ullal

Friday, April 28, 2006

விஜயகாந்தை நம்பலாமா?

கருணாநிதி மற்றும் ஜெயாவிற்கு வாய்ப்பு கொடுத்து விட்டோ ம். இவர்கள்அடிக்கும் கூத்து தாங்க முடியவில்லை. ஒருவர் குடும்ப அரசியல் செய்கிறார்.பத்திரிகை துறையில் ஆதிக்கம் செய்கிறார். மற்றவர் ஆட்சியில் வேட்பாளர்களேரோட்டில் நடந்து செல்ல துப்பாக்கி போலீஸ் துணை போட வேண்டியிருக்கிறது.அதனால இவருக்கு போட்டு பாத்தா என்ன என்று ஒரு வாதம் வைக்கிறார்கள்.

ஆக தமிழகத்தில் ஓட்டு போடுவது என்பது லாஸ் வேகாஸ் ஸ்லாட் மெசின் போலஆகிவிட்டது. இவருக்கு போட்டுதான் பார்ப்போமே என்று சூதாடும் விஷயாமாக கருதுகிறார்கள்.

விஜயகாந்த் சிலசமயம் ரொம்ப யோசித்து முடிவெடுப்பது போலவும் தெரிகிறது.சில சமயம் தமாசாக ஒவரான அதீதமான கற்பனையில் இருப்பதாகவும் தெரிகிறது. இவருக்கு இருக்கும் ஒரே தகதி இதற்கு முன்பு அராஜகம் செய்யும்வாய்ப்பு இவருக்கு கிடைக்காததே. இந்த ஒரு தகுதியை பார்த்து எப்படி ஓட்டுபோடுவது?

இட ஒதுக்கீடு பிரச்சினை நாட்டையே போட்டு உலுக்கினாலும் கல்லூரி உரிமையாளரான இவர் அது பற்றி பேச மாட்டார். ஜெயலலிதாவை திட்டியே ஆட்சியைப்பிடிக்கும் கருணாநிதியைப் போல மற்ற இரண்டு கட்சிகளையும் திட்டினாலேஆட்சியை பிடிக்கலாம் என்று நம்புகிறார்.

இவருக்கு இருக்கும் ஒரே முதலீடு இவருடைய சினிமா புகழ் மட்டுமே. இப்படிஒரு ஒற்றை முகத்தை மட்டுமே வைத்து எந்த அடிப்படையும் கொள்கையில்லாத கட்சி ஜெயாவின் அதிமுக கட்சி போலதான் இருக்கும். இது போன்ற கட்சிகளில் தலைவர் எப்பொழுதும் ஒன்றாகவும் மற்றவர்கள் பூஜ்யமாக இருப்பார்கள். இன்று ஜெயலலிதாவின் முன்பு மண்டியிடும் வேட்பாளர்களைப் போல இவரைத்தவிர வேறு யாருக்கும் மதிப்பு இருக்காது. இங்கும் குடும்ப அரசியல் கொடிகட்டி பறக்கிறது. இவரை ஒரு பெரிய ஜால்ரா கூட்டம் சுற்றி வரும். என்னுடைய கணிப்பில் இவர் கருப்பு ஜெயலலிதாவாகதான் இருக்க முடியும்.

நடிகர்கள் அரசியலுக்கு வரட்டும். முதலில் நாட்டில் இருக்கும் பொது பிரச்சினைகளை விவாதிக்கட்டும். இவர்களுடைய கருத்துகளை எடுத்து வைக்கட்டும். ஜனநாயக முறையில் முதலில் கட்சியை நடத்திக் காட்டட்டும். இவருடைய கருத்துகள், நடைமுறைகள் தெரியாமல் சும்மா வீராவேசமாக சினிமா ஹீரோவைப் போல வீறாப்பாக பேசுவதும், எந்த பொருளாதார அடிப்படையும் இல்லாது இலவசங்கள் அறிவிப்பதையும் வைத்து நம்பி ஓட்டு போடுவது முட்டாள்தனம் அல்லது ஊதாரித்தனமானபரிசோதனை.

Sunday, April 23, 2006

Tyrant (சர்வாதிகாரி)

சர்வாதிகாரியாக இருப்பவன் தீவீர கடவுள் பக்தனைப் போல வேஷம் போட வேண்டும். அப்பொழுது இவன் பக்கம் கடவுள் இருப்பதாக மக்கள் நம்பி அவன் செய்யும் கொடுமைகளை கண்டுகொள்ள மாட்டார்கள்
- அரிஸ்டாடில்


மறுப்பு-(இதற்கும் ஜெயலலிதாவின் குமுதம் பேட்டியும், விஜயகாந்தின் பைபிள், குரான், கீதை இசவசம் அறீவிப்பும் நியாகபகம் வந்தால் நான் பொறுப்பில்லை.)

Wednesday, April 19, 2006

கனிமொழியின் திருவோடு இலவசமும் கலர் டிவி இலவசமும்


கனிமொழியின் திருவோடு இலவசம் கட்டுரை இங்கே.http://www.thozhi.com/issue8/kanimozhi.htm


திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும்போது இவரை யாரும் ஆலோசனை கேட்பதில்லையா?


இந்த தேர்தல் (2006) அறிக்கைகளை இதை விட காரமாக விமர்சிக்க ( கிழிக்க ) முடியுமா?


அல்லது, அரசியல் வேறு பிசினஸ் வேறு என்று கருணாநிதிசொல்வது போல
அரசியல் வேறு இலக்கியம் வேறா ?

டாக்டர் மகன் டாக்டராவது

டாக்டர் மகன் டாக்டராவதால் யாரும் பாதிக்கப்படுவதில்லை. ஆள்பவர்களுக்குஇந்த வாதம் பொருந்தாது.

சென்ற பதிவில் (http://ullal.blogspot.com/2006/04/blog-post_18.html)நான் திமுகவைப் பற்றி மட்டுமே எழுதியுள்ளேன் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நான் காங்கிரஸ் கட்சியையும் அந்த பதிவில்குறிப்பிட்டுள்ளேன்.

ஸ்டாலின் தியாகம் செய்துதான் இந்த நிலைக்கு வந்ததாக ஒருவர் எழுதியுள்ளார்.
நான் ஸ்டாலின் மட்டுமல்ல கருணாநிதியும் கூட மீண்டும் முதலமைச்சராகவரக்கூடாது என்று சொல்கிறேன்.

இவர்களைப் பற்றி எழுதிவிட்டு அதிமுகவைப் பற்றி எழுதாமல் விடமுடியாது.மீண்டும் மீண்டும் ஜெயலலிதாவே முதலமைச்சராவதால், உடன் பிறவா தோழியின்குடும்பம் செய்யும் அட்டகாச அராஜகங்களை பார்க்கிறோம்தானே.

இது கருணாநிதி அல்லது ஜெயலலிதாவின் தனிப்பட்ட குணாதிசய பிரச்சினை அல்ல.இந்த அமைப்பே தவறாக இருப்பதால்தான் இவர்கள் இப்படி இருக்கிறார்கள். இவர்கள்இடத்தில் வேறு யார் வந்தாலும் இப்படி செய்யக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.

அன்புமணி இப்பொழுதுதான் அவர் குடும்பத்தில் முதன்முறையாக அமைச்சராக இருப்பதால் அவர்இன்னும் இந்த லிஸ்டில் வரவில்லை.
இதே லாஜிக்கை நீட்டித்தால் தேர்தல் வைத்து வேட்பாளரை தேர்ந்தெடுக்காத அத்தனை கட்சிகளையும் disqualify செய்ய வேண்டும். நேற்று ஆரம்பித்த புதிய ஊழலை ஒழிக்கும் கட்சியில் கூட வேட்பாளரை தலைவர்தான் அப்பாயின் ட் செய்கிறார்.இவர் ஆட்சி அமைத்தால் அது எப்படி இருக்கும் என்று அறிய ரொம்ப கஷ்டப்படதேவையில்லை. கட்சியிலேயே ஜனநாயகம் இல்லாதபோது இவர்கள் ஆட்சியும்அப்படிதானே இருக்கும்.

இன்னும் இதே வாதத்தில் அமைச்சர்களுக்கு மீடியாவில் ஷேர் இருக்கக்கூடாது என்று கூட சொல்லலாம்.

Tuesday, April 18, 2006

குடும்ப அரசியல் என்பது கட்சிகளின் சொந்த பிரச்சினையா?

விகடன் பேட்டியில் தயாநில்தி மாறன் வாரிசு அரசியல் எங்க கட்சிக்காரர்களின்உள்வட்ட பிரச்சினை. இதைப் பற்றி மற்றவர்கள் பேச வேண்டியதில்லை என்ற ரீதியில் பேசியிருக்கிறார்.


கருணாநிதி குமாரமங்கல(ங்கள்) பரம்பரையாக அமைச்சர்களாக இருப்பதைசுட்டி காட்டுகிறார். நேரு குடும்பத்தை ஏனோ மறந்துவிட்டார்.
ஒருவர் மீண்டு மீண்டும் ஒரே பதவியில் அமருவதால் அதிகாரம் ஒரே இடத்தில் குவிவதற்கு வழிவகுப்பதால்தான் அமெரிக்காவில் ஒருவர் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதியாக கூடாது என்று சட்டம் வைத்திருக்கிறார்கள்.

கருணாநிதி நான்கு முறைக்கு மேல் முதலமைச்சராக வருவதை தடுக்க இந்திய அரசியல் சட்டத்தில்வழி இல்ல. என்னைக் கேட்டால் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சாதாரண அமைச்சராகக் கூட இருக்கக்கூடாது என்று சொல்வேன். அப்பொழுதுதான் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். காங்கிரஸ் கட்சியில் பார்த்தால் எல்லாம்பரம்பரை பரம்பரையாக ஆட்சியில் இருப்பவர்களாக இருக்கிறார்கள்.


அரசியல் சட்டத்தை மாற்ற எந்த கட்சியும் முன் வராது. இதை மாற்றுவதற்கு petition வழிமுறை ஏதாவது இருக்கிறதா? இத்தனை கையொப்பம் இருந்தால் அரசியல் சட்ட மாற்றல் மசோதா கொண்டு வரும் வழிமுறை ஏதேனும் உள்ளதா?

Friday, April 14, 2006

சிவப்பு எம்ஜிஆரும் இதர எம்ஜிஆர்களும்

நிறைய பேருக்கு தாங்கள் எம்ஜிஆர் போல முதலமைச்சர் ஆக வேண்டுமென்ற கனவு இருக்கிறது.

அரசியலில் எம்ஜிஆரும், மற்றவர்களும் உழைத்த வருடக்கணக்கு எல்லாம் இருக்கட்டும்.நடிப்பிலாவது இவர்கள் எம்ஜிஆர் ஏற்ற பாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கின்றனரா ?

சிவப்பு எம்ஜிஆர் நடித்த படங்கள் உரிமைக்குரல், உழைக்கும் கரங்கள், படகோட்டி,மீனவ நண்பன், ரிக்ஷாக்காரன், அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், மலைக்கள்ளன்,மதுரை வீரன்.

கறுப்பு எம்ஜி ஆர் நடித்த படங்கள் சின்ன கவுண்டர், தவசி, ரமணா, சிம்மாசனம்.

Failed எம்ஜிஆர் நடித்த படங்கள் (திரு)அண்ணாமலை, அருணாசலம், (ஆறு)படையப்பா,பாபா


எம்ஜிஆர் எப்பொழுதும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக நடிப்பவர். இவர் படங்களில் நம்பியார் பண்ணையார் போல ந்டிப்பார். இப்பொழுதெல்லாம் ஹீரோக்களே பண்ணையாராக நடிக்கிறார்கள்.

Thursday, April 06, 2006

அரசியல்வாதி ஆக வேண்டுமா?

முதலில் சூடு, சொரணை இரண்டும் சுத்தமாக இருக்கக்கூடாது. இது அடிப்படை தகுதி. இது இருந்தால் மேலே படிக்கலாம்.

1. இன்று எதையோ குளிப்பாட்டி எங்கயோ வெச்ச மாதிரி என்று வசனம் பேச வேண்டி வரும். நாளையே அண்ணா தம்பி என்று கண்ணீர் விடலாம்.
தினமும் கண்ணாடி முன் நின்று :) :( இப்படி மாறி மாறி முகபாவங்கள்
பயிற்சி செய்யவும்.

2. தினமும் முச்சந்தி பிள்ளையார் கோயிலில் 50 முறை தோப்புக்கரணம்,செய்து பயிற்சி செய்ய வேண்டும்.

3. சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு சென்று சாச்டாங்கமாக விழுந்துசேவித்து பழகவும்.

4.சந்திரபாபு, லூஸ் மோஹன் படங்களைப் பார்த்து தூய சென்னை செந்தமிழ் பேச கற்கலாம். கொஞ்சம் திறமை உள்ளவர்களுக்கு கொங்குதேர் வாழ்க்கை மாதிரி சிவாஜி பட வசனங்கள்.

5.கோஷ்டி சண்டை போடுவதற்கு யாராவது ஒரு குஸ்தி பயில்வான் பள்ளியில்சேர்ந்து பயிற்சி செய்யலாம்.

6. ஒரு பெரிய ட் ரம்மில் தார் வாங்கி வந்து வீட்டில் சுவத்துக்கு தார் பூசி பழக வேண்டும். மாதம் ஒரு முறை செய்தால் போதும்.

7. வாரம் ஒரு முறையாவது அலுமினிய தட்டில் களி சாப்பிட்டு, வாலிபால் விளையாடி பயிற்சி செய்ய வேண்டும்

8.ஏதாவது ஒரு நாட்டுக்கு விசா எடுத்து வைக்கவும். கட்சித் தலைவரின் கோபத்துக்குஆளாகும்போது ஒளிந்துக்கொள்ள வசதியாக இருக்கும்.

9. திருமணம் செய்யும்போது மனைவிக்கு அவசியம் ஒரு தம்பியாவதுஇருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுங்கள்.

10. உங்கள் ஊரில் உள்ள நூலகம், பழைய புத்தக கடைக்கு சென்று குட்டிகதைகள் சேகரிக்கவும். அதை சிசுவேஷன்க்கு ஏற்ப உடனடியாக தேடுவதற்குவசதியாக இது போன்ற தலைப்புகளில் அட்டவணப்படுத்தவும்(index?).துரோகம், நன்றி , பிரிவு , பிரிவிற்கு பின் சேர்தல் இப்படி

11. தமிழ் பழமொழிகள் புத்தகம் வாங்கி வைக்கவும்.

12. கலர் துண்டு ஒரு டஜன் வெவேறு கலர்களில் வாங்கவும். கட்சி மாறும்போதுவசதியாக இருக்கும்.

13. வீட்டில் தாயார் இருந்தால் டிக்கெட் எடுத்து ஊருக்கு அனுப்பவும்.

14. எப்பாடுபட்டாவது இரண்டு வீடுகள் வாங்கி விடுங்கள்.

15. தினமும் பகலுணவுக்குப் பின் கோலி சோடா குடிக்கவும். குடித்துமுடித்த பின் தூக்கி வீசி அடிக்க பழகவும்.