ullal

Tuesday, January 30, 2007

வீரமணி,சாய்பாபா ...

http://viduthalai.com/20070123/news01.htm

பாவம் துரை முருகன். இவர் ஒருத்தர் பலி ஆடு போல அகப்பட்டார்.
கருணாநிதியை நேராக திட்ட முடியுமா ?

'நமது எம்ஜிஆரெ'ல்லாம் வீரமணிக்கும் மோதிரம் கிடைத்ததா
என்று எழுதும் நிலை வந்துவிட்டது. கொடுமைதான். என்ன செய்வது?

மோசடி சாமியார் என்று சொல்கிறீர்கள். அதே நேரத்தில் அவருக்கு
நன்றியும் தெரிவிக்கிறீர்கள்.

இனிமேல் மோசடி செய்பவர்கள் அரசாங்க திட்டங்களுக்கு கமிஷன்
கொடுத்தால் எல்லோருக்கும் பாராட்டு விழா அல்லது ஒரு
வாழ்த்து சான்றிதழ் என்று அவரவர் நன்கொடைக்கு ஏற்ப கொடுக்க
பரிந்துரை செய்யுங்கள்.

ஆரம்ப காலத்தில் சில மோசடிகள் செய்திருந்தாலும் தவறில்லை
என்று வலைப்பதிவுகளில் ஏற்கெனவே நிறைய பேர் சொல்லிவிட்டதால்
வலைப்பதிவர்கள் சார்பாக இந்த வேண்டுகோள் விடுக்கிறேன்.

அஞ்சுக்கும், பத்துக்கும் மோசடி செய்பவர்களை சிறையில் இருந்தால்
விடுதலை செய்து விடுங்கள். அவர்கள் வெளியில் இருந்தால் தங்கள்
கலையை செவ்வனே வளர்த்து நாளைக்கு பெரிய சாமியாராகவோ,
அல்லது அரசியல்வாதியாகவோ வரலாம். விளையும் பயிர்களை
முளையில் கிள்ளக்கூடாது அல்லவா?

ஒரு சில கொலைகள் செய்தாலும் கூட பரவாயில்லை என்றே தோன்றுகிறது.
அதனால் பிரேமானந்தாவையும், ஜெயேந்திர சரஸ்வதியையும்
விடுவிக்க வேண்டியதுதான்.

பெரியார் நாமம் வாழ்க.

0 Comments:

Post a Comment

<< Home