ullal

Friday, October 05, 2007

தமிழ்நாட்டில் எத்தனை ராமர் கோயில்கள் உள்ளன?

இது பரீட்சை இல்லை. எனக்கு நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் இது. நான் இது வரை தமிழ்நாட்டில் ராமருக்கு தனியாக கோயிலை பார்த்ததே இல்லை.பெருமாள் கோவிலில் ஒரு ஓரத்தில் ராமருக்கும் ஒரு சன்னிதி இருக்கும். பெருமாள் கோவில்களும், ஆஞ்சநேயர் கோவில்களும் நிச்சயமாக நிறைய உண்டு.


சங்க கால பாடல்களிலேயே ராமாயணம் இருக்கும் போது ராமனுக்கு என்றுநிறைய கோவில்கள் இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு முச்சந்தியிலும் பிள்ளையாரும், அம்மனும் இருக்கும் அளவு இவர் பிரபலமாக இல்லை என்று நான்நினைக்கிறேன். உங்கள் ஊரில் உள்ள ராமர் கோயில்களை லிஸ்ட் போடுங்கள்.

12 Comments:

At 6:17 AM, Blogger லக்ஷ்மி said...

கும்பகோணத்தில் ராமசாமி கோவில் உள்ளது. பட்டாபிஷேகக் கோலத்தில் மூலவர் சீதை, லக்ஷ்மணன், அனுமார் புடைசூழ அமர்ந்திருப்பார். மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமர் கோவில் உள்ளது. இது இரண்டும் மிகப் பிரபலமானவை என்பதால் உடனடியாக நினைவுக்கு வருகிறது. இது தவிர்த்து ஆங்காங்கு நிறைய ராமர் கோவில்கள் பார்த்த நினைவுண்டு. நான் வசிக்கும் மடிப்பாக்கம் ராம் நகர் பகுதியிலேயே ஒரு கோதண்டராமர் ஆலயம் உள்ளது.

 
At 6:57 AM, Blogger மாசிலா said...

ஆமாம் ஆமாம், எல்லாத்தையும் நல்லா தேடி கண்டுபிடிச்சி பெரிய லிஸ்டா போட்டு வையிங்க. ஏன்னா இன்னும் கொஞ்சம் நாளுல இது ரொம்பவும் தேவைப்படும், வேலையும் சுலபமா முடிஞ்சுடும் ...

 
At 9:31 AM, Blogger குமரன் (Kumaran) said...

எங்க ஊருல இருக்கிற இராமர் கோவில்னா உடனே நினைவுக்கு வர்றது மதுரை சௌராஷ்ட்ர மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே இருக்கிற கோதண்டராமர் கோவில் தான். பள்ளியில படிக்கிறப்ப நிறைய தடவை போயிருக்கேன். கொஞ்சம் சிந்திச்சா ஒரு பட்டியல் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

மாசிலா சொல்றது போன்ற எண்ணம் ஏதாவது இருக்கிறதோ?

 
At 9:49 AM, Blogger aathirai said...

மாசிலா என்ன ஐடியா வைத்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது.

 
At 10:30 AM, Anonymous Anonymous said...

மாசிலாவைப் போல ஆயிரமாயிரம் பேரைப் பார்த்த மதம் இது....சும்மா இந்த வெத்து-வெட்டுதனத்துக்கெல்லாம் யாரும் பயப்படவேண்டியது இல்லை.

 
At 7:14 PM, Anonymous Anonymous said...

//// மாசிலாவைப் போல ஆயிரமாயிரம் பேரைப் பார்த்த மதம் இது....சும்மா இந்த வெத்து-வெட்டுதனத்துக்கெல்லாம் யாரும் பயப்படவேண்டியது இல்லை./////

இப்படி அனானி காமெண்ட் போட்டவர், இதைப் படிப்பவர்கள் யாரையோ இந்த கமெண்டைப் போட்டிருப்பதாக நினைத்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறார் போலிருக்கிறது.

இந்த கமெண்டிற்கு ஒரு இந்துத்துவவாதியின் பதில் இதோ:

அன்புள்ள அனானி,

நீங்கள் சொல்லுவது உண்மைதான். வேறுவகையில். இந்துமதம் தெளிவான, ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்க மாசிலா போன்றவர்களின் கருத்துக்கள்தான் காரணம். இந்துமதம் மாசிலா போன்றவர்களையும், அவர்களது கருத்துக்களையும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் கேட்டு, பின் கருத்துக்களில் இருக்கும் உண்மையை ஏற்று நடைமுறைப்படுத்துகிறது. அதனால்தான் எந்த பாப்பல் உத்தரவுகளுக்கும், ஃபத்வாக்களும் இல்லாமல் இவை போன்ற முயற்சிகளை உதாசீனம் செய்து வளருகிறது.

மாசிலா, நீங்கள் தொடர்ந்து கேள்வி கேளுங்கள்.

 
At 4:52 AM, Blogger aathirai said...

idhu varai 4 mattume theriyirukiradhu. paaindhu vandhu list podungal.

 
At 6:17 AM, Anonymous Anonymous said...

பழைய மாம்பலத்ல கோதண்டராமர் கோவில் இருக்கு

 
At 3:16 PM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இலங்கையில் இருப்பதாக அறியவில்லை. இராவணன் மண்ணென்பதால் இருக்குமோ?
ஆனால் சிலவீடுகளில் பூசைஅறையில் இராமர் பட்டாபிஷேகப் படம் இருந்தது கண்டுள்ளேன்.

 
At 5:51 AM, Anonymous Anonymous said...

Coimbatore Ram Nagar, there is a temple for Lord Rama

 
At 9:26 AM, Anonymous Anonymous said...

//மாசிலாவைப் போல ஆயிரமாயிரம் பேரைப் பார்த்த மதம் இது....சும்மா இந்த வெத்து-வெட்டுதனத்துக்கெல்லாம் யாரும் பயப்படவேண்டியது இல்லை.//

கோயில்கள் பார்ப்பன நாய்கள் காசு பார்ப்பதற்கு கண்டுபிடித்த வழி...கோயில் வாசலில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கும் கோயிலுக்கு உள்ளே பார்ப்பனர்களுக்கும் வித்தியாசம் இல்லை.

--சங்கராச்சாரி

 
At 1:26 PM, Anonymous Anonymous said...

needamangalam santhana ramaswamy temple

 

Post a Comment

<< Home