ullal

Wednesday, August 22, 2007

ச்னோஒய்ட் சீதாயணம்

நீண்ட நாட்களுக்கு முன் எழுதியது. நம்ம அரை ப்ளேடு மகாபாரதம் வெளியிட்டிருக்கார். நாம ராமாயணத்தையும் பதிச்சுட வேண்டியதுதான்.

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு கணக்கு வழக்கில்லாமல் மனைவிகளும் இருந்தனர். அவனுடைய மனைவிகளுக்கு ஒரு தேவன் (fairy)ஆப்பிள் கொடுத்தான். இதை சாப்பிட்ட மனைவியருக்கு நான்கு இளவரசர்கள் பிறந்தனர். இதில் முதலாவது, பட்டத்து இளவரசன் சின்டர்பெல்லா.

சின்டர்பெல்லா மீது ஒரு சூனியக்கார கிழவிக்கு கோபம். முன்பொரு முறை ஸ்லீப்பிங்க் ப்யூட்டி பிறந்தபோது அரசன் அவளை விருந்துக்கு கூப்பிடவில்லை என்று கோபம் வந்து சபித்தாளே, அவளேதான். அவள் பெயர் Bad witch of the west. இந்த முறை சின்டர்பெல்லா விட்ட அம்பு அவள் முதுகை பதம்பார்த்து விட்டதால் கோபம் வந்துவிட்டது.

இளவரசன் பெரியவனாகி ஸ்நோஒயிட் சீதா என்ற இளவரசியைதிருமணம் செய்துகொண்டான். அவள் பேரழகி. அதனால் அவளுடைய மாற்றான் மாமியாருக்கு அவள் மீது பொறாமை.

கிழவி சின்டர்பெல்லாவின் மாற்றாந்தாயிடம் (step mother) அவனை நன்றாக போட்டுக்கொடுத்தாள். உன் மகனை அரசனாக்கிவிடு, சின்டர்பெல்லாவை காட்டுக்கு துரத்திவிடலாம் என்று திட்டம் போட்டு கொடுத்தாள். ஸ்டெப் மதர் சின்டர்பெல்லாவின் அப்பாவிடம் சொல்லி சின்டர்பெல்லாவையும்,ஸ்னோ ஒயிட்டையும், மற்றொரு இளவரசனையும் காட்டுக்கு அனுப்பி விட்டாள்.

அப்பொழுது அங்கு ஒரு பீஸ்ட் ஸ்னோ ஒயிட் சீதாவின் அழகைப் பற்றி தன் தங்கையின் மூலன் கேட்டறிந்தது. பீஸ்ட் பார்க்க கொடூரமாக இருந்தாலும் உண்மையில் நல்ல மனது. ஒரு நாள் பீஸ்ட் ஸ்நோஒயிட் சீதாவை தூக்கிச் சென்று கோட்டையில் ஒரு உயரமான டவரில் வைத்திருந்தது.

பீஸ்ட் அவளை விமானத்தில் தூக்கிச் சென்றபோது ஸ்னோஒயிட் சீதா தன் கையிலிருந்த பாப்கார்னை இல்லை நகைகளை சன்னல் வழியே வீசிக்கொண்டே போனாள்.(அந்த காலத்து விமானம் இப்போது உள்ளதை விட அதிக தொழில் நுட்பம் வாய்ந்தது.)

கோட்டையில் அவளுக்கு எல்லா வசதிகளும் இருந்தது. பீஸ்ட் தினமும் அழகியிடம் தன்னை திருமணம் செய்துக்கொள் என்று கேட்டது. ஆனால் அவளை வற்புறுத்தவில்லை. ஸ்நோ ஒயிட் சீதா, சின்டர்பெல்லா வந்துதான் தன்னை மீட்டுச் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டு ஒரு படுக்கையில் படுத்துறங்கினாள்.

ஸ்னோ ஒயிட் சீதாவை தேடி சின்டர்பெல்லாவும், அவன் தம்பியும் அலைந்தார்கள். அப்போது அங்கு சில குள்ளர்கள்ம். இல்லை குரங்குகள் அவனுக்கு உதவி செய்தார்கள். சின்டர்பெல்லா குரங்குகளுக்குள் இருந்த சண்டையில் தலையிட்டு அங்கிருந்த சூனி குரங்கை கொன்றுவிட்டு ஷியா குரங்கை ஆட்சியில் அமர்த்தினான். இதனால் ஷியா குரங்குகள்அவனுக்கு உதவி செய்ய முன் வந்தது. குரங்குகள் ஸ்நோ ஒயிட் சீதா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டது.

குரங்குகளின் உதவியோடு சின்டர்பெல்லா பீஸ்ட் டிடம் போரிட்டு கடைசியில் பீஸ்ட்டை கொன்று விட்டு ஸ்நோ ஒயிட்டை மீட்டு வந்தான். அதற்கப்புறம் அவர்கள் எப்பொழுதும் சந்தோசமாக இருந்தார்கள்.

(மகள் படித்த Fairy tale கதைகளை காதில் கேட்ட படியே தமிழ்மணத்தை படித்துவிட்டு தூங்கியதால் வந்த குழப்ப கனவு. நம்பமாட்டீங்களே!)

4 Comments:

At 12:20 PM, Anonymous Anonymous said...

பின்னூட்ட கயமை

 
At 5:35 PM, Blogger அரை பிளேடு said...

நல்ல கதை :)

ராம், சீதா, இராவணன் = பிரின்ஸ், பிரின்சஸ் அண்டு பீஸ்ட்.

எல்லா ஃபேரிடேலுமே அடிப்படயில் பிரின்ஸ் அண்டு பிரின்சஸ் கதைகள்தான். :)

 
At 6:28 AM, Blogger aathirai said...

ravanan is exactly like beast. he only begs, never forces beauty.

 
At 11:28 PM, Anonymous Anonymous said...

ravanan is exactly like beast. he only begs, never forces beauty
**********************************

This is a misconception.Ravana was a habitual sex offender.
In Valmiki Ramayana, it is mentioned that most of the women in his harem were "brought by force" when he conquered other lands.

Also, Ravana cant force himself on Sita because of Brahma's curse that his head will break into 100 pieces.Ravana himself tell this in Valmiki Ramayanam.See
http://www.valmikiramayan.net/yuddha/sarga13/yuddha_13_frame.htm

This Punjikasthala was actually the wife of Ravana's half brother Kuberan's son.She has begged Ravana that she is like his daughter in law but yet as he says, he raped her and comitted an incest :-(

It is because of this curse, he is forced to beg afterwards.He was a beast before and a beast after and was always a beastly demon

 

Post a Comment

<< Home