ullal

Wednesday, October 03, 2007

மத இந்துக்களே - பூமியில் கிணறு,சுரங்கம் வெட்டலாமா?

இந்த பூமி முழுவதும் புருஷனின் உடலிலிருந்து ப்ரம்மா படைத்ததாக 80 கோடி இந்துக்களின் வேதம் சொல்லுகிறது.அனேகமாக அனைத்து மதங்களும் இதையே சொல்கிறது என்று நினைக்கிறேன். இதில் ராமர் பாலம் மட்டும் ஏன் இடிக்கக்கூடாது?

பூமியில் எங்குமே கிணறு நோண்டக்கூடாது, சுரங்கம் வெட்டக்கூடாது, நிலத்தை வெட்டி தென்னை மரம் நடக்கூடாது. குழி வெட்டி கட்டட அஸ்திவாரம் போடக்கூடாது. கொடநாட்டில் ஒயிட் ஹவுஸ் கட்டக்கூடாது. ப்ரம்மா படைத்த ஆற்றை திருப்பி நர்மதா அணை கட்டக்கூடாது. ராமருக்கு கோயில் கூட கட்டக்கூடாது.

சிலர் இப்படி செய்வது 80 கோடி இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது.இதற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும்.

tasmAt virAd ajAyata virAjo adhipUrusha : sa jAto atyaricyata pashcAd bhUmimatho pura: 5

(இவர்களிடம் லாஜிக் பேசுவது வேஸ்ட் என்றாலும் சும்மா இருக்க முடியவில்லை.)

2 Comments:

At 4:42 AM, Blogger மாசிலா said...

//(இவர்களிடம் லாஜிக் பேசுவது வேஸ்ட் என்றாலும் சும்மா இருக்க முடியவில்லை.)//

லாஜிக் பேசுறோமோ இல்லியோ, ஆனா, நீங்க தலைப்பில் குறிப்பிட்டிருக்கிற மாதிரி கட்டாயம் பூதம் கிளம்ப போகிறது என்பது நிச்சயமே!

கடைசியா, சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி கதையிலதான் முடிய போவுது இவனுங்க எல்லோருடைய கதையும்.

நன்றி.

 
At 5:48 AM, Blogger aathirai said...

Mr.தெனாவெட்டு தறுதலை,
உங்கள் பின்னூட்டம் கொஞ்சம் அதிகப்படியான பின்நவீனத்துமா இருக்கு.
சொந்த பதிவில் போடுங்களேன்.

 

Post a Comment

<< Home