ullal

Monday, January 23, 2006

தமிழக அரசு டேக் ஓவர்?

அராஜகம் செய்யும் நிறுவனங்களை அம்மா டேக் ஓவர் செய்வதாகக் கேள்வி.உலகம் பூராவும் கோகோ கோலேவையும், மைக்ரொசாப்டைப் பற்றியும்ஏகப்பட்ட கம்ப்ளெயின் ட். ஒரு அவசரச் சட்டம் போட்டு இவற்றையும்அம்மா டேக் ஓவர் செய்ய வேண்டும். இந்த உலக மயமாக்கல் நேரத்தில்இப்படி செய்தால், எந்த நிறுவனமும் முதலீடு செய்ய தமிழகத்துக்கு பக்கத்திலேயே வராது.

இப்பொழுது ஜெயாடிவியையும், சன் டிவியையும் தனித்தனியா பாத்துகூட்டி கழிச்சு உணமை செய்தியை தெரிந்துக்கொள்கிறோம். இது அரசாங்கமொனாபலி (bali)யாக மாறினால் ஆளுங்கட்சி தரும் செய்தியைதான் பார்க்க முடியும்.முன்னொரு காலத்தில் ஹிந்தி செய்தியும், சீரியலும் கட்டாயப்படுத்தி பார்க்க வைத்ததூர்தர்ஷன் நினைவுக்கு வருது.
அப்புறம் விதவிதமான சேனல்களில் ஹால் வரும் அனைத்து ஆபாசத்துக்கும்,அபத்தங்களுக்கும் தமிழக அரசின் கோபுர முத்திரை கிடைக்குமா என்றுஒரு சின்ன சந்தேகம்.

கேயார், பாரதிராஜா, அபிராமி ராமநாதன், விஜய டி. ராஜேந்தர் இவர்களின்நிறுவனங்களும், வீடுகளும் எதிர்காலத்தில் யாராவது டேக் ஓவர் செய்தால்ஆதரிப்பார்களா? இது ரெண்டாவது சந்தேகம்.
கூட்டணி கட்சிகளின் மேடையில் கம்யூனிசம் பேசும் கருணாநிதிக்கு இந்த டேக் ஓவரில் என்ன பிரச்சினை இருக்க முடியும்? தனியார் சொத்துக்களைநேசனலைஸ் செய்வது அவருக்கு புதுசல்ல என்று நினைக்கிறேன். முன்னெப்போதோடிவிஎஸ் நிறுவனத்தில் ஒரு யூனிட்டை அரசாங்க மயமாக்கியதாக எப்பொழுதோ தினமலரில் படித்த ஞாபகம். திட்டவட்டமாக தெரியவில்லை.

இரண்டு கட்சிகளின் அராஜகத்தையும் சந்தித்த தெருவோர கேபிள் ஆபரேட்டர்கள் தற்போது குழப்பத்தில் இருப்பதாகதான் அறிகிறேன். யாரும் பட்டாசு கொளுத்தியதாக தெரியவில்லை.

0 Comments:

Post a Comment

<< Home