் நிற்கும் விஜயகாந்த்தின் உண்மை முகத்தையும் அடையாளம் காட்டி இருக்கிறது. இவர் ஈழ தமிழர்களுக்காக பிரார்த்தனை செய்கிறாராம். )


ஆகவே, இந்த தேர்தலில் திமுக / காங்கிரசு தோற்க வேண்டுமென்றால் 'போர் நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் ' என்று விளம்பிய அம்மாவுக்கு தான் ஒட்டு போடவேண்டும் . இதன்மூலம் ஈழ பிரச்சினையில் தவறான நிலைப்பாடு எடுத்தால் தேர்த்தலில் தோற்க நேரிடும் என்று காங்கிரசு, திமுக வுடன் அதிமுகவுக்கும் சேர்த்து புரிய வைக்கலாம்.

Thursday, April 09, 2009

அடிமை தாத்தா -நவரச நாயகர் மு.கருணாநிதி

இதுவரை தமிழின தலைவர் வேடம் போட்ட நடிகர் இப்போது ஒரு மாறுதலுக்காக அடிமை தாத்தா வேடமணிந்து வருகிறார். சும்மா சொல்லக் கூடாது . அந்த காலத்து நாடக நடிகர். எவ்வளவு வேகமாக வேடம் மாற்றுகிறார் , பாருங்கள் !இந்த படத்தின் சிறப்பு இவரின் அப்பாவி முகபாவம்.



Disclaimer

http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=3475&cls=row4

இதை படித்து உங்களுக்கு ஏதேனும் வாந்தி பேதி ஏற்பட்டால் நான் பொறுப்பில்லை.


Disclaimerhttp://www.dinamalar.com/fpnnews.asp?News_id=3475&cls=row4இதை படித்து உங்களுக்கு ஏதேனும் வாந்தி பேதி ஏற்பட்டால் நான் பொறுப்பில்லை.