ullal

Tuesday, May 01, 2007

உ.பி. தேர்தலில் கீதையும், பூணூலும்

"சாதி இல்லை. இல்லவே இல்லை."

உத்தரபிரதேச தேர்தலில் கல்யாண்சிங் பிரச்சாரக் கூட்டத்தில்பாஜக கீதையும், பூணூலும் வினியோகித்தது. அனுமார் வேசம்போட்ட ஆட்களும் இதை வினியோகம் செய்தனர்.

"பூணுலும்,கீதையும் இந்துக்களுக்கு இரண்டு கண் மாதிரி. இதில்தவறு இல்லை. ஜாதி அரசியல் (!!!!) செய்வதற்காக இந்துக்களை பிரிப்பவர்களின் முகத்தில் அறைவதற்காகவே இவை வினியோகிக்கப்பட்டன" என்று பாஜக விளகம் அளித்துள்ளது.

அப்ப கீதையும் பூணூலும் பாக்காத இந்து குருடனா அல்லது இந்துவே இல்லையா என்று எண்பது கோடி இந்துக்களும் யோசிக்கப்படாது. ப்டாதுன்னா ப்டாதுதான்.

சாதி அரசியல் ஒழிக.

ஜெய்ஹிந்த்

2 Comments:

At 7:49 AM, Blogger Thamizhan said...

கல்யாண்சிங் அவசியம் தமிழ்நாட்டிற்கும் வந்து அந்த சேவை செய்ய வேண்டும்.அப்போதாவது தமிழர்களின் கண்கள் திறக்குமா,மூளையில் இட்ட விலங்கு உடையுமா,மந்திரத்தில் மகிமையில்லை மனித நேயத்தில்தான் இருக்கிறது என்பது புரியுமா என்று படித்த,பட்டம் வாங்கிய தமிழர்கள் சிந்திப்பார்களா என்று பார்க்க வேண்டும்.

 
At 7:51 AM, Blogger பங்காளி... said...

இந்த நேரத்தில் பெரியார் என்கிற மாமனிதனை நன்றியோடு நினைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது...

அவர் மட்டும் இல்லையேல் இம்மாதிரி கூத்துக்கள் இங்கேயும் நடந்துகொண்டுதானிருக்கும்...ம்ம்ம்ம்ம்

 

Post a Comment

<< Home