ullal

Thursday, June 28, 2007

மூலிகை பயிரிடுபவர்கள் முட்டாள்களா?

நெல்லுக்கு நல்ல விலை வந்தால் விவசாயி அதை பயிரிட மாட்டானா? அவர்கள் அறிவில்லாமலா மூலிகையும்மூங்கிலும் பயிரிடுகிறார்கள் ?
இந்திய மூலிகைகளின் டாலர் மதிப்பு இராக்கில் இருக்கும் ஆயில் மதிப்பை விட அதிகமானது. அத்தனைபில்லியன்கள் மூலிகைகளில் முடங்கி கிடக்கிறது. உண்மையாக சொல்லப் போனால் இந்த மூலிகைகளைபத்திரமாக பாதுகாத்து அழிந்துவிடாமல் வைத்திருந்தவர்கள்பொருளாதாரத்தில் மிகவும் பிந்திய இந்திய பழங்குடிகள்.


பத்து டாலர் கொடுத்து மூலிகையை வாங்கிக்கொண்டு இந்திய விவசாயியை பணக்காரர் ஆக்குகின்றன பன்னாட்டு கம்பெனிகள். விவசாயிகள் பணக்காரர்கள் ஆவது சிலருக்குபிடிக்கவில்லை போலும். பணம் கிடைக்காத நெல்லைவிட்டுவிட்டு மூலிகை பயிரிடுபவன்தானே புத்திசாலி!
அவனை விட புத்திசாலி யார் என்று கேட்டால் பத்து டாலர்கொடுத்து மூலிகையை வாங்கி அதையே மருந்தாக மாற்றிமூலிகை விற்றவனுக்கே மீண்டும் முன்னூறு டாலருக்கு மருந்து விற்கிறானே அவன் இவனை விட அதி புத்திசாலி!

ஏதோ தோன்றியது சொல்லிபுட்டேன்.

சிவாஜி ரசிகர்கள் ஐபோன் ரசிகர்கள் மற்றும் பாரிஸ்ஹில்டன்

சிவாஜி படத்தை ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து பார்த்த கிறுக்கர்களுக்குஎந்த விதத்திலும் குறையாத கிறுக்குகள் அமெரிக்காவிலும் உண்டு.

வெள்ளி மாலை 6 மணிக்கு வரும் ஐபோனுக்கு திங்கள்கிழமையிலிருந்து கட்டுசோறு, தண்ணியுடன் லைனில் காத்திருக்கும் லூசுகள் இங்கே.

http://www.appleinsider.com/articles/07/06/25/insanity_first_iphone_line_forms_in_manhattan_four_days_early.html
சில மாணவர்கள் இந்த கிறுக்குத்தனத்தை வைத்து ஒரு சிறுதொழில் ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த தளத்தில் போய் பாருங்கள். http://iwait.org . இவர்களிடம் சில நூறு டாலர்கள் கொடுத்தால் உங்களுக்காக ஐபோன் லைனில் இடம் பிடித்து வைப்பார்கள்.

2. நம்ம ஊர்லதான் ரஜினி மொட்டை அடித்தார் முடி வளர்த்தார் என்றுமுக்கியமான செய்திகளை போட்டு மீடியா நம்மை கொல்லுது. இங்குபாரிஸ் ஹில்டன் 23 நாள் ஜெயிலுக்கு போய் வந்ததற்கு ஏதோ இராக் போரில் நூறு பயங்கரவாதிகளை கொன்று விட்டு வந்த மாதிரிஒரே மீடியா கூப்பாடு. அந்த அக்காவும் ஜெயில் வீராங்கனை போல ஸ்டைலாக போஸ் கொடுக்கிறார். ரவுசு தாங்கல சாமி.

Friday, June 22, 2007

சும்மா அதுருதுல்லே....



இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நேற்று வெளியான ரஜினி நடித்த, "சிவாஜி' திரைப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் திரண்டனர். திருஷ்டி பூசணிக்காய் உடைத்து, சூடம் ஏற்றி, பால் அபிஷேகம் செய்து அசத்தினர்.

-----------------------------------------------------------------------------------------

காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தோம்! திருச்சி-யில், அரசு உதவி பெறும் சேவா சங்கத்தின் அஞ்சம்மாள் நனைவு தொடக்கப்பள்ளி-யின் தலை மை ஆசி-஛யை விசா-லாட்சி:

எங்க பள்ளி-யில, வறு-மைக் கோட்டுக்குக் கீழ இருக்கிற வீட்டுக் குழந்தை-கள் அதி-கம். ஸ்கூல்ல மதி-யம் போடுற ஒரு-வேளை சத்து-ண-வுக்காக ஏங்கிக் கிடக்கிற பிள்ளை-கள் அ௷நி-கம். அத-னால தான் நி௵ங்க மேற் கொண்டு திட்ட-மிட்டு ஒருங்கி-ணைச்சு, "ச-க-தாய காலை உணவு திட்ட-'த்தைக் கொண்டு வந்தி-ருக்கோம். பள்ளிக்கு விசிட் வரும் கல்வி அதி-கா-஛-க-ளில் சிவக்கு-மார்ங்கிறஆசி-஛-யர் பயிற்சிப் பள்ளி வி஛-வு-ரை-யாளர் ஒரு-வ-ரும் இருக்கி-றார்.
அவர் இதுக்கு ஒரு தீர்வைக் கொண்டு வர-ணும்னு தீவி-ரமா கயற்சி செய்ற-தா-வும் கேள்விப் பட்டோ ம். அவர்கிட்ட பேசி, ஆலோ-சிச்சு இந்தத் திட்டத்தை நிடை-க-றைப்ப-டுத்தி-னோம். பள்ளி கடிந்த-தும் ஆசி-஛-யர்கள் குழு குழு-வாக ஸ்பான்சர் தேடிச் செல்வர். கதல் ரவுண்டு கயற்சி-யாக அ஛சி மண்டிக்கா-ரர்களை சந்தித்துப் பேசி-னர். அவர்க-ளி-டம், "கோ-வில் அன்ன-தா-னத்துக்கு உட்டை உட்டை-யாக அ஛சி கொடுக்கி-றதா கேள்விப்பட்டோ ம். எங்க ளோடதும் கோவில் தான்... அறி-வுக் கோவில். உட்டை தேவை-யில்லை... தினத்துக்கு ஒரு கிலோ போதும்' என்று பாந்த-மாக கோ஛க்கை வைக்க, அதற்கு நில்ல ரெஸ்பான்ஸ். இந்தக் குழந்தைங்க பாவம் தான், ஆனா,
நிம்மளால என்ன செய்ய கடி-யும்ன்னு நனைக்காம, நிம்ம-கிட்ட என்ன இருக்கோ அதை வெச்சு செயல்ல இறங்கினா எதை-யும் சாதிக்க கடி-யும்ங்கிற மிகப் பெ஛ய பாடத்தை ஆசி-஛-யை-களான நி௵ங்க கத்துக்கிட்டோ ம். ஆசி-஛-யர் பயிற்சிப் பள்ளி வி஛-வு-ரை-யாளர் சிவக் குமார்: குழந்தை-க-ளின் படிப்பு, பள்ளி வருகை, கற்றல் & கற்பித் தலை பாதிக்கும் விஷ-யங்கள், இவற்றை-யெல்லாம் ஒவ் வொரு பள்ளி-யா-கச் சென்று ஆய்வு செய்வது என்னு-டைய பணி-க-ளில் ஒன்று. இதில், அரசு பள்ளிக் குழந்தை-க-ளின் படிப்புக்கு சவா-லாக இருப்பது காலை பட்டினி என்பது என் ஆய்வில் தெ஛ய வந்தது. குழந்தை-க-ளுக்கு ஏதா-கி-லும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னைக் குடைந்து கொண்டி-ருந்த போது தான் இந்தப் பள்ளி-யின் ஆசி-஛-யப் பெரு-மக்கள் இப்படி ஒரு எண்ணத்தை கன் வைத்த-னர். விரை-வில் இரவு உண-வை-யும் சமைத்து, டிபன் பாக்சில் போட்டு குழந்தை-க-ளுக்குக் கொடுத்த-னுப்ப கடிவு செய்தி-ருக்கி-றோம்.






நன்றி-தினமலர்

Friday, June 15, 2007

சிவாஜியும் தமிழக போலீசும்

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு செய்திகள்.


சென்னையில் சமீபத்தில் கொலைகள் அதிகமாகிவிட்டன. ஒரு மாதத்தில் நாற்பது கொலைகள் நடந்திருக்கிறது.- நன்றி ஜூ.வி.


சிவாஜி படம் திருட்டி டிவிடியை தடுக்க தமிழகம்முழுதும் 'போலீஸ்' பாதுகாப்பு. சிவாஜி திருட்டு, "விசிடி' விற்பவர்களை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு, வீடியோ தடுப்பு பிரிவு, வடக்கு கடற்கரை போலீசார் என அனைவரும் களமிறங்கியுள்ளனர்.

-நன்றி தினமலர்


அண்ணா நாமம் வாழ்க. திமுகழகம் வாழ்க.

Wednesday, June 13, 2007

அப்துல்கலாம், இல்லீகல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...

லோக்கல் நடிகர்கள் தொடங்கி ஜனாதிபதி தேர்தல் வரை ஊடகங்கள்தங்களுடைய ஆதிக்க கொள்கைகளுக்கு ஏற்ப சில பிம்பங்களை கட்டியெழுப்புவது வழக்கம்.


ஆனா இது கொஞ்சம் ஓவராக தெரியவில்லை? ஜனாதிபதி மாளிகையில்தோட்டம் இவர் இல்லாவிட்டால் வாடி சீரழிந்து போயிடுமாம்? அதனால் இவர்தான்மீண்டும் ஜனாதிபதியா வரணுமாம். நாட்டு மக்கள்(??) இவரைத்தான் ஆதரிக்கிறார்களாம். கலாம் என்ன ஜனாதிபதி மாளிகையின் தோட்டக்காரரா? மதச்சார்பின்மையோடுஇவர்களுக்கு ஜால்ரா அடிப்பதால் கலாமே மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டுமாம்.இவர் ஜனாதிபதியாக இருந்து சாதித்து , கிழித்ததுதான் என்ன? முகல் கார்டனில்இருக்கும் மூலிகை செடியெல்லாம் இவருக்குதான் தெரியுமாம். ரிப்பன்வெட்டுவதைத் தவிர வேறு வேலை இல்லாவிட்டால் செடிக்கு தண்ணி ஊத்திதான் பொழுது போக்கவேண்டும்.


அடுத்தது பிரதமர் வீட்டு ரோஜா தோட்டத்தை பாதுகாக்க வாஜ்பேயே மீண்டும்பிரதமராக வரவேண்டும். போயஸ் தோட்டத்து புல் எல்லாம் பச்சையாக வளர ஜெயாவே முதல்வராக வரவேண்டும் என்று நாட்டு மக்கள்(?) ஆசைப்படுவார்கள்.


ஜெயலலிதாவின் மீது தேர்தல் கமிஷன் வேக வேகமாக ஐந்து ஆண்டு ஆட்சிமுடிந்து இப்போது நடவடிக்கை எடுக்குதாம். தினமும் திமுகவை மைனாரிட்டிகட்சி என்று ஜெயலலிதா அழைப்பது போல இனி திமுகக்காரர்கள் ஜெயலலிதாவைஇல்லீகல் முன்னாள் முதல்வர் என்று அழைக்கலாம்.


இவர் இல்லீகல் முதல்வராக இருந்தபோது செய்தவை சில -

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து சிறையில் தள்ளியது..
வைகோவை பொடாவில் தள்ளியது..
கருணாநிதி, மற்றும் பத்திரிகையாளர்களை சிறையில் தள்ளியது..
இல்லீகலாக மேலும் பல சொத்துக்களை வாங்கி அங்கு இல்லீகலாகவே கட்டடங்கள் கட்டியது..

Monday, June 04, 2007

துக்ளக் கோனார் நோட்ஸ்

துக்ளக் அலுவலகத்தில் ஆள் எடுத்தால் நேர்முகத் தேர்வுக்குதயாரிப்பது எப்படி? கோனார் நோட்ஸ் வினாக்கள் இங்கே.விடைகள் பின்னூட்டத்தில் வரும்.

1. ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டனை பெற்றால், என்னகார்ட்டூன் போடுவாய்?

அ. திமுக வின் விஞ்ஞான ஊழல்
ஆ. சர்க்காரியா கமிசன்
இ. லாலுவின் கார்ட்டூன்
ஈ. போபர்ஸ் கார்ட்டூன்

2. பா.ஜ.க. எம்பி வெளிநாட்டுக்கு ஆள் கடத்தினால் என்ன தலையங்கம் எழுதுவாய்?
அ. இதனால் வெளிநாட்டு உறவு வளரும்.
ஆ. இந்தியாவின் ஜனத்தொகை பிரச்சினைக்கு இது சிறந்த தீர்வு
இ. திமுகக்காரன் அரிசி கடத்துறான்.
ஈ. ரோமன் கிருத்துவ சதி.

3.வேண்டப்பட்ட கட்சிக்காரர்கள் மசூதியை இடித்தால் என்ன கட்டுரை எழுதலாம்?
அ. 500 வருடமாக தொழுகை நடத்தாததால் அது மசூதியே அல்ல.
ஆ. பழைய கட்டடம் முஸ்லிம்களின் தலையில் விழாமலிருக்கபாதுகாப்புக்கு இடித்தார்கள்.
இ.கைதவறி இடித்தார்கள்.
ஈ. கோவில்களை இடித்த முஸ்லிம் மன்னர்கள் பற்றி எழுதலாம்
உ. நாசா சொல்லுது இதுக்கு கீழதான் ராமர் பிறந்தார்.


4.ஆதாம் பாலத்தை யாராவது இடித்தால்...
அ. பல லட்சக்கணக்கான வருடங்கள் பூசை கீசை இல்லாவிட்டாலும், இதுஇந்துக்களின் புனித இடம்.
ஆ. ஏற்கெனவே சிலரை கைது செய்து சுனாமி வந்தது போல பூகம்பம் வரும். இ. நாசாவே சொல்லுது அது ராமர் கட்டிய பாலம்தான்.
ஈ. டி ஆர் பாலுவுக்கு இதை இடிப்பதால் என்ன $$லாபம்?

5. குஜராத்தில் கலவரம் நேர்ந்து 2000 பேர் செத்தால்..
அ. முஸ்லிம்கள் கலவரம் செய்தார்கள்.
ஆ. திகக்காரர்கள் பூணூல் அறுத்தது பற்றி எழுதலாம்.
இ. வாரிசு அரசியல் பற்றி எழுதலாம்.
ஈ. மோடியின் நல்லாட்சியின் பேரை கெடுக்க பாகிஸ்தான் சதி
உ. பருப்பு தேங்கா செய்வது எப்படி?

6. தமிழ்நாட்டில் சாதி கலவரத்தில் நாலு பேர் இறந்துவிட்டால்
அ. சட்டம் ஒழுங்கு குலைந்தது.

ஆ. ஆட்சியை கலைக்க வேண்டும்.
இ. ஜனாதிபதிக்கு பெட்டிசன்
ஈ. வெள்ளை மாளிகைக்கு கடிதம்.
உ. மியூசிக் அகாதமியில் 60+ தாத்தாக்களின் கூட்டம்

7. நம்மாளை கைது செய்தால்..
அ. போலீஸ் விதி முறையை மீறியது .
ஆ. சுப்ரமண்ய சாமியின் பேட்டி
இ. கேசை ஆந்திராவுக்கு மாற்ற வேண்டும். (அங்க நம்ம ஜட்ஜ்)
ஈ. ப்ராசிக்யூசனின் கடமைகள் கட்டுரை எழுதலாம்.

8. நமக்கு பிடிக்காதவர்களை கைது செய்தால் அல்லது வன்முறைசெய்தால்
அ. போலீஸ் சில சமயங்களில் சின்ன விதி மீறல்கள் செய்யும். இதுரொம்ப சின்ன விசயம்.
ஆ. கேசை சிபிஐக்கு மாத்து
இ. கேசை சிபிஐக்கு மாத்தினால், கார்டூன்
ஈ. all of the above


பிகு: துக்ளக்கில் வேலை கிடைக்காவிட்டால் வேறு பல பத்திரிகை வேலைகளுக்கும் இதே கோனார் நோட்ஸ் பயன்படுத்தலாம். ஒரே கல்லில் எத்தனை மாங்கா.?

Friday, June 01, 2007

வாஜி.. வாஜி.. வாஜி



படம் பார்த்து கதை சொல்.




வாங்க உங்க பல் செட்ட தேடி பாப்போம்.



இப்படியே வீட்டுக்கு போனா யாத்ரா பயந்துடுவான்.அவன் தூங்கினப்பறம் போறேன்.. வறுமைக்கோட்டுக்கு கீழ நாங்க கிழிஞ்ச சட்டையோட திரியறோம். உனக்கு பென்ஸ் காரா?