ullal

Thursday, August 27, 2009

நடிகர் விஜய் தன தலையில் மண் அள்ளி போடுகிறாரா?

யானை தன தலையில் தானே மண் அள்ளி போட்டுக்கொள்ளும். அது போல
நடிகர் விஜய் காங்கிரசில் சேர்ந்து யானையாயிட்டாரா ? இவர் தமிழர்களுக்கெதிராக முடிவு எடுக்கலாமா என்பதல்ல என் கேள்வி.


இவருக்கு அப்படி என்ன பயங்கர வயதாகிவிட்டது .? கெழட்டு விஜயகாந்த்தே
இன்னும் ஒத்தை காலால் வில்லன்களை புரட்டி எடுக்கும்போது இவர்
ஒட்டுமொத்தமா சினிமாவில் இருந்து விலக முடிவு செய்திருக்க மாட்டார்.


இன்று தமிழ் சினிமா நடிகர்கள் எல்லாம் கோடி கணக்கில் சம்பாதிக்க
வெளிநாட்டிலிருக்கும் ஈழத்தமிழ்ர்கள் டாலர் கொடுத்து படம் பார்ப்பதும்
ஒரு காரணம். எப்படியும் இவர் இன்னும் ஒரு பத்து வருடமாவது
சினிமாவில் நடிக்கலாம். வெளிநாட்டில் வியாபாரமாகாத படங்களை
பெரிய நிறுவனங்கள் தயாரிக்குமா ? உள்ளூர் மார்க்கெட்டை மட்டும்
நம்பி படம் எடுத்தால் இவ்வளவு சம்பளம் கிடைக்குமா?


அப்படியே ஏதாவது வருமான வரி தொல்லை இருந்தால் கட்டிவிட்டு போகவேண்டியதுதானே? ஏன் முதலுக்கே மோசமாக்கணும் ? மொத்தமா பத்து வருசத்துல சம்பாதிக்கறதை இப்பவே காங்கரஸ் மொத்தமா தரப் போகுதா ?
உள்ளுரில் ஏங்கி கிட்டிருக்கும் கோஷ்டி வாரிசுகள் இவருக்கு ஒத்துழைக்குமா?
இருக்கற கோஷ்டி கும்பலில் இன்னும் ஒரு கோஷ்டியாகப் போறாரா?

அரசியல் வினாடி வினா

கே.பி என்பவரை இலங்கை என்ற குட்டி நாடு அல்லது இந்தியா இரண்டு மாதங்களில் பிடிக்க
முடிந்தால் குட்ரோச்சியை இந்தியா பிடிக்க எத்தனை மாதம் ஆகும் ?

1. 4 2. 400 3. சாத்தியம் இல்லை.



ஷாருக்கானை அமெரிக்காவில கேள்வி கேட்டுப்புட்டான் என்று அறச்சீற்றம் சீறிய
உள்துறை அமைச்சார் ப.சிதம்பரம் எத்தனை தமிழ் (இந்திய ?) மீனவர்களை
பக்கத்து நாட்டுக்காரன் சுட்டால் சீறுவார் ?

1. 400 2. 4000 3. 400000 4.சாத்தியம் இல்லை.



போருக்கு முன்பு இலங்கை பக்கத்து நாடு. நாம் எதுவும் செய்ய முடியாது என்றார்கள். இப்போ இலங்கையில் விசாரிக்க போராங்களாம் . அப்படியானால் இலங்கை இந்தியாவின் மாநிலம் ஆகிவிட்டதா ?


1. ஆம் 2. இல்லை

Wednesday, August 19, 2009

உயர்கல்வி விலையை குறைக்க

இப்பொழுது அமேரிக்காவில் சுகாதாரம் குறித்து படு தீவீரமாக விவாதம் நடந்து வருகிறது. இவ்வளவு காரமான அரசியலை இது வரை இங்கு பார்த்ததில்லை.
http://www.cnn.com/2009/HEALTH/08/19/health.care.coop/index.html
இந்தப பதிவை பார்த்தபொழுது இந்தியாவில் இது போல உயர்கல்வி க்கு ஏன் இது போல இலாபமற்ற கூட்டு கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்த கூடாது ? அதன் மூலம் செலவை ரொம்பவே குறைக்கலாமே ! ! !

பொன்னியின் செல்வர் ௧ - ஈ. வே .ரா பக்தர் நோண்டு மாதவன்

ஒரு ஊரில் நோண்டு மாதவன் என்று ஒருவர் இருந்தார். அவர் பெருமையாக
நோண்டு மாதவ அய்யங்கார் என்று தான் கையெழுத்து போடுவார். தன்னை மகர
நெடுங்குழலாதனின் பக்தர் என்று சொல்லிக் கொள்வார். ஆனால் எந்நேரமும்
யாரோ ஒரு ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி பதிவு எழுதி வந்தார் .
அதே ஊரில் ஒரு நாத்திகரும் இருந்தார். அவருக்கு எந்நேரமும் இந்து
கடவுள்களை நிந்தனை செய்வதே வேலை.


இருவரும் ஒரே நாளில் இறந்து போனார்கள். மேலுலகத்தில் நாத்திகரை
சொர்க்கத்துக்கு அனுப்பி விட்டார்கள். நோண்டு மாதவனை
நரகத்துக்கு அனுப்பினார்கள். சும்மா விடுவாரா நோண்டு ? நேரே
மகர நெடுங்குழஅலாதனிடம் போய் "நாத்திகரை சொர்க்கத்துக்கு
அனுப்பிவிட்டு, என்னை எப்படி நரகத்துக்கு அனுப்பலாம்? " என்று
சண்டை பிடித்தார்.



மகர நெடுங்குழலாதன "நீ என் பக்தன் என்று சொல்லிக்கொண்டு
எப்பொழுதும் யாரோ ஒரு ராமசாமி நாயக்கரையே நினைத்து காலத்திய
ஒட்டினாய். பக்கம் பக்கமாக பதிவு, மீள்பதிவு, மீள் மீள் பதிவு
போட்டு மக்களை ரம்பம் போட்டாய். என்னை பற்றி எத்தனை பதிவு போட்டிருப்பாய் ?
ராமசாமி நாயக்கரைப பற்றி எத்தனை பதிவு போட்டிருக்கிறாய் என்று நீயே
எண்ணிப்பார். நாத்திகன் எப்பொழுதும் எங்களை போல கடவுள்களைப்
பற்றி பேசுகிறார்கள். அதனால் அவர்கள் சொர்க்கத்துக்கும், உன் போன்ற
ஆட்களை நரகத்துக்கும் அனுப்பி விடுவோம் என்று அவையில் முடிவு
செய்துவிட்டோம் " என்று சொன்னார்.



பி.கு- இந்த கதையில் வரும பெயர்கள் அனைத்தும் கற்பனையே.