ullal

Thursday, October 29, 2009

லாயர் சுந்தர் (சுந்தரராஜன்) பதிவில் வைரஸ் இருக்கலாம்

இவருடைய சந்தன வீரப்பன் பதிவை எட்டி பார்த்தால் உடனே ஒரு 'ட்ரோஜன்' எட்டி பார்க்கிறது.

இவருக்கு தெரிந்தோ , தெரியாமலோ இவருடைய பதிவில் வைரஸ் உள்ளது என்று நினைக்கிறேன்.

Tuesday, October 27, 2009

சீமான் + ஜப்பான் - சைனா = ???

இது வரை திமுகவை நேரடியாக எதிர்க்காத சீமான் அழகிரி கெல்லாம் பதில் சொல்வது பார்த்தால் தீவிர நேரடி அரசியலுக்கு தயாராகி விட்டார் என்று தெரிகிறது.


அது என்ன சீமான் போட்ட பட்டியலில் சிதம்பரத்துக்கு ரொம்ப பிடித்த சைனாவை காணோம்?

Tuesday, October 13, 2009

யாரிந்த அன்னை சந்தியா ???

பழநி கோயிலில் அன்னை சந்தியா மணிமண்டபம் என்று ஒரு மண்டபம் உள்ளது .
இந்தியா சென்றபோது இதை பார்த்திருக்கேன்.அரசு செலவில் கட்டிய மண்டபம் தான்.

யார் இந்த அன்னை சந்தியா ?



MEMORIAL FOR JAYA’S MOTHER
MADURAI: A manimandapam (memorial) named after AIADMK
supremo J.Jayalalithaa’s mother Annai N.R. Sandhya
will be opened at the famous Dhandayudhapani Swamy
temple in Palani on Sunday. The manipandapam has
been constructed at a cost of Rs 4.5 lakh, temple
sources said
http://www.tribuneindia.com/2001/20011209/nation.htm

Friday, October 09, 2009

நக்கீரன் கோபால் - தமிழ்நாட்டு கலாச்சாரத்தை கெடுத்தது சினிமா

தமிழ் கலாசாரத்தை சீரழிப்பது நடிகைகளும், சினிமாவும் தான். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். - நக்கீரன் கோபால்

http://www.nakkheeran.in/users/frmMagazine.aspx?M=2&PV=1 http://www.nakkheeran.in/users/frmMagazine.aspx?M=2&PV=1 http://www.nakkheeran.in/users/frmMagazine.aspx?M=2&PV=1

இது என்ன யாவாரம் ?

தினமலர் ஆசிரியர், நிறுவனர் 3 மாதம் ஜெயில் தண்டனை

தினமலர் ஆசிரியர், நிறுவனர் 3 மாதம் ஜெயில்

உறுதியாக இது பொய்ச்செய்தி இல்லை.


.
.
.
.


பழைய செய்தின்னு வேணா சொல்லலாம்.


Google this "dinamalar editor headmaster case"


http://www.thehindu.com/2008/04/17/stories/2008041761671100.htm



http://www.thehindu.com/2008/03/28/stories/2008032850320100.htm


http://sambarvadai.blogspot.com/2008/03/3.html


http://archives.chennaionline.com/cityfeature/Chennai/April08/04story01.asp


பத்திரிகைகள் பொய் செய்தி போடறதெல்லாம் அல்வா சாப்பிடறது மாதிரி.


ஜனநாயகத்தின் நான்காவது கல்லறை ஆச்சே!



P.S.-
ஒன்மது மாதம் கூட முழுசா ஜனாதிபதியாக இல்லாத ஒபாமாவுக்கு நோபல் ஆனாலும் ரொம்ப ஓவர். தமிழக அரசின் உரை ஆசிரியர் விருது போல ஆயிடுச்சு .

Friday, October 02, 2009

கலைஞர் கருணாநிதி கடிதம் ஜோக்ஸ்
























சண்முகநாதா, நம்ம மன்மோகனுக்கு ஒரு லெட்டர் எழுதுப்பா .

மதிப்பிற்குரிய மாண்புமிகு ,
பிரதமர் ,
மன்மோகன் சிங் சமூகத்திற்கு,
கலைஞர் ,
நான்,
கருணாநிதி,
எழுதும் கடிதம். நடுவில் மானே தேனே போட்டுக்க.
.........

**********************************



இயக்குனர் சேரனின் அடுத்த திரைப்படத்திற்கு கதை ரெடி.

ஒரு மாநில முதலைச்சர் மிக முக்கியமான ஒரு பிரச்சினைக்காக பிரதம மந்திரிக்கு
கடிதம் எழுதுகிறார்.

பதில் வரவில்லை.

மீண்டும் அதே பிரச்சினைக்கு மீண்டும் முதலைச்சர் ,பிரதம மந்திரிக்கு
கடிதம் எழுதுகிறார்.

பதில் வரவில்லை.

மீண்டும் அதே பிரச்சினைக்கு கோரிக்கை வைத்து மீண்டும் முதலைச்சர், பிரதம மந்திரிக்கு
கடிதம் எழுதுகிறார்.

பதில் வரவில்லை.

இப்படி ஒரு நாற்பது கடிதங்கள் எழுதுகிறார்.

பதில் வரவில்லை.

கருணாநிதி எழுதிய கடிதங்களில் தில்லி, இந்தியா என்று வரும் இடத்தில்
தில்லி, சைனா என்று யாரோ விஷமத்தனமாக முத்திரை குத்திவிட்டதாக ஆங்கில பத்திரிகைகள் பரபரப்பு
செய்தி போடுகிறது.

கடைசி க்ளைமாக்சில் தான் சஸ்பென்ஸ் தெரிகிறது. தலைமை செயலக மெயில் ரூம் க்ளெர்க் முதுகு வலி காரணமாக ஆறு மாதமாக லீவுல போய் இருக்கார்.


*****************************


தேர்தல் முடிந்த கையோடு மலை ஏறிய ஜெயலலிதா அறிக்கை விடுகிறார்.

பிறரை வற்புறுத்தி தனக்கு பாராட்டு விழா எடுக்கச் சொல்வது; துதிபாடிகள் மத்தியில்
உலா வருவது தன்னையும், தன் குடும்ப உறுப்பினர்களையும் புகழ் பாடுபவர்களை
வைத்து பட்டிமன்றம் நடத்தச் சொல்லி புளகாங்கிதம் அடைவது; தனக்குத் தானே
விருதுகளை அளித்துக் கொள்வது ஆகியவற்றை வாடிக்கையாகக் கொண்டிருப்பவர்
திமுக அரசின் முதல்வர் கருணாநிதி. இதை தன்னுடைய பல நடவடிக்கைகளின்
மூலம் நிரூபித்து இருக்கிறார்.

என்னுடய மெஜாரிட்டி ஆட்சியில் எப்பொழுதும் நான் மற்றவர்களுக்குத்தான் கடிதம்
எழுதுவேன். தமிழ்கத்தில் மைனாரிட்டி ஆட்சி நடத்தும் முதல்வர் கருணாநிதி
அதிக கடிதம் எழுதும் தற்பெருமைக்காக தனக்குத் தானே கடிதம்
எழுதிக்கொள்வதை பார்த்து தமிழ்கமே எள்ளி நகையாடுகிறது ......


**********************************


சந்திராயன் மிஷன் மாதவன் நாயர் சொல்கிறார். தமிழ்நாட்டு கடிதங்களை விரைவாக நேரடியாக தில்லிக்கு அனுப்புவதற்கு, அவற்றை நிலவுக்கு அனுப்பி அங்கிருந்து தில்லிக்கு போஸ்ட் செய்யலாம். (இவர் செவ்வாய் கிரகத்துக்கு நிலா வழியா போட்ட ரூட் மாதிரி ) -



பி.கு. - ஜோக் ( ஜோக்தானே !) படிச்சுட்டு பின்னூட்டம் போடாமல் போனால் ரத்த வாந்தி வரும்.