ullal

Friday, August 18, 2006

மலர் மன்னனின் கீதோபதேசம்

இந்த வார திண்ணையில் பாகிஸ்தானும் இந்தியாவும் அணு ஆயுதப் போர்புரிய வேண்டுமென்று பரிந்துரைக்கிறார். இந்த கட்டுரைக்கு பொருத்தமாக ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் (ஜிஹாத்)பதேசம் படம் .
"ஆகையினால் பாரத தேச நலனில் அக்கரை உள்ளவர் எவராயினும் இந்தச் சந்தர்ப்பத்தில் நம் தேசத்துப் பெரும்பாலான முகமதியரின் மனப்பான்மை குறித்தெல்லாம் கவலைப்பட்டு பிரச்சினையைத் திசை திருப்பிக்கொண்டிராமல் யுக தர்மத்தின் பிரகாரம் செயல் படுவது பற்றி யோசிப்பதே உசிதம்.

நாம் பயங்கரவாதிகளை எல்லை தாண்டிச் சென்று தேடித் தாக்கினால் பாகிஸ்தான் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் என்று சிலர் எச்சரித்ததைக் கேட்டபோது மானக்கேடாக இருந்தது. அப்படியே தாக்குதல் நடந்தால்தான் என்ன? இப்போது மட்டும் இழப்பில்லாமலா உள்ளது? பாகிஸ்தான் அணு ஆயுதப் பிரயோகம் செய்யத் துணிந்தால் அதையே சாக்கிட்டு அதனை உலக வரைபடத்திலிருந்தே அழித்தெறிந்துவிடுவதற்கான அணு ஆயுத வலிமை நமக்கு உள்ளதே? நமக்கு வேண்டுவது பொலிடிகல் வில் என்று சொல்லப்படுகிற ராஜீய திட சங்கற்பம்."


இப்படி ஒரு போர் நடந்தால் நிச்சயம் மலர்மன்னன் வகையறாக்கள்அணு ஆயுத எல்லைக்கு அப்பால் எங்காவது சென்று ஒளிந்துகொண்டுவிடுவார்கள்.

11 Comments:

At 12:04 PM, Blogger PRABHU RAJADURAI said...

அன்பு வழியே இறை வழி என்கிறார்கள்...ஆனால் உலகில் எங்குமே மதவாதிகள்தான் போர் ஆயுதம் என்று ரத்தத்தினை கண்டு அஞ்சாதவர்களாக இருக்கின்றனர்...அமெரிக்காவானாலும் சரி, இலங்கையானாலும் சரி. ஒருவேளை இவர்கள் மறுமையை பற்றி மட்டும் கவலைப்படுவதால் இவ்வுலக வாழ்க்கையின் மீது பற்றிலாமல் இருக்கலாம்.

 
At 12:32 PM, Blogger Amar said...

//இப்படி ஒரு போர் நடந்தால் நிச்சயம் மலர்மன்னன் வகையறாக்கள்அணு ஆயுத எல்லைக்கு அப்பால் எங்காவது சென்று ஒளிந்துகொண்டுவிடுவார்கள்//

அப்படி ஒரு போர் நடந்தால் பாகிஸ்தான் மலர்மன்னன் வகையறாக்களிடம் நாளைக்கு காலை பிரம்மமுகூர்த்தத்தில் குண்டு போடுறோம் ஓடிபோய்விடு என்று சோல்லிவிட்டு தான் போடுமா என்ன?

 
At 2:31 PM, Blogger aathirai said...

//அப்படி ஒரு போர் நடந்தால் பாகிஸ்தான் மலர்மன்னன் வகையறாக்களிடம் நாளைக்கு காலை பிரம்மமுகூர்த்தத்தில் குண்டு போடுறோம் ஓடிபோய்விடு என்று சோல்லிவிட்டு தான் போடுமா என்ன//

அப்படி சொன்னதால்தானே எல்லையில் குவித்த படைகளை
வீரமாக திரும்ப பெற்றோம்?

 
At 2:35 PM, Blogger aathirai said...

//ஆனால் உலகில் எங்குமே மதவாதிகள்தான் போர் ஆயுதம் என்று ரத்தத்தினை கண்டு அஞ்சாதவர்களாக இருக்கின்றனர்... //

இது மதமும் இல்லை . மண்ணாங்கட்டியும் இல்லை. மதத்தை
வைத்து அரசியல் நடத்தும் பிழைப்பு.பாகிஸ்தானிலும், இந்தியாவிலும்
இப்படி படம் காட்டி ஓட்டு வாங்கும் பொழைப்புதான். சகோதரர்களாச்சே.
இதில் மட்டும் ஒற்றுமை.

நான் இந்த நாட்டுக்கு வந்த புதிதில் சில பாகிஸ்தானியர் எனக்கு
உதவி செய்திருக்கிறார்கள்.

இரண்டு நாட்டு மத அரசியல்வாதிகளை
ஒழித்தால் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

 
At 12:38 AM, Blogger இப்னு ஹம்துன் said...

//இது மதமும் இல்லை . மண்ணாங்கட்டியும் இல்லை. மதத்தை
வைத்து அரசியல் நடத்தும் பிழைப்பு.பாகிஸ்தானிலும், இந்தியாவிலும்
இப்படி படம் காட்டி ஓட்டு வாங்கும் பொழைப்புதான். சகோதரர்களாச்சே.
இதில் மட்டும் ஒற்றுமை.

நான் இந்த நாட்டுக்கு வந்த புதிதில் சில பாகிஸ்தானியர் எனக்கு
உதவி செய்திருக்கிறார்கள்.

இரண்டு நாட்டு மத அரசியல்வாதிகளை
ஒழித்தால் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.//

முழுதும் ஏற்கிறேன்.

மதமெல்லாம் இவர்களுக்கு ஒரு சாக்கு. தன்னுடைய மதத்தை ஒரு 'கைத்தடி'யாக்கிக்கொண்டு நாற்காலியில் உட்கார நினைக்கும் 'நாற்-காலி' புத்தி.

 
At 6:07 AM, Blogger thiru said...

மலர்மன்னனுக்கு பசிக்கிற நேரம் கொஞம் புளூட்டோனியமும், செறிவூட்டப்பட்ட யுரேனியமும் பிசைந்து சாப்பிடுறாரா என்ன? மனித உயிர்களின் மதிப்பு எல்லைக்கோட்டை விரிவாக்க துடிக்கிற ஆர்.எஸ்.எஸ் மலர்மன்னன் கும்பலுக்கு இவ்வளவு குறைந்து போனதா? சிறுபிள்ளைத்தனமான கருத்துரை இது. மிகவும் ஆபத்தான வெறித்தனமிது.

ஆதிரைம் நல்ல பதிவு!

 
At 7:43 AM, Blogger Amar said...

//அப்படி சொன்னதால்தானே எல்லையில் குவித்த படைகளை
வீரமாக திரும்ப பெற்றோம்?//

என்ன சொன்னார்கள்? அணுகுண்டு போடுவோம் என்றா?

ஸாரி.Nuclear deterrence பற்றி தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

Cold Start - கேள்விபட்டதுண்டா?

 
At 8:04 AM, Anonymous Anonymous said...

//இது மதமும் இல்லை . மண்ணாங்கட்டியும் இல்லை. மதத்தை
வைத்து அரசியல் நடத்தும் பிழைப்பு.பாகிஸ்தானிலும், இந்தியாவிலும்
இப்படி படம் காட்டி ஓட்டு வாங்கும் பொழைப்புதான். சகோதரர்களாச்சே.
இதில் மட்டும் ஒற்றுமை.//


ஆயிரத்தில் ஒரு வார்த்தை.

//இரண்டு நாட்டு மத அரசியல்வாதிகளை
ஒழித்தால் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்//


அப்படியே ஆமோதிக்கிறேன். "ஈனப்பிறவி" புகழ் மலர்மன்னன் கூறும் யுத்தத்தை முதலில் தொடங்க வேண்டியது இவர்கள் மீது தான்.

இரு நாட்டு மக்களும் நிம்மதியாக வாழ இதுவே சிறந்த வழி.

நான் இந்த நாட்டுக்கு வந்த புதிதில் சில பாகிஸ்தானியர் எனக்கு
உதவி செய்திருக்கிறார்கள்.


அப்படியா? சப்தமிட்டு கூறவேண்டாம். நீங்கள் ISI உளவாளியே தான்.

அன்புடன்
இறை நேசன்

 
At 8:18 AM, Blogger வஜ்ரா said...

samudra,

நேர விரையம்...இந்தியா அனுகுண்டு வைத்திருப்பது தவறு என்று கொரியாவில் போய் சொல்லும் மூடர்கள்...பிறகு, NPT ல் கையொப்பமிட்ட ஈரான் அனு ஆயுதம் தாரிப்பதை உளமார வரவேற்கும் "சொந்த செலவில் சூன்யம்" வைத்துக் கொள்பவர்களிடம் என்ன பேசி என்ன பயன்....

ஆர். எஸ். எஸ் பார்ட்டி (BJP) அனு அயுதம் பயன் படுத்த நிச்சயம் யோசிக்கும் என்றால், அங்கே ஹிஸ்புல் முஜாஹித்தீன், லஷ்கர் ஏ ஜாஹ்ங்வி, லஷ்கர் ஏ தொய்பா கையில் பாகிஸ்தான் வசம் இருக்கும் அனு ஆயுதம் சிக்கினால் உள்ளாள் என்ன வெளியாள், வெட்ட வெளியாள் எல்லாம் திவால்...!! (live example Iranian islamic revolution...முடிந்து முதல் வேட்டு இடது சாரிகளுக்குத்தான்..)

கீதையும் தெரியாது, மலர் மன்னன் சொன்னதன் அர்த்தமும் புரியாமல், மொண்ணையாக War mongers என்று எண்ணிக் கொண்டு ஒரு பதிவு...

 
At 9:44 AM, Blogger aathirai said...

ம். இந்த MAD தியரி அமெரிக்காவால் கைவிடப்பட்டது.
இரண்டு நாடுகளும் ஆளுக்கொரு ந்யூக்லியர்
பட்டனுடன் அழிவின் எல்லையில் கொண்டு வருவ்து.
ஏதாவது ஒரு நாட்டில் ஏதோ ஒரு பைத்தியக்காரன் ஆட்சியை
பிடித்தால் இரண்டு நாடுகளும் காலியாகிவிடும்.
ஏராளமாக ஆயுதங்களை வாங்கி குவிப்போம். மொத்தத்தில்
இரு நாடுகளும் உருப்படாது.


இனி ஆங்கில பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

 
At 10:04 AM, Blogger aathirai said...

முதலில் மலர் மன்னனின் ஜால்ராக்கள் இந்திய போர் படையில்
சென்று சேரட்டும். அப்புறம் வந்து கீதோபதேசம் செய்யலாம்.

 

Post a Comment

<< Home