ullal

Thursday, May 04, 2006

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (மீள்பதிவு)

இடம் - கூட்டணி திருடாலயம்
பங்கேற்போர் - தமிழ்நாட்டு திருடர்கள்

அலிபாபா கருணாநிதி கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார்.

2/3 திருடன் ராமதாசு - என்ன தலைவரே வருத்தமா இருக்கீங்க?

அலிபாபா- புதுசா வந்திருக்க திருடன நினைச்சுதான் உக்காந்திருக்கேன்.

கால் திருடன் வாசன் - இதுல வருத்தப்பட என்ன இருக்கு?

அலிபாபா- நீ கால் திருடன். காம்ராஜர் ஆட்சிய கொண்டு வருவோம்னு சொல்லிஊர ஏமாத்தறே. நான் அண்ணா, பெரியார் பேர சொல்லி ஏமாத்தறேன்.பாக்தாத் திருடி எம்.ஜி.ஆர், அண்ணா, பெரியார் பேர் சொல்லி ஏமாத்தறா.

2/3 திருடன் ராமதாசு - அதனால என்ன?

அலிபாபா- புதுத் திருடன் பெரியார், அண்ணா, காமராஜ், எம்ஜிஆர் இத்தன பேரும்போட்டிருக்கானே. நம்மள விட பெரிய திருடனா இருப்பான் போல இருக்கு.

2/3 திருடன் ராமதாசு - என்கிட்டே உடுங்க . நான் பாத்துக்கறேன். சூப்பர் திருடன்களையேஓரம் கட்டியிருக்கேன்.

கால் திருடன் வாசன் - அவன் சிரிப்பு திருடன் பா. இவன் அப்படி இல்ல. நாம எகத்தாள திருடன்னா இவன் ஜகதல திருடனா இருப்பான் போல இருக்கு.

(வாயில் பிளாஸ்டருடன் இருக்கும் ஊமை திருடன் இளங்கோ ஏதோ
சொல்லமுயற்சிக்கிறார்- பாம்பூ)

அலிபாபா - என்னப்பா

இளங்கோ - பாம்பறியும் பாமிபின்கால்.
காலே அரைக்கால் திருடன் திருமா- பம்பரம் உட்டே ஆட்சிய பிடிச்சிடுவாங்க போலஇருக்கு.

முக்கா திருடன் வைகோ - என்கிட்டே பம்பரம் சின்னம் விட்டுக் கொடுக்க சொல்லிகேட்டாரு. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். அதுனால இப்போ தொப்பிள் சின்னத்துக்குமுயற்சி பண்றாரு.

அப்ரன்டிஸ் திருடன் ச்டாலின் - அப்பா !

அலிபாபா - மவனே!

அப்ரன்டிஸ் திருடன் ச்டாலின் - பாத்ரூம் போகணும்பா.

அலிபாபா - இதுக்கெல்லாம் நான் வரணுமா? நீயே போகக்கூடாதா? நீ என்னிக்குஅலிபாபா ஆகிறது?

முக்கா திருடன் வைகோ - எனக்கு தான் அதிக பாதிப்பு. பிரபாகரனுக்கு அவங்க ஊர்லகூட இத்தனை ஆதரவாளர்கள் இருப்பாங்களோ என்னமோ. என் ஆளுங்கள இவன் கொண்டு போயிடுவான் போல இருக்கு. (கண்ணீர் விடுகிறார்)

அலிபாபா - எனக்கு பெரிய பாதிப்பு இல்ல. மதுரை பக்கம் நாங்க எப்பவுமேஜெயிச்சது கெடெயாது.

காலே அரைக்கால் திருடன் திருமா- எனக்கும் பாதிப்பு இல்ல. நாங்க எந்த பக்கமும் ஜெயிச்சது கெடையாது.

பாக்தாத் திருடி - எங்க ஏரியால கை வைக்கறானே!! தேவரே, நீதான் காப்பாத்தணும்.

உ.பி.திருடி - அக்கா, என்ன விட ஆடம்பரமா நகை போடுவான் போலருக்கு. கிரீடம்என்ன, அரண்மணை என்ன? எப்படியோ இவரால, நாமே எளிமையா தெரியறோம்.

பாக்தாத் திருடி - ஏண்டீ சசீ, ஒருவேளை இந்தியால மன்னராட்சி அறிவிச்சுட்டாங்களோ?

காலே அரைக்கால் திருடன் திருமா- அறிவிக்காட்டி என்ன, ஏற்கெனவே அப்படிதானேஇருக்கு!

முக்கா திருடன் வைகோ - கொஞ்சமும் ஜனநாயக வேஷம் போடாம அசல் ராஜா மாதிரியேநடக்கிறாரே! ஆபாசத் திருடனா இருப்பான் போல இருக்கு.
காலே அரைக்கால் திருடன் திருமா- தஞ்சாவூர் விவசாயிகள் எல்லாம் பிரியாணிசாப்பிடறாங்க இல்லையா! அதை கொண்டாடறாங்க போல.

அப்ரன்டிஸ் திருடன் ச்டாலின் -அப்பா, நான் அலிபாபா ஆகற நாளே வராது போலதெரியுது.

அலிபாபா - ஆமாம் மகனே, நீ வெறும் சென்னை கார்ப்பரேசன் திருடந்தான் .

கால் திருடன் வாசன் - தொண்ணூறு சதவிகிதம் ஆதரவு இருக்குங்கறான்.

காலே அரைக்கால் திருடன் திருமா- ஓட்டு போடறதே 60 சதவிகிதம்தான். இதுல ஒன்ற கோடி தேவர்கள் பாக்தாத் திருடிக்கு ஆதரவு.

முக்கா திருடன் வைகோ - நம்மள விட நல்லா புருடா விடறான்.

காலே அரைக்கால் திருடன் திருமா- மக்களும் மாற்றம் வேணும்ணு தாமகவுக்கு வாய்ப்பு குடுத்தாங்க.

கால் திருடன் வாசன் - நாங்கதான் வாய்ப்ப தூக்கி போட்டுட்டு ஜால்ராவோட டெல்லிபோய்ட்டோ ம்.

கால் திருடன் வாசன் - காவி திருடங்க இவன ஆதரிப்பாங்களோ? எக்கச்சக்க இலவசவிளம்பரம் குடுக்கறாங்களே!

பாக்தாத் திருடி - பேசாம நாம எல்லாரும் கூட்டு சேந்து புது திருடன விரட்டிடலாம்.

அலிபாபா- நல்ல யோசனை. செயற்குழு கூட்டி அறிவிச்சுடலாம்.

3 Comments:

At 3:27 PM, Blogger மாயவரத்தான் said...

Ellam sari...where is the pudhu thirudan GAYANIDHI?

 
At 4:07 PM, Blogger aathirai said...

idhu pazhaya padhivu. appa avaru ivlo famous (? )aagale.

 
At 9:02 PM, Blogger dondu(#11168674346665545885) said...

மீள்பதிவு செய்யும்போது இற்றைப்படுத்துவதும் அவசியம் என்று கூறுவது மீள்பதிவு மன்னன் டோண்டு ராகவன்.

ஒரே ஒரு பொருள் குற்றம். அலிபாபா திருடர் தலைவன் அல்ல, எதிரி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Post a Comment

<< Home